{"title":"சிக்ஸ்த்சென்ஸ்","description":null,"products":[{"product_id":"travel-history-part-2","title":"பயண சரித்திரம் (பாகம் 2)","description":"\u003cp\u003eபதினைந்தாம் நூற்றாண்டில் பெரும்பாலான ஐரோப்பியர்களின் ஆசையும் ஏக்கமும் இதுவாகத்தான் இருந்தது. போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றியின் வாழ்நாள் லட்சியமாக இது மட்டுமே இருந்தது. அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் நிகழ்ந்த காலனியாதிக்கக் கோரத்தாண்டவத்துக்கான விதை ஹென்றி போட்டது அவர் ஏற்பாடு செய்த பயணங்களால் நிகழ்ந்தது. லிஸ்பனிலிருந்து எண்ணற்றக் கப்பல்கள் அச்சத்தையும் தயக்கத்தையும் உடைத்துக் கிளம்பின. ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரையில் அந்தக் கப்பல்கள் முன்னேற முன்னேற போர்ச்சுகலின் பொருளாதாரமும்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826939715947,"sku":"BK4220","price":532.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/travel-history-part-2.jpg?v=1788931921"},{"product_id":"aagaayaththil-boogambam","title":"ஆகாயத்தில் பூகம்பம்","description":"\u003cp\u003eபட்டுகோட்டை பிரபாகர் ஃப்ளைட் ஹைஜாக்கை மையமாகக் கொண்டு குமுதம் வார இதழில் இந்த கதையைத் தொடராக எழுதி வந்தார். ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள், இவர்களது வாழ்க்கைக் கனவுகள், இலட்சியம், அடிப்படை சித்தாந்தம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு தொடங்கி சர்வதேச அரசியல்வரை உள்ள நடப்பு நிகழ்வுகள் எல்லாம் இடம் பெரும் ஒரு வலைபின்னலாகக் கதையை அமைத்து பிரமிக்க வைக்கிறார். 44 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலை ஓவியர் ஷ்யாமின் படங்களுடன் அதிகபட்சம் 100 காட்சிகள் கொண்ட ஒரு கையடக்கத் திரைப்படமாகவே பாவிக்கத் தோன்றுகிறது.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826940830059,"sku":"BK4222","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aagaayaththil-boogambam.jpg?v=1788931437"},{"product_id":"aalapiranthavargal-neengal","title":"ஆளப்பிறந்தவர் நீங்கள்","description":"\u003cp\u003eஆளப்பிறந்தவர் நீங்கள் தலைவர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாகிறார்களா? அவர்களை உருவாக்குவது யார்? எல்லோராலும் தலைவராக ஆக முடியுமா? தலைவர் ஆவதற்கு தேவையான பண்புகள் என்ன? அவற்றை முயன்று வளர்த்துக்கொள்ள முடியுமா? தலைவர்களின் பல்வேறுபட்ட வழிமுறைகள் என்ன? அவர்களது எப்படிப்பட்ட செயல்பாடுகள் வெற்றி கொடுக்கின்றன? ஒரு தலைமை எதனால் தோற்கிறது? வெற்றி பெற, தலைவனின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? தலைவர்கள் யாரைக் கலந்து செயல்படுகிறார்கள்? அவர்களின் சீடர்கள் யார்? அரசியலில் இருப்பவர்கள், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள், தொழில் வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, லீடர்ஷிப் என்று அழைக்கப்படும் அதிமுக்கியமான விஷயம் பற்றிய அத்தனை விபரங்களையும் ஒன்றுவிடாமல் அள்ளித் தருகிறது இந்தப் புத்தகம். யூகங்களின் அடைப்படியில் இல்லாமல், உலக அளவில் லீடர்ஷிப் பற்றி நடந்துள்ள ஆராய்சிகளையும், வெற்றி பெற்ற தலைவர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் புனைகதைக்கு ஒப்பாக சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கிறார், சோம வள்ளியப்பன். அள்ள அள்ள பணம், காலம் உங்கள் காலடியில், இட்லியாக இருங்கள், உஷார் உள்ளே பார், சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?, மோட்டிவேஷன்– தள்ளு, உலகம் உன் வசம் போன்ற சூப்பர் ஹிட் வெற்றி நூல்களின் ஆசிரியரான சோம வள்ளியப்பனின் லீடர்ஷிப் பற்றிய இந்தப் புத்தகம் சந்தேகம் இல்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது. மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும் போதெல்லாம் மாலைகள் விழுவதற்கு வழி செய்யப்போகிறது. This is a static CMS block displayed if category is empty. You can put your own content here.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826940862827,"sku":"BK4223","price":222.4,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalapiranthavargal-neengal.jpg?v=1788931437"},{"product_id":"aangal","title":"ஆண்கள்","description":"\u003cp\u003eஒரு ஆணுக்கு தனது வாழ்க்கையின் ஏதாவது ஒரு பருவத்தில், தன் வாழ்க்கையை நிறுத்தி வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்,, தன் இளமைக் காலத்தில்தான் நிறுத்தி வைத்துக்கொள்வான். இளமைக் காலம்... ஆண்களின் மகத்தான கொண்டாட்டக் காலம். ஒரு முடிவே இல்லாத இனிய கனவு போல் நீண்டுகொண்டிருந்த நமது இளமைக்காலம், எவ்வளவு வேகமாக கலைந்துவிடுகிறது? எவ’வளவு வேகமாக நமது இளமையின் ஈரச்சிறகுகள் உதிர்ந்துவிடுகிறது? கண்களில் நீர் வர நண்பர்களுடன் சிரித்த அந்த டீக்கடை பெஞ்சுகளை யார் தூக்கிக்கொண்டு போனார்கள்? ஒரே ஒரு பெண்ணின், ஒரு வினாடி பார்வைக்காக நாள் முழுக்க நின்றுகொண்டிருந்த பேருந்து நிறுத்தங்களை யார் இடித்தார்கள்? ரயில் நிலையத்தில் குமுறி, குமுறி அழுதுகொண்டே பிரிந்த கல்லூரி நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? யாரோ ஒரு இளம் பெண்ணின் தலையிலிருந்து விழுந்த ரோஜாப்பூவை எடுத்துக் கொடுத்தபோது புன்னகைத்த அல்லது முறைத்த தேவதை இப்போது எத்தனை தேவதைகளுக்கு தாய்? கடைசி வரையிலும் கண்களால் மட்டுமே பேசிவிட்டு காணாமல் போன இளம் பெண்கள், இப்போதும் ஆண்களின் கவிதைகளில் வாழ்ந்துகொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியுமா? குரூப் ஸ்டடி என்று குரூப்பாக கெட்டுத் திரிந்த இரவுகள் ஏன் விடிந்தது? தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண் பெயருக்கும் ஒரு சீசன் இருக்கிறது. எனது இளமைக்காலம் காயத்ரிகளால் நிரம்பி வழிந்தது. ஒரு திருமண வீட்டில் நீங்கள் காயத்ரி என்று சத்தமாக அழைத்தால் பத்து காயத்ரிகள் வந்து நிற்பார்கள். 1990களில் நீங்கள் கோயிலுக்குச் சென்றால் வாசலில் பூ விற்கும் காயத்ரியை பார்த்துக் கொண்டே அர்ச்சனைக் கூடையுடன் வரும் காயத்ரியின்மீது மோதி, நே விளக்குடன் வரும் காயத்ரி மேல் விழுந்து கோயிலில் இருக்கும் அத்தனை காயத்ரிகளும் ஏண்டா உனக்கு கண்ணில்லையா? என்பார்கள்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826940895595,"sku":"BK4224","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aangal.jpg?v=1788931437"},{"product_id":"aanmeega-sandwich","title":"ஆன்மிக சாண்ட்விச்","description":"\u003cp\u003eஆன்மிக சாண்ட்விச் சாண்ட்விச்சிற்குள் வைக்கப்படும் பலவித உணவுப் பொருட்களால் பலவித ஆற்றல்கள் நமக்கு கிடைப்பது போல் இத்தொகுப்பில் பலக்கட்டுரைகள் உங்கள் எண்ணத்திற்கு வலிமை சேர்கின்றன.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826940928363,"sku":"BK4225","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanmeega-sandwich.jpg?v=1788931436"},{"product_id":"aanmeega-sandwitch","title":"ஆன்மீக சான்ட்விச்","description":"\u003cp\u003eகாலத்திற்கேற்ப, படிப்பவர்களின் கேட்பவர்களின் ரசனைக்கேற்ப அவர்களுக்கு எளிதில் புரியும் வார்த்தைகளில், ஏற்கும் நடையில்.. சொல்லப்படாமல் இருக்கிறது. இப்போது வெளிவரும் ஆன்மிக புராணக் கதைகள். அவற்றிலுள்ள நடைமுறை நிகழ்வுகளை, சந்தேகங்களுக்கான விடைகளை, செயல்களுக்கான காரணங்களை, இறை வடிவத்திற்கான விளக்கங்களை ரொட்டி, பன், பிரட்டுக்குள் ருசிக்காக நுழைத்து சாண்ட்விச் ரூபத்தில் தரும் முயற்சிதான் இந்தப் புத்தகம். சாண்ட்விச்சிற்குள் வைக்கப்படும் பலவித உணவுப்பொருட்களால் பலவித ஆற்றல்கள் உடலுக்குக் கிடைப்பதைப் போல, இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பலவிதமான கட்டுரைகள் உங்களின் ஆன்மிக எண்ணத்திற்கு வலிமையை, ஒரு தெளிவைத் தருவதோடு, தொடர் தேடலுக்கு உங்களை அழைத்துச் செல்லும் ஆன்மீக பயணம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826940961131,"sku":"BK4226","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanmeega-sandwitch.jpg?v=1788931437"},{"product_id":"aarokiya-unavu","title":"ஆரோக்கிய