{"title":"நற்றிணை பதிப்பகம்","description":null,"products":[{"product_id":"vennira-irravugal","title":"வெண்ணிற இரவுகள்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782062891371,"sku":"BK2076","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/vennira-irravugal.jpg?v=1787941874"},{"product_id":"a-muthulingamm-katturaigal","title":"அ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( இரண்டு பாகங்கள் )","description":"\u003cp\u003eஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts ) : முத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன? அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம். அந்தப் பயணம் தொடங்கி இலக்கைச் சென்றடையும் வரை பயணப்பாதையைச் சுற்றி இருக்கும் அனைத்தின் மீதும் விருப்பு வெறுப்பின்றி வெளிச்சத்தைத் தூவிக்கொண்டே வருகிறார். உரக்கப் பேசாமல் புன்னகையுடன் நம்முடன் சகபயணியாக வருகிறார். வாழ்க்கை என்பது வெறும் கருப்பு வெள்ளை மட்டும் கிடையாது. பல்வேறு வண்ணங்களுக்கும் அங்கு இடமுண்டு. அவை ஒவ்வொன்றும் அதனளவில் தனித்துவமும் முக்கியத்துவமும் கொண்டது. இந்தப் பல்வேறு வண்ணங்களின் இருப்பும் கவனிக்கப்ப்படும்போது ஏற்படும் மனவெழுச்சியை நோக்கித்தான் முத்துலிங்கத்தின் படைப்புகள் நம்மை அழைத்துச் செல்கின்றன. நம் வாழ்க்கையில் முன் நிற்கும் நம்மால் அதிமுக்கியம் எனக் கருதப்படும் பல வினாக்களும், விழுமியங்களும், புரிதல்களும் காணாமல் போகும் மாயமும் இந்தப் பயணத்தில் நடக்கிறது. பயணத்தின் இறுதியில் எஞ்சுவது புன்னகையும் நம்பிக்கையும்தான்.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782062924139,"sku":"BK2077","price":1040.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/a-muthulingamm-katturaigal.jpg?v=1787941872"},{"product_id":"a-muthulingathin-moondru-ulagangal","title":"அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782062956907,"sku":"BK2078","price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/a-muthulingathin-moondru-ulagangal.jpg?v=1787941872"},{"product_id":"aadum-kuthirai","title":"ஆடும் குதிரை","description":"\u003cp\u003eசிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் உலகச் செவ்விலக்கியச் சிறுகதைத் தொகுதி இது. கனடாவில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர் என். கே. மகாலிங்கம், தொடர்ந்து செய்து வரும் மொழியாக்கப் பணிகளின் மூலம் மிகுந்த கவனிப்பையும் பாராட்டுகளையும் பெற்றவர். மிகவும் குறைவாகவே தமிழில் அறிமுகமாகியிருக்கும், ஆனால் அதிகம் அறியப்பட வேண்டிய ழான் போல் சார்த்தர் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி, டி.எச்.லாரன்ஸ், ஜூம்பா லஹிரி, அமெரிக்காவின் வியட்நாம் யுத்தம் பற்றிய பல விரிந்த சித்திரங்களைத் தந்த ரிம் ஓ பிரையன், கனேடிய தேசத்தின் முகம் என்று சொல்லத்தக்க மார்கரெட் அட்வுட் முதலான பல உலக இலக்கிய ஆளுமைகளை மிகுந்த கவனத்தோடும் விசுவாசத்தோடும் தமிழில் கொண்டு வந்திருக்கிறார் என். கே. மகாலிங்கம். மிகச் சிறந்த கதைகளை எளிமையான மொழியில் கொண்டுவரும் சிரமத்தை மிக எளிதாகக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார் என். கே. மகாலிங்கம்.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782062989675,"sku":"BK2079","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aadum-kuthirai.jpg?v=1787941872"},{"product_id":"aagaya-thamarai","title":"ஆகாயத் தாமரை (நற்றிணை)","description":"\u003cp\u003eரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேகிதி மாலதி. அவன், தன் கஷ்ட காலத்தில் மாலதி ஏதாவது செய்வாள் என்று நினைக்கிறான். அவள் ஒன்றும் செய்யாமல் தன் வழியே சென்று விடுகிறாள். வாழ்க்கையில் யாரும் யாருக்கும் ஒன்றும் செய்துவிட முடியாது. தானே தன் வாழ்க்கையை அதன் வழியிலேயே வாழ்ந்தாக வேண்டும் என்ற பொதுவிதிதான் ஆகாயத் தாமரையை முன்னெடுத்துச் செல்கிறது -அசோகமித்திரன்\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063022443,"sku":"BK2080","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aagaya-thamarai.jpg?v=1787941872"},{"product_id":"aatkolli","title":"ஆட்கொல்லி","description":"\u003cp\u003eஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான் -க. நா. சு\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063055211,"sku":"BK2081","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aatkolli.jpg?v=1787941872"},{"product_id":"aayirathu-or-iravukal","title":"ஆயிரத்து ஓர் இரவுகள்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063087979,"sku":"BK2082","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aayirathu-or-iravukal.jpg?v=1787941872"},{"product_id":"agam-puram-aanantham","title":"அகம் புறம் ஆனந்தம்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063120747,"sku":"BK2083","price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/agam-puram-aanantham.jpg?v=1787941872"},{"product_id":"akka","title":"அக்கா","description":"\u003cp\u003eசமீபத்தில் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார்.;உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன? இதுபற்றி நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே கிடையாது. எங்கள் வீட்டில் பொதுவாக இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப்புத்தகங்கள் இருந்தன. கேள்வி கேட்டவர் அதைக் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன். எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கைப் பத்திரிகை களிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. என் அன்பு நண்பர் செ.கணேசலிங்கன் 1964இல் இந்தியா சென்று எனது அக்கா; சிறுகதைத் தொகுப்பை தானாகவே பதிப்பித்தார். 500 பிரதிகளை சென்னையிலிருந்து கொழும்புக்கு கப்பலில் கொண்டுவந்தார். அதில் 10 புத்தகங்களை எனக்கு ஆசிரியர் என்ற வகையில் இலவசமாகத் தந்தார். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய அக்கா சிறுகதைப் புத்தகம்தான்.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063153515,"sku":"BK2084","price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/akka.jpg?v=1787941872"},{"product_id":"amadhavan-kadhaikal","title":"ஆ.மாதவன் கதைகள்","description":"\u003cp\u003eஆ.மாதவன் கதைகள் ஆ.மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெகுட்டாமல்... அவரது மொழி மணிப்பிரவானம் இல்லை, மணிமிடைப்பவளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அற்புதமான மொழி அவரது சம்பத்து. அவர் கையாண்ட மலையாளச் சொற்கள் பெரும்பாலும் ஆதித் தமிழ்ச் சொற்கள். அவருக்கு என்று ஒரு மொழி நேர்த்தியுண்டு. அது மலையாளத்து காளன், ஓலன், எரிசேரி, அவியல், புளிசேரி, புளியிஞ்சி, சக்கைப் பிரதமன், பாலடைப் பிரதமன், உப்பேசி போல தமிழுக்குப் புதிய மணம், புதிய சுவை. ஆ.மாதவனின் சிறுகதைகளை வாசித்தவர் இதை உணர்வார்கள். அவற்றின் தனித்துவம் பற்றியும் செய்தேர்த்தி பற்றியும் கலை வெற்றி பற்றியும் அறிவார்கள். - நாஞ்சில் நாடன்\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063219051,"sku":"BK2085","price":480.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/amadhavan-kadhaikal.jpg?v=1787941872"},{"product_id":"america-ulavali","title":"அமெரிக்க உளவாளி","description":"\u003cp\u003eநவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் ஆசிரியர் பல நிகழ்வுகளை இந்நூலில் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசக மனத்தில் நீடித்து நிறுத்துகின்றன.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063284587,"sku":"BK2086","price":224.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/america-ulavali.jpg?v=1787941871"},{"product_id":"amma-uzhaippathai-niruththi-kondaar","title":"அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்","description":"\u003cp\u003eசமீபத்தில் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை பாதித்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக அழகிய பெரியவனின் \"அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்\" தொகுப்பு அமைந்திருந்தது. அழகிய பெரியவனின் கவிதைகள் சமூகத்தை அழகியலுடனும், வீரியமிக்க சொல்லோடு செயல்படும் கவிதைத் தன்மையில் அமைந்திருப்பதை கண்டிருக்கிறேன். அவரது சிறுகதைகள் மொழி வழியாக எனக்கு அதிக நெருக்கத்தோடு அமைந்திருந்தது. அகத்திலும், புறத்திலும் கூட என்றும் சொல்லலாம். இத்தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சிறுகதைகள் தனித்தன்மையோடும், ஒவ்வொரு முறையும் வாசிக்கிற போதும் குத்தீட்டி கொண்டு குத்துவதைப் போல ஏதோவொன்று குத்திக் கொண்டே, யாரோ ஒருவரையோ அல்லது சமகாலத்தில் நாம் சந்தித்து வருகிற சமூகம் குறித்தான நாம் கொண்டிருக்கும் உளவியல் பிரச்சனைகள் குறித்தோ உள்வயமான கேள்வி யொன்றை அடுக்கிக் கொண்டே போவதை உணர முடிந்தது.