உணவு","description":"","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826940993899,"sku":"BK4227","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aarokiya-unavu.jpg?v=1788931438"},{"product_id":"aasai-kavithaigal","title":"ஆசைக் கவிதைகள்","description":"\u003cp\u003eசும்மாத்தான் பாருமய்யா! ஈழத்தின் நாட்டுப்புறத்தில் கன்னி ஒருத்தி குளத்தில் தண்ணீர் அள்ள வருவாள். அவள் வரும் வழியில் இருந்த வீட்டில் வாழ்ந்த ஓர் இளைஞனைக் காதலித்தாள். ஆனால் அவன் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காலங்கள் உருண்டன. அவனிடம் தன் எண்ணத்தைச் சொல்ல நினைத்தாள். அதற்கான நேரமும் அவளுக்குக் கிட்டியது. அப்போது பெண்: கழுத்தைத் திருப்பிக் கொண்டு கதையாமல் போறவரே சுழுக்கெடுக்க நான் வரட்டா சும்மாத்தான் பாருமய்யா - நாட்டுப்பாடல் (ஈழம்) - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) என்று சொன்னாள். ஆனால் அவளது மன எண்ணத்தைச் சொல்லவிடாது நாணம் தடுத்தது. இப்படிக் கேட்டதற்கே அவன் என்ன நினைப்பானோ என திகைத்து நின்றாள்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941026667,"sku":"BK4228","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aasai-kavithaigal.jpg?v=1788931436"},{"product_id":"adhiga-mathipen-pera-ariviyal-vina-vidaigal","title":"அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினா-விடைகள்","description":"\u003cp\u003eஅதிக மதிப்பெண் பெற அறிவியல் வினா-விடைகள்\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941059435,"sku":"BK4229","price":132.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adhiga-mathipen-pera-ariviyal-vina-vidaigal.jpg?v=1788931438"},{"product_id":"adhey-vinadi","title":"அதே வினாடி","description":"\u003cp\u003eஅதே வினாடி ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு. தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்’றால் அது இந்த நூலில்தான். ஆமாம். நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும். இந்த நூலைப் படித்துமுடித்த அதே விநாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும். படித்துப் பாருங்கள்\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941092203,"sku":"BK4230","price":266.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adhey-vinadi.jpg?v=1788931437"},{"product_id":"adhu-mattum-ragasiyam","title":"அது மட்டும் இரகசியம்","description":"\u003cp\u003eபட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய 'தொட்டால் தொடரும்' 'கனவுகள் இலவசம்' ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்து வரும் பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று “அது மட்டும் ரகசியம்” “அது மட்டும் ரகசியம்” ஒரு “SEAT EDGE THRILLER” அனிதா ஒரு திரைப்படப் பின்னணி பாடகி. அழகான குரல், பண்பான கணவன், நிறைவான செல்வம் இப்படி ஒரு குறையும் இல்லாத வாழ்க்கையில் ஒரு சம்பவம் அவளின் வாழ்க்கையை தலை கீழாக மாற்றுகிறது… அது என்னவென்றால் அது மட்டும் ரகசியம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941124971,"sku":"BK4231","price":115.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adhu-mattum-ragasiyam.jpg?v=1788931436"},{"product_id":"akilam-vendra-atila","title":"அகிலம் வென்ற அட்டிலா","description":"\u003cp\u003eஅகிலம் வென்ற அட்டிலா அட்டிலா உண்மையாக வாழ்ந்தவன். உலகத்தையே வென்றவன். அசைத்துக் கொள்ள முடியாதது என்று இறுமாந்திருந்த உரோமானியப் பேரரசை வீழ்த்தியவன். பரம்பரை, பாரம்பரியம், செல்வாக்கு, வசதி, வாய்ப்புகள் என்று உறுதிமிக்க அடித்தளம் கொண்ட ஆட்சியாளர்களை இந்த நாடோடி வென்று காட்டினான். இவனது இனம் ஓரிடத்தில் நில்லாமல் ஊர் ஊராய்ப் போய்க் கொண்டிருந்தது ஒரு காலத்தில். அப்படிப்பட்ட இவர்கள் எப்படி உரோமப் பேரரசை வீழ்த்த முடியும் என்கிற சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல அட்டிலாவின் இனத்தவர்களுக்கே ஏற்பட்டது. எல்லாம் உன்னால் முடியும் தம்பி என்று ஊக்கம் கொடுத்துத் தன் எண்ணத்தை ஈடேற்றியவன் அட்டிலா.ஆறாவது வட்டத்திற்குத் துணைத் தலைவர் என்றாலே ஆளுயர மாலை கேட்கும் நம் ஆட்கள் மத்தியில் அகண்ட தேசத்தை ஆண்டவனாக இருந்தபோதிலும் மர வட்டிலிலேயே உணவருந்திய எளிமைக்குச் சொந்தக்காரன். தலைமுறை தலைமுறைக்கும் சொத்துச் சேர்க்க நினைப்பவர்கள் மத்தியில் தனது தலைக்கே விலையாகப் பேசப்பட்ட பொன்னைக்கூடத் தானே கைப்பற்றி அதை முற்றிலுமாகத் தன் இன நலனுக்கே செலவிட்டான் இவன். வரலாற்றுக்கும் தெரிந்தவரையில் வரலாற்றுக் கால ஆய்வின்படி உலகின் மிகப் பெரிய படை வரிசைகளில் இரண்டாவதுதான் பெரிய படைக்குத் தலைமை தாங்கியவன் அட்டிலா. அவன் இப்போது உயிரோடு இருந்திருந்தால் உங்களை எப்படி ஊக்கப்படுத்தி இருப்பான் என்று யோசித்தோம். விளைவு? இப்போது இந்தப் புத்தகம் உங்கள் கைகளில்...\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941157739,"sku":"BK4233","price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/akilam-vendra-atila.jpg?v=1788931439"},{"product_id":"anandham-tharum-aarumugan-valipadu","title":"ஆனந்தம் தரும் ஆறுமுகன் வழிபாடு","description":"\u003cp\u003eஆனந்தம் தரும் ஆறுமுகன் வழிப்பாடு ஆனந்தம் தரும் ஆறுமுகம் முருகனின் ஆறுபடை வீடுகள், கோவில்களின் சிறப்பு, மற்றும் மந்திரங்களும், விரதங்கள், விரதங்களின் மகிமைகள் போன்றவை இந்நூலில் இடம் பெற்றுள்ளது.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941190507,"sku":"BK4234","price":26.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/anandham-tharum-aarumugan-valipadu.jpg?v=1788931920"},{"product_id":"anjukari-soru","title":"அஞ்சுகறி சோறு","description":"","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941223275,"sku":"BK4235","price":177.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/anjukari-soru.jpg?v=1788931438"},{"product_id":"annai-therasa-sixth-sense-publications","title":"அன்னை தெரசா","description":"\u003cp\u003eஏழைகள் நிலவில் இருந்தால் அங்கும் சென்று அவர்களுக்குச் சேவை செய்யத் தயார் என்று சொன்னவர் அன்னை தெரசா. அதற்காகவே வாழ்வின் வசந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்காக உழைக்கத் தயாரானவர். உலக மக்கள் சந்திக்கும் துன்பங்களையும் துயரங்களையும் போக்குவதற்கு தெரசா முற்பட்டபோது அவருக்குத் துணையாக வந்த நண்பர்கள் ஐவர்: அன்பு, அகிம்சை, கருணை, எளிமை, பக்தி. தெரசா மேற்கொண்ட சேவைப் பயணம் என்பது சுகமான ராஜபாட்டை அல்ல. கடுமையான முள்வழிப் பாதை. அந்தப் பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அநேகம். துயரங்கள் அதிகம். அவற்றை எல்லாம் தாண்டித்தான் பிரம்மாண்டமான மிஷனரியைக் கட்டமைத்தார். அதைவிட முக்கியமாக, ஏழை மக்களின் மனத்தில் பிரம்மாண்டமாக உயர்ந்தார். உயரங்களுக்குச் செல்லும் எவருமே விமரிசனத்துக்குத் தப்புவதில்லை, தெரசா உள்பட. சேவை என்ற பெயரில் கிறித்தவ மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்பது தெரசாவின் மீது சுமத்தப்பட்ட ஆகப்பெரிய குற்றச்சாட்டு. தெரசா உயிருடன் இருந்த காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் விமரிசனம் இது. அன்னை தெரசாவின் ஆன்மிக, மானுட சேவையின் ஒவ்வொரு அங்குலத்தையும் விரிவாக எடுத்துச் செல்லும் நூலாசிரியர் பா. தீனதயாளன், தெரசாவின் மீது எழுப்பப்பட்ட சர்ச்சைகள் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941321579,"sku":"BK4236","price":159.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/annai-therasa-sixth-sense-publications.jpg?v=1788931436"},{"product_id":"arinthum-ariyaamalum-sixth-sense-publications","title":"அறிந்தும் அறியாமலும்","description":"\u003cp\u003eநம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை, கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன. 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம்! அதே நேரம், , இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது? அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை, சமூகப் பார்வை கொண்டதாகவும் இருக்கிறதா? சிலவற்றை அறிந்தும், சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன், என்ன காரணம்? விடை தேடுகிறது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941354347,"sku":"BK4238","price":221.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/arinthum-ariyaamalum-sixth-sense-publications.jpg?v=1788931437"},{"product_id":"aringargal-vazhvil-nagaichuvai","title":"அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை","description":"\u003cp\u003eஅறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை “இதற்கு இரண்டு துவாரங்கள் தேவை இல்லையே? பெரிய துவாரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்துவிடலாமே” என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி திடுக்கிட்டார். “ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு இந்த யோசனையே தோன்றவில்லையே” என்றவர் சிறிய துவாரத்தை அடைக்கச் சொன்னார்.“அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கிறீர்களே அது எதற்கு” என்று நியூட்டனிடம் கேட்டார் அவர். அதற்கு விஞ்ஞானி சொன்னார்: “நான் சிறியதும், பெரியதுமான இரண்டு பூனைகள் வளர்க்கிறேன். நான் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டால் பெரிய துவாரம் வழியாகப் பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாகச் சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்” என்று.இவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் வட்டமாகப் பெரியதும் சிறியதுமான இரண்டு துவாரங்கள் இருந்ததைப் பார்த்தார்.அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன்தான் பூமிக்குப் புவிஈர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர். அதற்காக நோபல் பரிசு பெற்றவர்\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941649259,"sku":"BK4239","price":44.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aringargal-vazhvil-nagaichuvai.jpg?v=1788931436"},{"product_id":"arjunan-ambu","title":"அர்ஜுனன் அம்பு","description":"\u003cp\u003e\"இந்த காலத்து அர்ஜுனர்கள் திரோனர்களுக்கே பாடம் சொல்லித் தருபவர்களாக இருக்கிறார்கள். அதனால்த்தான் மில்டன் போன்றதொரு கடமை தவராத காவல் அதிகாரி தன் பதவி காலத்தில் செய்ய முடியாததை அவரை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கும் அர்ஜுனால் சின்ன வயதிலேயே செய்ய முடிகிறது.இந்த காலத்து மதுமிதாக்களும் முன்போல் இனிமையாக பேசுவதைத் தவிர வேறு எதுவுமே தெரியாத வெகுளிகளாக, அழகுப் பதுமைகளாக இல்லை. அவர்கள் அர்ஜுன்களுக்கு இணையாக சிந்திக்கிறார்கள். பல நேரங்களில் அவர்களைவிட கூர்மையான முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த ஆற்றலை இவர்களுக்குள் புகுத்தியவர் யார்? வேறு யாரும் இல்லை. சதா சர்வ நேரமும் வெகுஜனத்தின் போக்கை கவனித்துக்கொண்டே இருக்கும் பிகேபி போன்ற எழுத்தாளர்கள்தான். பட்டுக் கோட்டை பிரபாகரின் ‘அர்ஜுனன் அம்பு’ குமுதம் சிநேகிதியில் தொடராக வெளிவந்தபோதே பல இதயங்களைத் தைத்தது. இப்போது புத்தக வடிவில் உங்களை நோக்கி.\"\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941747563,"sku":"BK4240","price":84.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/arjunan-ambu.jpg?v=1788931437"},{"product_id":"athiga-mathippen-pera-ariviyal-vinaakkal-vidaigal","title":"அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் - விடைகள்","description":"\u003cp\u003eபள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும், போட்டித் தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் (இரயில்வே, ஆசிரியர் தேர்வு பி.எட்.,) பயன்படுத்தும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941780331,"sku":"BK4241","price":132.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/athiga-mathippen-pera-ariviyal-vinaakkal-vidaigal.jpg?v=1788931436"},{"product_id":"bautham-ariya-dravida-porin-thodakkam","title":"பவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்","description":"\u003cp\u003eபவுத்தம்:ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம் மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்! - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இந்தியச் சமய வரலாற்றில் பவுத்தம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனையை நூலாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். பவுத்தம் என்பதை பொதுமைப்படுத்திப் பார்க்காமல் அதில் உருவான பிரிவுகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் புத்தரின் மூல உபதேசங்களை அறிய விரும்புகிற எவரும், அந்தப் பெரு நெருப்பை மூடி மறைக்கப் போடப்பட்ட துணிகளைக் காண விரும்புகிற எவரும் இந்த நூலை அவசியம் படித்தாக வேண்டும். அருவிபோல நேரடியாக மனசுக்குள் இறங்கும் சரசர நடையில் இதை ஆசிரியர் ஏழுதி இருக்கிறார். - பேராசிரியர் அருணன்\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941813099,"sku":"BK4242","price":177.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bautham-ariya-dravida-porin-thodakkam.jpg?v=1788931438"},{"product_id":"bhagat-singh-samarasamatra-poraaliyin-saagasa-varalaaru","title":"பகத்சிங் - சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு","description":"\u003cp\u003eபிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரிய லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக் கொண்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டம் சுதந்தரப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தியது என்றால், பகத் சிங்கின் வீரமும் தியாகமும் பல இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் துடிதுடிப்பான அத்தியாயங்களுள் ஒன்று, பகத் சிங்கின் வாழ்க்கை!\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941845867,"sku":"BK4243","price":239.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bhagat-singh-samarasamatra-poraaliyin-saagasa-varalaaru.jpg?v=1788931437"},{"product_id":"bhagavat-gita","title":"பகவத் கீதை","description":"\u003cp\u003eபகவத் கீதை வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற் கருத்து.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941878635,"sku":"BK4244","price":159.2,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bhagavat-gita.jpg?v=1788931439"},{"product_id":"bharathiyarin-bhagawad-geedhai","title":"பாரதியாரின் பகவத்கீதை","description":"\u003cp\u003eமனிதன் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறான். பேரின்பத்தை அனுபவிக்க விரும்புகிறான். அதற்கான வழி என்ன என்றும் சொல்லித் தருகிறது கீதை. எல்லாவற்றிற்கும் மேலாகப் பூவுலகவாசிகள் அனைவரும் மேம்படுவதற்கான அனைத்து வழிகளையும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டுமென்பதுதான் கீதை படைக்கப்பட்டதற்கான நோக்கமே.மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போதிக்கிறது கீதை. உலகப் பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். மனச்சோர்வு, கவலை, கலக்கம், பயம், சந்தேகம் இவற்றிற்கு மனதில் இடங்கொடாதிருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசிக்கிறது கீதை.வேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத் கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941911403,"sku":"BK4245","price":159.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathiyarin-bhagawad-geedhai.jpg?v=1788931436"},{"product_id":"birbal-arivu-kathaigal","title":"பீர்பால் அறிவுக் கதைகள்","description":"\u003cp\u003eபீர்பால் அறிவுக் கதைகள் பீர்பால் அறிவுக்கதைகள் படிப்போரின் சிந்தனையை துண்டும் வகையில் சிறபபாக அமைக்கப்பட்டுள்ளது\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941976939,"sku":"BK4246","price":132.