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063350123,"sku":"BK2087","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/amma-uzhaippathai-niruththi-kondaar.jpg?v=1787941871"},{"product_id":"amuthulingam-shart-storys","title":"அ முத்துலிங்கம் சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)","description":"\u003cp\u003eஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு : 1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப்பு முத்துலிங்கத்தினுடைய முக்கால் நூற்றாண்டுப் பயணத்தைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. இலங்கை, கனடா, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைத் தன்னுடைய களமாகக்கொண்டு அவர் படைத்துள்ள கதைகள் அவர் வாழ்க்கையை எவ்வளவு விரிவாக வாழ்ந்து வருகிறார் என்பதைக் காட்டும். அவரின் படைப்புலகம் மொழி, மதம், நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதத்தில் மட்டும் குவிமையம் கொள்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை அ. முத்துலிங்கம் சிறுகதைகள் என்றால் மிகையில்லை. இத்தொகுப்பு இலக்கிய வாசகர்களுக்கான பொக்கிஷம்.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063415659,"sku":"BK2088","price":1040.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/amuthulingam-shart-storys.jpg?v=1787941872"},{"product_id":"andradam","title":"அன்றாடம்","description":"\u003cp\u003eசற்றே துணிவு கொண்டு சிறுகதைகளை எழுதுவதற்கு மாறிய எனது மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். உண்மையில் எனக்கு அது ஒருசிறந்த தருணமாகவே இருந்திருக்கக் கூடும். சிறுகதையை எழுத அமரும் ஒவ்வொரு முறையும் அதற்கொரு தனித்த மனநிலை வேண்டப்படுவதை உணர்கிறேன். ஒரு தியானத்தைப் போல. உள்ளுக்குள் எதைச் சொல்ல நினைத்தாலுமே கூட, ஒரு கருத்துக்கு உருவாக்கப்படுவது சிறுகதையல்ல என்பதே என் நம்பிக்கை. மனதில் வந்து விழும் விதை இருப்புக்கட்டி மெல்ல முகிழ்த்து முளைக்க வேண்டும். அது நன்கு விளைவதற்கு அனுபவமும், மொழியும், கருத்தறமும் துணைப் பொருட்கள். அன்றாடம் தொகுப்புக்கு ஒரு குறிப்புண்டு. பெரும்பாலான கதைகள் கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை. வேறு வேறு களங்களில் எழுதிப் பார்த்திட முனைந்தவை. ஒருசேர பார்க்கையில் இதில் காமத்தையும் சாதியிழிவையும் பிணைத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன். புவி முழுமைக்கும் காமம் மனிதனை உந்தும் காரணியாக இருக்கிறது. இந்தியாவில் காமத்தோடு சேர்ந்து சாதியும் மனிதரை இயக்குக்கிறது. இரண்டும் இணையும் உளவியல் புள்ளிகள் முக்கியமானவை. இரண்டின் விளைவுகளும் தீவிரமானவையாகவும் குரூரமாய் அலைக்கழிப்பவையாகவும் உள்ளன. இக் கதைகளுக்கு ஆனந்த விகடன், உயிர்மை, தலித், நீலம் ஆகிய இதழ்கள் தமது பக்கங்களை அளித்தன.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063481195,"sku":"BK2089","price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/andradam.jpg?v=1787941872"},{"product_id":"anna-karinea","title":"அன்னா கரீனினா","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063546731,"sku":"BK2090","price":960.