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/birbal-arivu-kathaigal.jpg?v=1788931439"},{"product_id":"bodhi-dharmar","title":"போதி தர்மர்","description":"\u003cp\u003eபோதி தர்மர் கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள். எனில், யார் இந்த போதி தர்மர்? போதி தர்மரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்ற அத்தனைபேரும் எழுப்பும் முதல் மற்றும் முக்கியமான கேள்வி இதுதான். கூடவே, அவருடைய பூர்வ வாழ்க்கை குறித்த பல சர்ச்சைகளும் எழுப்பப்படுகின்றன. போர்க்கலை உள்ளிட்ட அவருடைய பங்களிப்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அத்தகைய சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை நோக்கிய தேடல் முயற்சியே இந்தப் புத்தகம். அந்தத் தேடலைத் தொடங்கியபோது மூன்று உண்மைகளை உணரமுடிந்தது. · புத்தரைப் புரிந்துகொள்ளாமல் பௌத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. · பௌத்தத்தைப் புரிந்துகொள்ளாமல் போதி தர்மரைப் புரிந்துகொள்ள முடியாது. · போதி தர்மரைப் புரிந்துகொள்ளாமல் ஜென் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது. புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். மேலே இருக்கும் மூன்று உண்மைகளையும் உணர்வீர்கள். கூடவே, புத்தர், போதி தர்மர் இருவரும் சொன்ன செய்திகளையும்!\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942009707,"sku":"BK4247","price":301.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bodhi-dharmar.jpg?v=1788931438"},{"product_id":"bitcoin-paramapatham","title":"பிட்காயிம் பரமபதம்","description":"","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942042475,"sku":"BK4248","price":399.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bitcoin-paramapatham.jpg?v=1788931438"},{"product_id":"blink-kann-simittum-neraththil","title":"ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்","description":"\u003cp\u003eநம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை `தி டிப்பிங் பாயிண்ட்’ புத்தகத்தில் வழியாக மறுவரையறை செய்த மால்கம் க்ளாட்வெல், தற்போது `ப்ளிங்க்’ புத்தகத்தின் வழியாக நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்துகொள்ளும் உத்திகளைக் கற்றுத்தருகிறார். ஒரு தம்பதியை சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்து, அவர்கள் பேசிக்கொள்வதை உள்வாங்கி, அவற்றின் வழியாக அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடிந்துவிடுமா? என்று கணித்துவிட முடியுமா? உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு மனிதரைச் சந்திக்கும்போது, அவர் குறித்த ஒரு துல்லியமான நிலைப்பாட்டை உங்களால் எடுத்துவிட முடியுமா? உங்களுக்கு முற்றிலும் புதியதொரு விஷயத்தைப் பார்த்த மாத்திரத்தில், அது குறித்த தீர்மானமான முடிவுக்கு உங்களால் வந்துவிடமுடியுமா? மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் முடியும் என்பதுதான் உங்கள் பதில் என்று வைத்துக் கொள்வோம்.எனில், உங்கள் கணிப்பு எல்லா சமயங்களிலும் சரியாக இருக்குமா? எப்போது சரியாக இருக்கும்? அல்லது எப்போது தவறாகப் போகக்கூடும்…? மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல்.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். \"மிஸ்டர் க்ளாட்வெல் வரம் பெற்ற ஒரு கதை சொல்லி, எங்கே சென்றாலும் நினைவில் நிற்கக்கூடிய பாத்திரங்களையும், மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் கண்டறியக் கூடிய திறமையுள்ளவர்” – ஜார்ஜ் ஆண்டர்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் \"இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்: நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்” – டேவிட் புரூக்ஸ், நியூயார்க் டைம்ஸ் புக் ரெவியூ\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942239083,"sku":"BK4249","price":559.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/blink-kann-simittum-neraththil.jpg?v=1788931436"},{"product_id":"bombay-dyeing-nusli-wadia","title":"பாம்பே டையிங் நுஸ்லி வாடியா","description":"\u003cp\u003eபாம்பே டையிங் நுஸ்லி வாடியா\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942271851,"sku":"BK4250","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bombay-dyeing-nusli-wadia.jpg?v=1788931437"},{"product_id":"brindhaavanamum-nondhakumaaranum","title":"பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்","description":"\u003cp\u003eபட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய \"தொட்டால் தொடரும்\" ,\" கனவுகள் இலவசம்\" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள், நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரயேத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களின் தொகுப்பு பிருந்தாவனமும் நொந்த குமாரனும். காதல், குடும்பம், கிரைம் பின்னணியில் கதை பின்னுவது பட்டுக்கோட்டையாரின் கோட்டையாக இருந்தாலும், சிரிக்க வைக்கும் பணி சீரிய பணி என்பதை நன்கு உணர்ந்தவர். கல்லூரியில் மேடை நாடகங்கள் எழுதிய காலம் தொட்டு தன்னைக் கவர்ந்த கலை, இலக்கிய நாடகத்துறை விற்பன்னர்களின் நகைச்சுவை உணர்வால் உந்தப்பட்டு எழுதிய 4 நாவல்களின் தொகுப்பு இது. குறுக்கு வழியில் இலட்சாதிபதியாகி விடலாம் என்ற குறிக்கோளுடன் பட்டினத்தை நோக்கிப் படை எடுக்கும் சேட்டை கோபி போன்ற குணாதிசயம் கொண்டவர்கள், தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் சதா சோதனைக்கு உள்ளாக்குவர் என்பதை நகைச் சுவையான வர்ணனைகள், காட்சியமைப்புடன் நளபாக விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942304619,"sku":"BK4251","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/brindhaavanamum-nondhakumaaranum.jpg?v=1788931435"},{"product_id":"business-vetri-ragasiyangal","title":"பிசினஸ் வெற்றி ரகசியங்கள்","description":"\u003cp\u003eபிசினஸ் வெற்றி ரகசியங்கள் \"Don’t make friends who are comfortable to be with. Make friends who will force you to lever yourself up. You will get acquainted to 44 such friends and 45 of you make a brotherhood. Each friend will give you a tip if you’re on the right track, or give you a whip when you lose track. Interact with them as a part of your business routine until success becomes your habit. \"\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942337387,"sku":"BK4252","price":132.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/business-vetri-ragasiyangal.jpg?v=1788931437"},{"product_id":"captain-vijayakanth","title":"கேப்டன் விஜயகாந்த்","description":"\u003cp\u003e\"என் வழி தனி வழி - என்று திரையிலும் வாழ்விலும் உண்மையாகவே வாழ்ந்து நிரூபித்தவர் கேப்டன்! \" ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக இருந்தாலும், அடித்தட்டு மக்களின் அவலம் அறிந்து துணை நின்றவர் அரிதாரம் பூசிய முகத்துக்கும். அனுதினமும் காணும் முகத்துக்கும் ஒரு வித்தியாசம்கூட இல்லாமல் ஒருவரால் வாழ முடியும் என்றால் அப்படிப்பட்ட ஒரே அதிசயப் பிறவி விஜயகாந்த் மட்டுமே! விஜயகாந்த் அளவுக்கு நிராகரிப்புகளைச் சந்தித்த இன்னொரு கலைஞன் இருக்க முடியாது. சிறிய தியேட்டரில் காலைக்காட்சியிலாவது தன் படம் ஓடுமா என்ற நிலையில் இருந்தவர். பூஜை போட்ட அன்றே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் அடிதடியாக மோதிக் கொள்ளும் அளவுக்கு உயரத்திலும் நிலைத்தவர், கமலையும் ரஜினியையும் தாண்டி தனக்கென தனி ரசிக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். கோடம்பாக்கத்தின் சரித்திரத்தில் விஜயகாந்தின் பக்கங்கள் தன்னிகரற்றவை! தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்த நட்சத்திரம். வெற்றி தோல்விகளைக் கடந்து ரசிகர்கள் மனத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நாயகன். வெள்ளந்தித்தனமும் வீராவேசமும் கலந்த ஆளுமை அரசியலிலும் அதிர்வுகளை உண்டாக்கிய தலைவன். எல்லா தரப்பு மக்களின் அன்பையும் சம்பாதித்த கேப்டன். நம்கண் முன்னாலேயே வாழ்ந்து மறைந்த வள்ளல். பா. தீனதயாளன் எழுத்தில் விஜயகாந்தின் வாழ்க்கையை வாசிப்பது என்பது அந்த ஈடு இணையற்ற மனிதனின் வாழ்க்கையை நாம் இன்னொரு முறை வாழ்ந்து பார்ப்பதற்கு இணையானது.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942370155,"sku":"BK4253","price":444.