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/anna-karinea.jpg?v=1787941872"},{"product_id":"ariyappadaatha-tamizhagam","title":"அறியப்படாத தமிழகம்","description":"\u003cp\u003eவாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் 'பழமை பாராட்டுதல்' அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான். இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் சிந்திப்பதற்குரிய சில களங்களை நோக்கிக் கை காட்டுகின்றன. இன்று படைப்பு உணர்வைவிட 'விற்பனை உணர்வே' சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும் தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன. தனது 'விஞ்ஞானக் கண்ணால்' திரைப்படத்துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறமாக நுகர்வியம் என்னும் வாங்கும் உணர்வைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன. உண்மையில் எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும். பிறந்தவனல்லன்; ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன். கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தாம். என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும் என் தேடல் மனிதனை நோக்கியே. தொ.பரமசிவன்\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063612267,"sku":"BK2091","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ariyappadaatha-tamizhagam.jpg?v=1787941872"},{"product_id":"aruvadai","title":"அறுவடை","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063677803,"sku":"BK2092","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aruvadai.jpg?v=1787941872"},{"product_id":"asadan","title":"அசடன்","description":"\u003cp\u003eஅசடன் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம். ஏ. சுசீலா): தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது. அசடன் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு. இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல். நான்குமுறை இந்த நாவல் படமாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா அவரது பார்வையில் இதைப் படமாக்கியிருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரான மணிக்கௌல் இதை இந்தியில் தொலைக்காட்சிக்கான குறும்படமாக உருவாக்கியிருக்கிறார். ஆங்கிலத்தில் பனிரெண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் இந்தநாவலுக்கு உள்ளன. - எஸ். ராமகிருஷ்ணன்\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063776107,"sku":"BK2093","price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/asadan.jpg?v=1787941871"},{"product_id":"athika-sathikku-mattumey-periyar","title":"ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?","description":"\u003cp\u003eஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - ப. திருமாவேலன் :\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063841643,"sku":"BK2094","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/athika-sathikku-mattumey-periyar.jpg?v=1787941872"},{"product_id":"avadoor","title":"அவதூதர்","description":"\u003cp\u003eஅவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும் போது சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும். பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்துவரவில்லை என்றார்கள். இந்த நம்பிக்கைகள், அதிசயங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன்.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063907179,"sku":"BK2095","price":192.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/avadoor.jpg?v=1787941871"},{"product_id":"avan-eppothu-thaththavanaan","title":"அவன் எப்போது தாத்தாவானான்","description":"\u003cp\u003eஅவன் எப்போது தாத்தாவானான் தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது. தன் நெடிய கவித்துவப் பயணத்தில் தனக்கென ஒரு தனித்துவமிக்க கவிதை மொழியை வசப்படுத்திய படைப்பு மேதை. அவருடைய பிரத்தியேக அடையாளங்கள் கொண்ட அம்மொழி, எளிமையின் அழகும் வசீகரமும் கூடியது. படைப்பு மனத்தின் ஸ்ருதி கூடிய இசை மொழியே இவருடைய கவிதை மொழி. நம்மைத் தொட்டு மீட்டக்கூடியது. மாயமாய் நம்மால் தொட்டுரணரக் கூடியது. கண்களால் கேட்கப்படும் கவிமொழி இவருடையது. இதை உறுதிப்படுத்தும் மற்றுமொரு தொகுப்பு இது.