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/captain-vijayakanth.jpg?v=1788931438"},{"product_id":"cervantesin-don-quixote","title":"செர்வான்டெஸின் டாண் கியோட்டே","description":"\u003cp\u003eகாலத்தை கடந்து நிற்கும் நாவல்கள் சில உண்டு அந்த நாவல்களின் வரிசையில் டாண் கியோட்டே முக்கியமானது. திரு. ஆ. அலங்காமணி அவர்கள் இயற்கையாகவே பழகுவதற்கு வெகு சுவாரஸ்யமான மனிதர் அவர் பேசும் போது இதிகாசங்களை வாசித்து உணர முடியாத பல கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களை மற்றவர் மனதில் எளிதில் ஆணி அடித்து மாட்டிவிடும் திறமை வாய்ந்தவர் என்பதை உணர்வீர்கள்.இந்த நாவலின் மூலச்சுவை குறையாமல், ஆனால் பாமரனும் படித்து மகிழ வேண்டும், என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு எளிமையான நடையில் மிகத் திருத்தமாக படைத்துள்ளார். இந்தப் புத்தகத்தை படிக்கும்பொழுது நீங்கள் மனம் விட்டு சிரிக்கும் தருணங்கள் எண்ண முடியாதவை. பதினாறாம் நூற்றாணடில் வெளிவந்த முதல் நவீன நாவலான டாண் கியோட்டே படித்து ஒவ்வொரு வரியாக ரசித்து மகிழ்ந்த திரு அலங்காமணி அவர்கள் அந்த மகிழ்ச்சியை தமிழ் ஆர்வலர்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்.‘‘நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’’ என்ற கொள்கையுடையவர் திரு. அலங்காமணி அவர்கள் இந்த நாவலை எழுத இந்த கொள்கை முக்கிய காரணம் என்று சொல்லலாம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942402923,"sku":"BK4254","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/cervantesin-don-quixote.jpg?v=1788931437"},{"product_id":"chanakiyarin-arta-shastram","title":"சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்","description":"\u003cp\u003eஇந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட. முக்கியமாக, மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும்,அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். சாணக்கியருக்கு விஷ்ணுகுப்தர், கௌடில்யர் என்கிற பெயர்களும் உண்டு. அர்த்த சாஸ்திரம் இன்று நாம் வியந்து பாராட்டுகிற, தயங்காமல் சிந்திக்கிற ஒரு கலவையாக இருக்கிறது. அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றி பேசுகிற இந்நூல் அரசனின் கடமைகள், பொறுப்புகள் தொடங்கி கீழ்மட்ட அலுவலர்களின் பணிகள்வரை விவரிக்கறது, சட்டம்,நீதி,குற்றம், தண்டனை என்ற பல அம்சங்களையும் உள்ளடக்கிய நூல் அர்த்தசாஸ்திரம். ஒரு பேரரசை வீழ்த்தி இன்னொரு பேரரசை உருவாக்கியது சாணக்கியரின் விவேகமும் துணிவும் விடாமுயற்சியும்தான். அவரது அரசியல் வியூகங்களின் காரணமாகவே இன்றளவும் தலைசிறந்த ராஜதந்திரியாக அவர் போற்றப்படுகிறார்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942435691,"sku":"BK4255","price":621.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chanakiyarin-arta-shastram.jpg?v=1788931437"},{"product_id":"chandrababu","title":"சந்திரபாபு","description":"\u003cp\u003eசந்திரபாபு என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க? அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி! சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன? அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான். எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன? அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம். மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை. மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர். ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள். பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942730603,"sku":"BK4256","price":186.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chandrababu.jpg?v=1788931436"},{"product_id":"chennaiyin-kathai-parthiban","title":"சென்னையின் கதை (பார்த்திபன்)","description":"\u003cp\u003eமெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டாலும், அதன் வீதிகளில் இன்று பழமையின் சுவடுகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. சென்னையில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்கள் பலவும் தங்கள் நூற்றாண்டுக் கதைகளைக் காற்றின் காதுகளில் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தையே அடிமைப்படுத்த ஆங்கிலேயர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த புனித ஜார்ஜ் கோட்டையின் தாழ்வாரங்களில் இன்று நடந்து போனாலும், ஏதோ ஒரு முலையில் பிரான்சிஸ் டேவும், ஆண்ட்ரூ கோகனும் பேசிக்கொண்டிருப்பதைப் போல தோன்றுகிறது. யார் இவர்கள்? மெட்ராஸ் தொடங்கி சென்னை வரையிலான பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கைச் செலுத்திய சாமானிய மனிதர்கள் தொடங்கி ஆகப்பெரிய ஆளுமைகள் வரை பலரைப் பற்றியும் பதிவுசெய்திருக்கும் இந்த நூலில், சென்னை நகரின் ஒவ்வொரு அங்குலமும் உருவான கதை வெகு நேர்த்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சென்னையின் பெருமைக்குரிய அடையாளங்கள் பற்றி அதிகம் அறியப்படாத, பேசப்படாத செய்திகளைக் கொண்டு சென்னையின் வரலாற்றை எழுத்தில் பதிவுசெய்திருக்கும் நூலாசிரியர் பார்த்திபன் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியாகப் பணியாற்றியவர். சென்னை நகரின் வரலாறு குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து, தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். சென்னை பற்றி தந்தி தொலைக்காட்சிக்காக இவர் எடுத்த ஆவணத் தொடர் பரவலான கவனத்தைப் பெற்றது.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942763371,"sku":"BK4257","price":710.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chennaiyin-kathai-parthiban.jpg?v=1788931437"},{"product_id":"chilukku","title":"சிலுக்கு","description":"\u003cp\u003eமறைந்து சில தசாப்தங்களுக்குப் பிறகும் ஒரு நடிகையின் பிம்பம் திரையைத் தீப்பிடிக்க வைக்கிறது, இதயங்களில் கிளர்ச்சியை உண்டாக்குகிறது என்றால் அவர் எப்பேர்ப்பட்ட ஆளுமையாக இருக்க வேண்டும்!\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942796139,"sku":"BK4258","price":266.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chilukku.jpg?v=1788931438"},{"product_id":"china-vignani-confusius-sinthanai-vilaka-kathaigal","title":"சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்","description":"\u003cp\u003eசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்...கன்பூசியசின் கருத்துக்களைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே சீன மக்களில் கோடிக்கணக்கானோர் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டனர்.இவருக்கு நன்றி செலுத்தும் நிமித்தமாகத்தான் சீன மக்கள் இவரைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி, இவர் பெயரால் மதமொன்றையும் நிறுவி 2500 ஆண்டுகாலமாகக் கட்டிக்காத்து வருகிறார்கள்.மனித உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர் கன்பூசியஸ். கணவன்\u0026amp;மனைவி, தந்தை\u0026amp;மகன், அண்ணன்\u0026amp;தம்பி, அரசன்\u0026amp;குடிமக்கள், நண்பர்கள் என்ற இந்த ஐந்து உறவுகளின் தன்மை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர் அளித்த விளக்கங்களால்தான் கூட்டுக்குடும்ப முறையானது இன்றுவரையிலும் சீனாவில் சிதறாமல் இருக்கிறது.2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கன்பூசியசின் சீன தத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியது இந்நூல். அவருடைய சிந்தனைகளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள் அன்றைய சீன மக்கள். ஆனால் மன்னர்களால் அவர் அடைந்த அவமானங்கள் அதிகம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942828907,"sku":"BK4259","price":479.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/china-vignani-confusius-sinthanai-vilaka-kathaigal.jpg?v=1788931436"},{"product_id":"chinnajsiru-chinnajiru-ragasiyamay","title":"சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே...","description":"\u003cp\u003eசின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே... பிரார்த்தனா கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். நெற்றியில் வைத்திருந்த குங்குமம், மூக்கில் லேசாக சிதறியிருந்ததைக் காண அழகாக இருந்தது. மஞ்சள் நிற காட்டன் சேலையில், சற்று முன்பு தோட்டத்திலிருந்து பறித்த பூ போல பளிச்சென்று இருந்தாள். டிவியில் ஏதோ வடிவேலு ஜோக் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த தனது கணவன் அருணைப் பார்த்து , \" என்னங்க.. நான் எப்படி இருக்கேன்? என்றாள். திரும்பி ஒரு வினாடி இயந்திரம் போல் பார்த்துவிட்டு, \"நல்லா இருக்க..\" என்று கூறிவிட்டு மீண்டும் டிவியைப் பார்த்தான். வேகமாக பாய்ந்து அவன்கண்களைப் பொத்திய பிரார்த்தனா, \" இப்ப நான் என்ன கலர் சேலை கட்டியிருக்கேன்?\" என்றாள்.\"ம்...\" என்று தடுமாறிய அருண் ,பச்சை கலர்..\" என்றான். மனதில் மெலிதாக கசிந்த துக்கத்துடன் பிரார்த்தனா, \" என்ன கலர் சேலை கட்டியிருக்கன்னு கூட மனசுல பதியல நான் கேக்குறன்னு கடனன்னு சொல்றீங்க\" என்றாள்.பத்து வருடம் பார்த்து பார்த்து சலித்துப் போன பழைய வடிவேலு ஜோக்குகளிடம் இருக்கும் ஈர்ப்பு கூட இரண்டு வருடம் ஆன மனைவிகளிடம் ஏன் கணவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது? ** நெற்றி முடியை ஒதுக்கிவிட்டபடி அழகாக சிரித்த ஆரண்யாவிடம் ஆனந்த்,\" பெண்கள் சிரிக்கறதுல ரெண்டு விதம் இருக்குங்க. சிவப்புத் தரையில மல்லிகைப் பூ மூட்டைய அவிழ்த்துக் கொட்டினது மாதிரி. ஒரு நொடியிலேயே பளிச்சுன்னு முகம் மலர்ந்து, தன்னோட முழு சிரிப்பையும் காட்டுறது ஒரு விதம். அடுத்த டைப்பு.. முதல்ல உதட்டோரத்துல லேசா சிரிக்க ஆரம்பிச்சு. அப்புறம் மெள்ள மெள்ள அந்த சிரிப்ப முழு உதட்டுக்கும் கொண்டு வந்து. அப்புறம் லேசா முன் பல்லக் காட்டி அப்புறம் கொஞ்சம், கொஞ்சமா மத்த பற்களையும் காமிச்சு சிரிக்கிறது. இது .. கடல்லருந்து சூரியன் மெள்ள மெள்ள உதிக்கிறது மாதிரி இருக்கும்\" என்றான்.\"நான் எப்படி சிரிக்கிறேன்?\"\"நீங்க சூரியோதயம்ங்க..\" என்றபோது ஆரண்யாவின் முகத்தில் தெரிந்த வெட்கத்தை பேனாவால் தொட்டு லட்சம் கவிதைகள் எழுதலாம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942861675,"sku":"BK4260","price":177.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chinnajsiru-chinnajiru-ragasiyamay.jpg?v=1788931438"},{"product_id":"computer-arivai-valarkum-kanini-mulla-kathaigal","title":"கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்","description":"\u003cp\u003eகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் முல்லா காலங்களைக் கடந்தவர். இறப்பை வென்றவர். என்றம் எப்போதும் எங்கும் அறிஞர். அவரை ஏன் இந்தப் புதுயுகத்திற்குக் கொண்டுவரக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே இந்நூல். கணினி, தொழில்நுட்பம் போன்ற புதிய விஷயங்களை மக்களிடம் எடுத்தச் செல்ல இனிய, எளிய வழி இந்த கணினி முல்லா கதைகள்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942927211,"sku":"BK4261","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/computer-arivai-valarkum-kanini-mulla-kathaigal.jpg?v=1788931437"},{"product_id":"computer-thozhilagal-1","title":"கம்ப்யூட்டர் தொழில்கள்... பாகம்-1","description":"\u003cp\u003eகம்ப்யூட்டர் தொழில்கள் பாகம்-1 தமிழிலேயே எளிதாகப் படித்துப் புரிந்து கொண்டு செயல்படுத்த முன்வரும் எவருக்கும் இது சிறந்த வழிகாட்டியாக அமையும். யார் வேலை கொடுப்பார்கள் என்று தேடிக் கொண்டு நிற்காமல் நாமே பலருக்கு வேலை கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இந்நூல் அமையப் பெற்றிருப்பதால் எவர் வேண்டுமானாலும் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம்.கம்ப்யூட்டர் சார்ந்த... கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்கள் நிறைய இருக்கின்றன. அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு என்னென்ன புதிய தொழில்களை உருவாக்கலாம் என்பதற்கு இதில் யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்தினால் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் மறையும். புதிய சேவைகள் அறிமுகமாகும்.கம்ப்யூட்டர் அடிப்படையிலான தொழில்கள் என்றாலே அது சாப்ட்வேர் உருவாக்கம் தொடர்பான தொழில் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தமிழக இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இந்தத் துறையில் வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால்...கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட வேண்டுமானால் கம்ப்யூட்டரில் திறமை மிக்கவர்களால் மட்டுமே அது முடியும் என்ற மாயை உலகில் நிலவுகிறது. இதனைத் தகர்த்து யார் வேண்டுமானாலும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தொழில்களைச் செய்ய முடியும் என்பதை விளக்குகிறது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942959979,"sku":"BK4262","price":56.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/computer-thozhilagal-1.jpg?v=1788931436"},{"product_id":"currency-colony","title":"கரன்சி காலனி","description":"\u003cp\u003eபிரிட்டிஷார் காலத்தில் கொல்கத்தாவின் 'தி கிராண்ட் ஹோட்டல்' ஏகப்பிரபலம். 500 அறைகள் கொண்ட அந்த ஹோட்டலின் வெற்றி மற்ற நட்சத்திர விடுதியாளர்களை பொறாமைப் பட வைத்தது. 1933ஆம் ஆண்டு பரவிய காலரா நோய் காரணமாக கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கோர் இறந்து போனார்கள். அவர்களில் தி கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்தவர்களும் அடக்கம். சம்பவம் நடந்த அடுத்த நொடியிலிருந்தே சரிவுகள் தொடங்கின. காலராவை காரணம் காட்டியே அந்த ஹோட்டலின் வாடிக்கையாளர்கள் விலகி ஓடினர். ஒரு கட்டத்தில் ஹோட்டலையே மூட வேண்டிய சூழல். நொடித்து போன அந்த ஹோட்டலை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார் மோகன் சிங். நன்றாகப் புதுப்பித்து நடத்த ஆரம்பித்தார். சிறுக சிறுக வாடிக்கையாளர்கள் வந்தனர். பின்னர், கடந்த கால அச்சம்,அவப் பெயர், பயம் எல்லாம் முற்றிலுமாக மறைந்தன. லாபம் கிடைக்கத் தொடங்கியது. ஹோட்டல் தொழிலை இந்தியா முழுக்க கொண்டு சென்றார். பிறகு, சிங்கபூர், சவுதி அரேபியா என்று பழ நாடுகளுக்கு விரிவு படுத்தினார். சாதாரண மோகன்சிங் ஹோட்டல்களின் மகாராஜா எம்.எஸ்.ஓபிராய் ஆகப் பிரபலமானார். இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி நம் வாழ்க்கை பாதையில் குறுக்கிடும்.ஆனால் அதை நாம் அடையாளம் காண்பதில்லை. சமயங்களில், அந்த வாய்ப்புகளை அலட்சியமாகக் கடந்து விடுகிறோம். ஆனால், நீங்கள் நல்ல தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்றால் மனக்கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும், வருகின்ற நல வாய்ப்புகளை அடையாளம் காணப் பழக வேண்டும் என்கிறார் நூலாசிரியர் ந. இளங்கோவன். இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு மனிதரும் உங்களுக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவார்கள், வெற்றிப் பாதையை நோக்கி உங்களை உந்தித் தள்ளுவார்கள். இது உறுதி!\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826942992747,"sku":"BK4263","price":92.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/currency-colony.jpg?v=1788931436"},{"product_id":"dawus-ibrahim-dongri-to-dubai","title":"தாவூத் இப்ராகிம்: Dongri to Dubai","description":"\u003cp\u003eமும்பை மாஃபியாவைப் பற்றிய வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான முதல் தொகுப்பு டோங்கிரிலிருந்து துபாய்க்கு புத்தகம். ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, வரதராஜ முதலியார், அபு சலீம் போன்ற முக்கிய குற்றவாளிகளின் கதை இது. அதை விட முக்கியமாக காவல்துறையில் பணியாற்றிய ஒருவருடைய மகன் குற்றவாளியான கதை இது. ஆரம்பத்தில் மும்பை காவல்துறையின் பகடைக்காயாக இருந்த தாவூத் இப்ராகிம் அவர்களுக்காக எதிரிகளை ஒழிக்கத் தொடங்கி ஒருகட்டத்தில் மும்பை காவல்துறைக்கே எதிரியாக மாறினான். இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் பல குற்றங்கள் பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. பதான்களின் வளர்ச்சி, தாவூத் குழு உருவானது, முதல் சுபாரி, பாலிவுட்டில் மாஃபியாவின் தலையீடு, கராச்சியில் தாவூத் குடியேறியது, உலகின் முக்கிய குற்றவாளி ஒருவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுவது என பல விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. இந்தக் கதை முக்கியமாக டோங்கிரியில் இருந்து துபாய்க்குச் சென்று டானாக மாறிய ஒரு சிறுவனைப் பற்றியது. அவனது தைரியம், நோக்கம், குள்ளநரித்தந்திரம், லட்சியம், அதிகார வெறி போன்ற பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறது. மிக ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த புத்தகம் மாஃபியாவின் அதிகார விளையாட்டுகள் பற்றியும், பயங்கரமான போர்முறைகள் பற்றியும் சொல்கிறது. எஸ்.