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782063972715,"sku":"BK2096","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/avan-eppothu-thaththavanaan.jpg?v=1787941872"},{"product_id":"avan-aanadhu","title":"அவன் ஆனது","description":"\u003cp\u003eஅவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064071019,"sku":"BK2097","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/avan-aanadhu.jpg?v=1787941872"},{"product_id":"avaravar-paadu","title":"அவரவர் பாடு","description":"\u003cp\u003eஎனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064136555,"sku":"BK2098","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/avaravar-paadu.jpg?v=1787941871"},{"product_id":"azhagarkovil","title":"அழகர் கோயில்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064202091,"sku":"BK2099","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/azhagarkovil.jpg?v=1787941872"},{"product_id":"azhagiya-periyavan-kadhaikal","title":"அழகிய பெரியவன் கதைகள்","description":"\u003cp\u003eஅழகிய பெரியவன் கதைகள் அழகியபெரியவனின் அரசியல் நம்பிக்கையும் கலை நம்பிக்கையும் ஒன்றோடொன்று முயங்கி, ஒன்றுக் கொன்று அனுசரணையாக அமைந்திருக்கும் ஒரு பெறுமதியான உறவில் இவருடைய கதைகள் உரு வாகியிருக்கின்றன. கதையுலகின் உள்ளார்ந்த தீவிரத் திலும் கதையாடலின் உயரிய கலை எழுச்சியிலும் உயிர்கொண்டிருக்கும் கதைகள் இவை. நம் மண்டை யோட்டைப் பிளக்கும் கதை உலகமானது, படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் உருப்பெற்றிருக்கிறது. இன்றைய தமிழ்க்கதைப் பரப்பில் அழகியபெரியவன் தனித்துவமும் ஆற்றலும் கூடிய ஒரு சக்தி. தன் காலத் தோடும் வரலாற்றோடும் தன் கலை மொழியினூடாக அழகியபெரியவன் வலுவான, தீர்க்கமான உறவு கொண்டிருப்பதன் அடையாளம் இத்தொகுப்பு. - சி. மோகன்\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064267627,"sku":"BK2100","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/azhagiya-periyavan-kadhaikal.jpg?v=1787941872"},{"product_id":"brammasthiram","title":"பிரம்மாஸ்திரம்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064333163,"sku":"BK2101","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/brammasthiram.jpg?v=1787941871"},{"product_id":"c-mohan-katturaigal","title":"சி.மோகன் கட்டுரைகள்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064398699,"sku":"BK2102","price":352.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/c-mohan-katturaigal.jpg?v=1787941873"},{"product_id":"cichily","title":"சிச்சிலி","description":"\u003cp\u003eசிச்சிலி லீனா மணிமேகலையின் புதிய கவிதைத் தொகுப்பு\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064464235,"sku":"BK2103","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/cichily.jpg?v=1787941872"},{"product_id":"cinemavil-enadhu-vazhkkai","title":"சினிமாவில் எனது வாழ்க்கை","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064529771,"sku":"BK2104","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/cinemavil-enadhu-vazhkkai.jpg?v=1787941872"},{"product_id":"deivam-enpadhor","title":"தெய்வம் என்பதோர் (நற்றிணை பதிப்பகம்)","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064562539,"sku":"BK2105","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/deivam-enpadhor.jpg?v=1787941871"},{"product_id":"deivangalum-samooga-marabugalum","title":"தெய்வங்களும் சமூக மரபுகளும்","description":"\u003cp\u003eதோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு எவரும் சொல்லிவிடலாம். வெள்ளைச்சாமி, வெள்ளைக்கண்ணு முதலிய பெயர்களின் தொடர்ச்சியில் அதன் எச்சங்கள் நிலவுவதைத் தொ.ப.தான் கண்டுகாட்ட முடியும். கள்ளழகர் என்பது மாயனின் கள்ள அழகு வழிப்பட்டதென்பது பௌராணிகம். ஆனால் கள்ளர் சமூகத்தார்க்கும் அழகருக்குமான தொடர்பில் முகிழ்த்தவர் கள்ளழகர் என்பதைத் தொ.ப. கள ஆய்வின் மூலம் கண்டு வரலாற்றுப் பின்னணி தேடி நிறுவுகிறார். தமிழ் வைணவம் வைதிகப் பிடிக்கு வெளியே பரவிய விதத்திற்கு, திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் மீனவர் மாப்பிள்ளையாகத் திருமலைராயன் பட்டினம் எழுந்தருளும் விழாவும் ஒரு சான்று என விவரிக்கிறார் தொ.ப.