ஹுஸைன் ஸைதி, மும்பை மீடியாவில் எழுதி வரும் மும்பையைச் சேர்ந்த ஒரு முக்கியமான க்ரைம் ரிப்போர்ட்டர். இவர் ஆஸியன் ஏஜ், மும்பை மிரர், மிட் டே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பல பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். 26\/11 மும்பை தாக்குதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட HBOவின் ஆவணப்படமான Terror in Mumbaiயில் துணைத் தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார் ஸைதி. இவர் மும்பையில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943025515,"sku":"BK4264","price":532.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/dawus-ibrahim-dongri-to-dubai.jpg?v=1788931436"},{"product_id":"devidtum-koliyathum","title":"டேவிட்டும் கோலியாத்தும்","description":"\u003cp\u003eடேவிட்டும் கோலியாத்தும் கிட்டத்திட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதன பாலஸ்தீனத்தில் ஆடு மேய்க்கும் சிறுவனான டேவிட் பெரிய உருவத்தைக் கொண்ட பராக்கிரமசாலியான கோலியாத்தை கவணின் உதவிகொண்டு அடித்து கீழே சாய்த்தான் என்பது வரலாறு. அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை பலவீ னமானவருக்கும் பலமானவருக்குமான பிரச்சினை, போட்டி என்றால் டேவிட், கோலியாத்தைத்தான் நாம் உதாரணமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.டேவிட்டின் வெற்றியை நாம் சாத்தியமற்றது, அதிசயமானது எனக் கூறி வருகிறோம். டேவிட்டும் கோலியாத்தும் என்கிற இந்தப் புத்தகத்தில் மால்கம் க்ளாட்வெல் நாம் எதையெல்லாம் வளர்ச்சிக்குத் தடையானது , சாத்தியமற்றது என நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதற்கெல்லாம் சவால் விடுகிறார்.\"பாரபட்சம் அல்லது உடல் அளவில் இயலாமை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து நிற்பது அல்லது சாதாரண பள்ளிக்கூடத்தில் படிப்பது அல்லது ஏதேனும் ஒன்றில் பின் தங்கியிருப்பது\"-இப்படிப்பட்ட பிரச்சினைகள் கொண்டவர்கள் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா?இந்த மாதிரியான தடைகள் இருந்தால் எதையும் சாதிக்கமுடியாது என நாம் வழக்கமாக நினைப்பதுண்டு.ஆனால் இந்தத் தடைகளுக்கும், சாத்தியமற்றவைகளுக்கும் புதிய விளக்கம் கொடுக்கிறார் மால்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கும் ,பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும் என்ன நடந்தது என்கிற ஓர் உண்மைக்கதையோடு இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து வட அயர்லாந்து, 'ட்ரபிள்ஸ்' என அழைக்கப்பட்ட இன தேசியவாத மோதல், புற்றுநோய் ஆய்வாளர்களின் மனநிலை,சமூக உரிமை செயல்பாட்டாளர்கள்,கொலை, அதற்கு பதிலாக பழி தீர்த்தல், வெற்றி பெற்ற\/வெற்றி பெறாத வகுப்பறைகளின் இயக்கவியல் எனப் பல தளங்களுக்குப் பயணித்து நாம் எவஎல்லாம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என நினைக்கிறோமோ அவையெல்லாம் எப்படி வெற்றிக்கு உதவுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளின் துணையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார். இவருடைய முந்தையப் புத்தகங்கள் போல - TIPPING POINT,BLINK, OUTLIERS,WHAT THE DOG SAW-டேவிட்டிலும் கோலியாத்திலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தில் நடப்பதை வழக்கத்திற்கு மாறாக அவதானித்து ஒரு மாற்றுச் சிந்தனையை வரலாறு, உளவியல், சமூகவியல் துறைகளில் செய்யப்பட ஆய்வுகளின் அடிப்படையில் நமக்குத் தந்திருக்கிறார். வாருங்கள் நாமும் பயணிப்போம்!!\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943058283,"sku":"BK4265","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/devidtum-koliyathum.jpg?v=1788931438"},{"product_id":"dharma-sasthiram-kattum-vazhkai-padhai","title":"தர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை","description":"\u003cp\u003eதர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை “தர்மசங்கடம் என்பது முற்றிலும் முரண்பாடான இரு நிலைகளுள் எதனை ஏற்பது என்று தவிக்கும் நிலை. இது யோக்கியர்களுக்கு மட்டுமே அடிக்கடி ஏற்படும்.” அயோக்கியர்களுக்கு இந்தக் கவலையே இல்லை. ஏனெனில் அவர்களது ஆசைகளே அவர்களை வழிநடத்திச் செல்கின்றன. முக்கால்வாசி மக்கள் முழுக் கெட்டவர்களும் இல்லை. முழு நல்லவர்களும் இல்லை. ஒருபுறம் தர்மம் அவர்கள் மனதை ஈர்க்கும். மறுபுறம் ஆசாபாசங்கள் அவர்களை இழுக்கும். இத்தகைய மக்களுக்காகவே, தடுமாற்றத்தால் தத்தளிப்பவர்களை நல் வழிப்படுத்துவதற்காகவே நம் முன்னோர்களால் தர்ம சாஸ்திரங்கள் அருளப்பட்டுள்ளன. ராகு காலத்தில் பயணம் செய்வது போன்ற சிறு பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வது முதற்கொண்டு மிகப் பெரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது வரைக்குமான அனைத்திற்கும் அவற்றில் துல்லியமான விளக்கங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் பற்றி இந்த நூலில் நாம் விரிவாகக் காணலாம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943091051,"sku":"BK4266","price":195.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/dharma-sasthiram-kattum-vazhkai-padhai.jpg?v=1788931437"},{"product_id":"dhevadhaigalin-desam","title":"தேவதைகளின் தேசம்","description":"\u003cp\u003eட்யூஷன் சென்டர் தேவதைகளை காலை ட்யூஷன் தேவதைகள், மாலை ட்யூஷன் தேவதைகள் என்று இரண்டு பிரிவுகளாக என்னைப் போன்ற கல்வியாளர்கள்(?) பிரித்துள்ளனர். காலை ட்யூஷன் தேவதைகளை மேலும் இரண்டாக பிரிக்கலாம். காலை ஆறு டூ ஏழு ட்யூஷன் தேவதைகள் குளிக்காமல் தூங்கி வழிந்த முகத்துடன் வருவதால் கொஞ்சம் மங்கலாகத்தான் இருப்பர். ஏழு டூ எட்டு ட்யூஷன் தேவதைகள் குளித்து முடித்து, பளிச்சென்று வருவதால், அந்த ட்யூஷனுக்குதான் பசங்கள் கும்பல் அள்ளும். அக்காலத்தில் ட்யூஷனுக்கு வருபவர்கள் பெரும்பாலும் நன்றாக படிக்காதவர்கள்தான். எனவே டீச்சர், “ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு” என்று சொன்னால் கூட, ‘அதெப்படி?’ என்று தேவதைகள் மலங்க மலங்க விழிக்கும்போது அக்கண்களில் தெரியும் களங்கமற்ற பரிசுத்தத்தை நீங்கள் .இமயமலை நதிகளிலும் காண முடியாது. சில டீச்சர்கள் தேவதைகளை எழுப்பி, “எய்ட் டிவைடட் பை டூ என்ன?” என்ற கடினமான கேள்வியை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கேட்பார்கள். அதற்கு பதில் தெரியாமல் அத்தேவதைகள் அவமானத்தில் கண்கலங்க தவித்தபோதுதான், நம் தேவதாபிமானமற்ற கல்விமுறையை மாற்றவேண்டிய அவசியம் குறித்து நான் முதன்முதலாக சிந்தித்தேன். . அப்போது ஒரு தேவதையிடம் பேசுவது என்பது ஆண்டுக்கொரு முறை நடக்கும் அதிசய சம்பவம். எப்போதாவது தைரியம் வந்து நெஞ்சு படபடக்க, “உங்க பேரு என்ன?” என்று கேட்பதற்குள் நாக்குக் குழறி, மூச்சுத் திணறி, வியர்த்து விறுவிறுத்துவிடும். இவ்வாறு எளிதில் அணுகமுடியாதவர்களாக அந்த தேவதைகள் இருந்ததே அவர்களுக்கு ஒரு காவியத் தன்மையை அளித்தது. நம் இளமைக்காலத்தின் மகத்தான தேவதைகள் இப்போது எங்கோ, யாரையோ திருமணம் செய்துகொண்டு, பிக்பாஸ் விளம்பர இடைவேளைகளில் ரிமோட்டைத் தேடிக்கொண்டோ, டீன்ஏஜ் மகள்கள் தூக்கத்தில் “சீ…” என்று வெட்கத்துடன் சிரிப்பதை திகிலுடன் பார்த்துக்கொண்டோ, புத்தகம் படிக்கும் கணவனின் கண்ணாடியைக் கழட்டி விளையாடிக்கொண்டோ அல்லது தினமும் குடித்துவிட்டு வரும் கணவனுக்காக கண்ணீருடன் காத்துக்கொண்டோ இருக்கலாம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943123819,"sku":"BK4267","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/dhevadhaigalin-desam.jpg?v=1788931437"},{"product_id":"eliya-tamizhil-excel","title":"எளிய தமிழில் எக்ஸெல்","description":"\u003cp\u003eஎளிய தமிழில் எக்ஸெல் எக்ஸெல் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் எங்கேயோ போயிருந்திருப்போமே என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகம்.