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064595307,"sku":"BK2106","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/deivangalum-samooga-marabugalum.jpg?v=1787941872"},{"product_id":"deivangal-peigal-devargal","title":"தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்","description":"\u003cp\u003eஇத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு,அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். தென்தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் குலதெய்வத்தின் கதையை இதில் கண்டுகொள்ளக்கூடும்.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064628075,"sku":"BK2107","price":224.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/deivangal-peigal-devargal.jpg?v=1787941871"},{"product_id":"dostoevsky-kathaigal","title":"தஸ்தயெவ்ஸ்கி கதைகள்","description":"\u003cp\u003eமனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை,- அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களை எழுத்தென்னும் சிற்றகலால் துலக்கி அவற்றின் மீது மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி, தஸ்தயெவ்ஸ்கி. அவரது ஒவ்வொரு படைப்பையும் படிக்கும் கணமும், அதைவிட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை. தஸ்தயெவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை, அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம். திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே. - எம்.ஏ. சுசீலா\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064660843,"sku":"BK2108","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/dostoevsky-kathaigal.jpg?v=1787941872"},{"product_id":"elaam-ulagam","title":"ஏழாம் உலகம் (ஜெயமோகன்)","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064693611,"sku":"BK2109","price":224.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/elaam-ulagam.jpg?v=1787941872"},{"product_id":"en-payanam","title":"என் பயணம்","description":"\u003cp\u003eஇத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் பேட்டிகளும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் இவை அனைத்திற்கும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இவை எல்லாமே என்னைப் பற்றியது. - அசோகமித்திரன்\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064726379,"sku":"BK2110","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/en-payanam.jpg?v=1787941872"},{"product_id":"en-sariththiram-natrinai-pathippagam","title":"என் சரித்திரம்(Old)","description":"\u003cp\u003e‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல் இது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் தமிழ்த் தாத்தா. காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இழந்தவை போனாலும், எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தமிழ்த் தலைமுறையின் பார்வைக்கு எடுத்து வந்தவர் நம் தமிழ்த் தாத்தா அவர்களே! கல்தோன்றும் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ் மொழி, இன்றைக்கும் இளமை குன்றாமல் இருப்பதற்கு தமிழ் அறிஞர்களின் தமிழ் மொழி மீதான அர்ப்பணிப்புதான் முக்கியக் காரணம். தமிழுக்காகவே தன்னை வார்த்துக் கொண்ட அறிஞர் பெருமக்களில் தனித்து நிற்பவர் உ.வே.சா. தமிழின் தொன்மைக்கும் உண்மைக்கும் உ.வே.சா.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064791915,"sku":"BK2111","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/en-sariththiram-natrinai-pathippagam.jpg?v=1787941872"},{"product_id":"en-saritthiram-u-ve-sa","title":"என் சரித்திரம்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064824683,"sku":"BK2112","price":232.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/en-saritthiram-u-ve-sa.jpg?v=1787941872"},{"product_id":"en-thalaikkumel-sarakondrai","title":"என் தலைக்குமேல் சரக்கொன்றை","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064857451,"sku":"BK2113","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/en-thalaikkumel-sarakondrai.jpg?v=1787941872"},{"product_id":"esthar","title":"எஸ்தர்","description":"\u003cp\u003e1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். \"பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்\" என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல்வேலிக்குப் போனார். அப்போது சிறுகதைத் தொகுப்பு வரவேண்டுமென்ற ஆசையைவிட வேலை கிடைக்கவேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருந்தது. வேலை தேடி அல்லாடிக் கொண்டிருந்தேன். சிறுகதைகளை விக்ரமாதித்யன் வாங்கிச் சென்றதெல்லாம் மறந்தே போய்விட்டது. இரண்டு மாதம் கழித்து எனது சென்னை முகவரிக்கு எஸ்தர் பிரதிகள் தபாலில் வந்துசேர்ந்தன. ஆச்சரியமாக இருந்தது எஸ்தர் தொகுப்பு தமிழிலக்கிய உலகத்தில் நான் எதிர் பார்த்திராத அளவுக்கு முக்கியத்துவமும் பெற்றுவிட்டது. -வண்ணநிலவன்\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064890219,"sku":"BK2114","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/esthar.jpg?v=1787941872"},{"product_id":"ethu-kalvi","title":"எது கல்வி?","description":"\u003cp\u003eநல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான். நான் அடிக்கடி மேற்கோளிடும் ஒன்றை இங்கும் பதிவது அவசியம் என்று படுகிறது. யுனெஸ்கோவின் ஓர் அறிக்கை ‘the purpose of education is to include the excluded’ என்று சொல்கிறது. ‘கல்வி மறுக்கப்பட்ட ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வருவதே கல்வியின் நோக்கம்’ - நூலிலிருந்து\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064922987,"sku":"BK2115","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ethu-kalvi.jpg?v=1787941872"},{"product_id":"ezhu-per","title":"ஏழு பேர்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064955755,"sku":"BK2116","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ezhu-per.jpg?v=1787941871"},{"product_id":"gopikrishnan-padaipugal","title":"கோபிகிருஷ்ணன் படைப்புகள்","description":"\u003cp\u003eகோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782064988523,"sku":"BK2117","price":792.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/gopikrishnan-padaipugal.jpg?v=1787941872"},{"product_id":"gragangalai-thurathupavan","title":"கிரகங்களைத் துரத்துபவன்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782065021291,"sku":"BK2118","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/gragangalai-thurathupavan.jpg?v=1787941872"},{"product_id":"indhu-thesiyam","title":"இந்து தேசியம்","description":"\u003cp\u003e• நான் இந்துவல்ல நீங்கள்...? • சங்கர மடம் - தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள். • இந்து தேசியம். • இதுதான் பார்ப்பனியம். • புனா ஒப்பந்தம் ஒரு சோகக் கதை. \u0026gt;\u0026gt; இந்த ஐந்து குறுநூல்களின் தொகுப்பு இப்பொழுது ஏன் வெளிவருகின்றது என்பதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள். மாறிவரும் சமூக, அரசியல் சூழலில் ஓர் ஒற்றைக் கலாச்சாரத்தை முன்னிறுத்தல் என்பது இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரானது. அதற்கு வைதீகம், பாரத கலாச்சாரம், பார்ப்பனியம், வேதாந்தம், இந்துத்துவம் என்று பல பெயர்கள் வழங்கி வருகின்றன. இப்படிப் பல பெயர்களில் வழங்கி வரும் இந்தச் சித்தாந்தத்தைத் தோலுரித்துப் பார்க்கவும், காட்டவும் நான் செய்த சிறு சிறு முயற்சிகளே இந்தக் குறுநூல்கள் ஆகும்.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782065054059,"sku":"BK2119","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/indhu-thesiyam.jpg?v=1787941872"},{"product_id":"inthiya-thathuva-iyalil-nilaithirupanavum-azhinthanavum","title":"இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782065086827,"sku":"BK2120","price":624.