பால் கணக்கு முதல் சலவைக் கணக்கு வரையிலும் வங்கிச் சேமிப்பு தொடங்கி வருங்கால வைப்பு நிதி வரையிலும் எந்தக் கணக்காக இருந்தாலும் அதை நீங்கள் இதில் போட்டுப் பார்க்கலாம்.கணினியை எப்படி எப்படியெல்லாம் வேலை வாங்கலாம் என்பதைத் தெளிவாகச் சொல்லித் தரும் புத்தகங்கள் வெகு குறைவு. அதிலும் இல்லத்தரசிகளைப் பற்றி இவை கவலைப்படுவதே இல்லை.நமக்கும் கணினிக்கும் சுட்டுப் போட்டாலும் ஒத்து வராது என்று சொல்கிறவர்கள்கூட இதில் இத்தனை விசயங்கள் இருக்கின்றனவா என்று வியக்கத் தொடங்குவார்கள்.இந்த இரண்டிலுமே உண்மை இல்லை. உங்களது இடுப்பொடிக்கும் வேலைகள் பலவற்றையும் கணினிக் கல்வி செய்து கொடுக்கும். உங்களது அறிவார்ந்த உதவியாளராக இருந்து உங்களுக்கு உதவும். கணினிப் படிப்பு கை நிறையச் சம்பாதிப்பதற்குத்தான் உதவும். நமக்கு அது எதற்கு? என்று நினைப்பவரா நீங்கள்?கணினிப் புத்தகங்கள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. எங்களுக்குப் புரியாத நடையில்... மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும் மொழியில். அதனால் கணினியே எனக்கு வேண்டாம் என்று சொல்பவரா நீங்கள்?\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943156587,"sku":"BK4268","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/eliya-tamizhil-excel.jpg?v=1788931436"},{"product_id":"eliya-tamizhil-sithar-thathuvam","title":"எளிய தமிழில் சித்தர் தத்துவம்","description":"\u003cp\u003eஎளிய தமிழில் சித்தர் மருத்துவம் சித்தர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எளிய கதைகள் மூலம் விளக்குவதுடன் சித்தர்கள் பற்றிய வரலாற்றையும் இணைத்துத் தருகிறது இந்தப் புத்தகம்.நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அந்த வாசனையை மனோரஞ்சிதப் பூவில் நுகர முடியும் என்பார்கள். அதுபோலவே, சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவம் தருபவை. குற்றாலத்தில் பகலில் மரமாக இருப்பவை எல்லாம், இரவில் சித்தர்களாக மாறும் என்பார்கள். சித்தர்களை மரத்துடன் ஒப்பிடுவதில் தப்பில்லை. வேர், பூ, காய், கனி, இலை, கிளை என்று ஒவ்வொரு பகுதியும் உபயோகமானதாக இருக்கும் மரத்தைப்போலவே, மனித குலத்தை நல்வழிப்படுத்துவதற்காகத் தங்கள் உடல், பொருள் ஆவி அனைத்தையுமே முழுமையாக அர்ப்பணித்தவர்கள் சித்தர்கள்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943222123,"sku":"BK4269","price":156.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/eliya-tamizhil-sithar-thathuvam.jpg?v=1788931438"},{"product_id":"ellam-tharum-idhaziyal","title":"எல்லாம் தரும் இதழியல்","description":"\u003cp\u003eஇந்தக் கணத்தில் உங்களிடம் இருக்கிற அல்லது இல்லாமல் இருக்கிற திறமைகளை இதைப் படித்ததும் உங்களுக்குப் பயன்படக்கூடிய விதத்தில் உருவாக்கி, மெருகேற்றிக் கொடுக்கும் உதவியாளனாக இது செயல்படும். உங்களுக்கு இதழியல் துறையில் இந்தக் கணம்வரை எதுவுமே தெரியாமல் இருந்திருக்கலாம். பரவாயில்லை. எவ்வளவோ காலம் முட்டிமோதி முன்னுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவராகவும் நீங்கள் இருக்கலாம். அதனாலும் பாதகமில்லை. ஆக நீங்கள் யாராக இருந்தாலும் இதழியலில் உங்களுக்கு விருப்பமிருந்து இதை உங்கள் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொள்ள நீங்கள் எண்ணினால் இந்தப் புத்தகம் உங்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும். தொழில் இரகசியம் என்ற பெயரில் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று காக்கப்படும் விசயங்களில் இதழியல் பணியும் ஒன்று.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943254891,"sku":"BK4270","price":140.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ellam-tharum-idhaziyal.jpg?v=1788931437"},{"product_id":"elon-musk","title":"எலான் மஸ்க் : மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன்","description":"\u003cp\u003eபசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ’மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களை தனி ஒருவனின் ’ஆசை’யைத் தூண்டி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியவர்கள், சமூகத்தின் சமநிலை கருதி ஆசையை கட்டுக்குள் வைக்கக் கற்றுக்கொடுத்தவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்திவிடலாம்.அப்படி முதல் தரப்பினரில் ஒருவர் ’உலகமயம்’ என்னும் மந்திரக்கோலை நீட்டி ஒவ்வொருமுறை ‘வளர்ச்சி’ என்ற சொல்லை வெவ்வேறு காலகட்டங்களில் உச்சரித்தபோதும் புதிய வஸ்துகள் தோன்றின. ஆனால் இரண்டாம் தரப்பினர்கள் கணித்ததைப்போல் அவற்றின் மறுசுழற்சிக்கு வடிகால் இல்லாததால் இதுவரை அழிவிற்குப் பயன்படாத அறிவியல் கண்டுபிடிப்பு என்று எதுவுமே மிஞ்சவில்லை என்பதுதான் சாபக்கேடு. ’ஆசைகளையும் துறக்காமல், அழிவையும் விதைக்காமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல விளைவுகளை மட்டுமே தரக்கூடிய மாற்றங்கள் சாத்தியமா?’ என்று தேடத்துவங்கியவர் ஜிப்2, பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பணி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, கிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தார். அவர் பெயர்தான் எலான் மஸ்க்! எலான் மஸ்க்கின் வாழ்வின் வழியாக, அவரது சாதனைகள் ஊடாக, அவரது இலக்குகளை எட்டும் பயணத்தின் பலனாக நாம் என்ன பெறப்போகிறோம் என்றால் அவரது முயற்சிகள் எல்லாம் வெற்றிபெற்று ஒன்றோடொன்று தொடர்புகளை ஏற்படுத்தி இணையும் புள்ளியில் உலகமே ’எலான்மயம்’ ஆகியிருக்கும். அதில் நாம் என்ன செய்துகொண்டிருப்போம்? என்ற பருந்துப்பார்வை தரிசனம்தான் இந்தப் புத்தகம்!\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943320427,"sku":"BK4271","price":168.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/elon-musk.jpg?v=1788931441"},{"product_id":"engumiruppavar","title":"எங்குமிருப்பவர்","description":"\u003cp\u003eகேலண்டர்களில், கடைகளில், பொது இடங்களில், வாகனங்களில், செல்போன் வாட்சாப் மெசேஜ்களில், மக்களின் மணிபர்ஸ்களில் என்று எல்லா இடங்களிலும் சாய்பாபாவின் படங்களைப் பார்க்க முடிகிறது. இந்தியாவிலும், இந்தியர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் பாபா கோயில்கள் புதிது புதிதாக உதித்துக் கொண்டே இருக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 50,000 பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து ஷீரடிக்கு வருகிறார்கள். அவர் நிறுவிய துவாரகமாயி தர்காவில் அவர் வளர்த்த துனி, உதியின் மகிமைகள் பற்றிய கதைகளைப் புத்தகமாகவும், ஒலிச்சித்திரங்களாகவும் செவி வழி கதைகளாகவும், கேட்டு,பாடி, பகிர்ந்து பரவசமடைகிறார்கள். வாழும் காலத்தில் மத நல்லிணக்கத்தைப் போகுமிடமெல்லாம் மலரச் செய்தவரான பாபா இன்றைய நவநாகரிக யுகத்தின் பொருள்முதல்வாதத்தின் பக்கவிளைவுகளை முன்கூட்டியே கணித்தவர். எளிமையான வாழ்க்கைமுறைக்கு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தவர், ஜீவா காருண்யத்தை பறை சாற்றியவர், பல இடங்களுக்குப் பயணப்பட்டவர். அவர் ஜீவசமாதியடைந்து ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்றைய கணினி யுகத்திலும் பல அற்புதங்களை நிகழ்த்தும் கர்த்தாவாகக் கருதப்படுவது ஏன்? பொருளாதாரப் பின்புலம், படிப்பு, மதம் சார்ந்த நம்பிக்கை போன்ற பல்வேறு வித்தியாசன்களைக் கடந்து இவ்வளவு பெரிய ஜனத்திரளை அவர்பால் ஈர்க்கும் விசை எது? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் பிரயாசையில் சோம வள்ளியப்பன்- மேலான் கலைப் பயிற்றுநர், பங்குச் சந்தை ஆலோசகர் போன்ற தன தொழில்முறை அடையாளங்களை கழற்றி வைத்துவிட்டு, ஒரு பக்தனாகத் தன அனுபவங்களையும், தான் கண்டு, கேட்டு, பார்த்த விஷயங்களை சிறுசிறு கதைகளாக இங்கே பதிவு செய்துள்ளார்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943353195,"sku":"BK4272","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/engumiruppavar.jpg?v=1788931439"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/sixth_sense_publications.jpg?v=1788926718","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/sixth-sense.oembed","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}