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/inthiya-thathuva-iyalil-nilaithirupanavum-azhinthanavum.jpg?v=1787941873"},{"product_id":"irandu-kizhavarkal","title":"இரண்டு கிழவர்கள்","description":"\u003cp\u003eரஷ்ய இலக்கியத்தின் சிகரமாக டால்ஸ்டாய் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அவரது போரும் வாழ்வும் நாவலும் அன்னா கரீனினா நாவலும் உலக இலக்கியங்களில் மிகச் சிறந்ததாக இன்றும் போற்றப்படுகிறது. கிறிஸ்தவ சபையின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதைவிட பிற மனிதர்களையும் கடவுளையும் நேசிப்பதும், அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்வதுமே முக்கியமானது என்பதில் டால்ஸ்டாய் உறுதியாக இருந்தார். தனிப்பட்ட நபர்களின் நில உடைமை, திருமண முறை ஆகியவற்றை அவர் சாடினார். மனித வாழ்க்கையில் அன்பே பிரதானம் என்பதை அவர் தனது வாழ்நாளின் கடைசிவரையிலும் வலியுறுத்தி வந்தார். அவருடைய படைப்புகள் அனைத்தும் அதையே பறைசாற்றுகின்றன. என்பதை இவற்றை வாசிப்போர் உணர்ந்துகொள்ள முடியும். டால்ஸ்டாயின் ஆகச்சிறந்த கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் இந்தக் கதைகளைப் பொக்கிஷமாகக் கொண்டாடுகிறார்கள். எனவே இவற்றைச் சரளமான தமிழில் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எனது ஆசை இந்நூலின் வாயிலாக நிறைவேறியுள்ளது.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782065119595,"sku":"BK2121","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/irandu-kizhavarkal.jpg?v=1787941872"},{"product_id":"irataiyar","title":"இரட்டையர்","description":"\u003cp\u003eஇரட்டையர் - ஃபியோதர் தஸ்தவ்ஸ்கி :( தமிழில் - எம்.ஏ. சுசீலா) இரட்டை மனிதர்ன் உட்பட நாவலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் உண்மை எது. கற்பிதம் எது என்று எதையுமே தெளிவுபட வரையறுத்துச் சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கிய தொனியில் மட்டுமே இந்த நாவலின் தொனியை அமைத்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782065152363,"sku":"BK2122","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/irataiyar.jpg?v=1787941872"},{"product_id":"ithuvae-sananayakam","title":"இதுவே சனநாயகம்!","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782065185131,"sku":"BK2123","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ithuvae-sananayakam.jpg?v=1787941872"},{"product_id":"ivaan","title":"இவான்","description":"","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782065250667,"sku":"BK2124","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ivaan.jpg?v=1787941872"},{"product_id":"ivar-tamizhar-illai-endraal-evar-tamizhar","title":"இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் (2 பாகங்கள்)","description":"\u003cp\u003e\u0026gt;\u0026gt;அவர் ஆரியம் விலக்கிய தமிழையே விரும்பினார்! அவர் முன்வைத்த சமூகநீதித் தத்துவம் என்பது தமிழர்கள் அதிகாரம் பெற்று உன்னதமான இடத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டது!. \u0026gt;\u0026gt;அவர் கேட்ட தமிழ்நாடு என்பது தன்னிறைவு பெற்ற முழுமையான தமிழ்த் தேசமே! ஆனால் இன்று அவர் சிலரால் துரோகியாக அடையாளம் காட்டப்படுகிறார். யாருக்கும் எவருக்கும் துரோகம் செய்து வாழ வேண்டிய வாழ்க்கை முறை அவருக்கு இல்லை. \u0026gt;\u0026gt;அவரை விமாசிப்பவர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய சூழல் இருக்கலாம்! அவர் குறித்த அறியாமையால் சில தமிழ்ப்போலிகள் தமிழ்க்களத்தை நாசம் செய்து வருகிறார்கள். அந்த அவதூறுகளுக்கான பதிலே இது! அவர் வாழ்ந்த காலத்து குடிஅரசு, விடுதலை இதழ்களின் நேரடி பதில்கள் இவை! 75 ஆண்டுகாலம் வெளியான பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் இருந்து இந்தப் பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது! \u0026gt;\u0026gt;அவர் குறித்த வரலாறு மட்டுமல்ல. அவரைச் சுற்றிலும் 100 ஆண்டுகால அரசியல் இலக்கியக் களங்களின் வரலாறு! அவரோடு சேர்த்து தமிழறிஞர் அனைவரையும் நீங்கள் அறியலாம்! \u0026gt;\u0026gt;சிறியர் கிளப்பிய அவதூறுகளின் மூலமாக உண்மைப் பெரியாரை உணர்த்துகிறது இந்த நூல்!\u003c\/p\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53782065283435,"sku":"BK2125","price":1440.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ivar-tamizhar-illai-endraal-evar-tamizhar.jpg?v=1787941872"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/Nattranai.jpg?v=1788067611","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/nattranai-pathippagam.oembed?page=2","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}