{"title":"Kizhakku-veliyeedu","description":null,"products":[{"product_id":"itliyaka-irunkal-emoshanal-intelijens-2-0","title":"இட்லியாக இருங்கள்-எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0","description":"\u003cp\u003eஇட்லியாக இருங்கள் நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது? இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?இதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்! ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம்! அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்! இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.உங்கள் அபார வெற்றியின் வாசலை இங்கே திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன்.'இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: சாணக்கியன் - 09-01-10 எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம்.அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது. ‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784684003691,"sku":"BK2260","price":308.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"pirapala-kolai-vazhakkukal-pakam-1-2","title":"பிரபல கொலை வழக்குகள் பாகம் 1 \u0026 2","description":"\u003cp\u003eபிரபல கொலை வழக்குகள்பாகம்1 எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது?இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள்.ஜின்னா, ஒரு கொலை வழக்கில் வாதாடியதும் அதில் தோற்றுப்போனதும் தெரியுமா?தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்?சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ஒரு டிரங்குப் பெட்டியில், தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாட்களில், தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக மாறி பார்வையாளர்களைக் கிடுகிடுக்க வைத்தது இந்தக் கொலைச்சம்பவம். முழு விவரங்கள் உள்ளே.க்ரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான?பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.?இந்த வழக்குகளை வழக்கறிஞர் குக. சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில்?நமக்கு அறிமுகம் செய்கிறார். பிரபல கொலை வழக்குகள் - பாகம் 2 மதுரை நாயக்கரின் வீட்டின் புறக்கடையில் உள்ள வடிகாலில் அடைப்பு. சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடியை அகற்றிவிட்டு உள்ளே பார்த்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் இடது கை விரல்களும் குழந்தையின் தலையும் தெரிந்தது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஈச்ச இலையில் சுற்றிக் கட்டப்பட்ட பார்சல் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஏற்றப்பட்டது. பிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு பெண்ணின் சடலம். சென்னை மந்தைவெளியில் பேருந்தின் கடைசி இருக்கையின் அடியில் ஒரு வெள்ளை நிற பாலித்தீன் பை கண்டெடுக்கப்பட்டது. உள்ளே ரத்தக்கறையுடன் தலையில்லாத உடல். ... நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் பத்து படுகொலைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. கொலை நடந்த நொடியில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்ட நொடி வரை நடந்தவை அனைத்தையும் படு துல்லியமாக, முழு ஆதாரங்களுடன் விறுவிறுப்பான மொழி நடையில் ஒரு திரைப்படம் போல் கண் முன்னே விரியச் செய்கிறார் எஸ்.பி. சொக்கலிங்கம். எழுத்தாளராக மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும் இருப்பதால் சட்டங்கள், நீதி மன்ற விசாரணைகள் தொடர்பான நுட்பமான விவரங்களையும் கவனமாகப் பதிவு செய்கிறார். வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பகுதி இது. பத்து த்ரில்லர் படங்களை ஒரே நேரத்தில் பார்க்கத் தயாராகுங்கள்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784684953963,"sku":"BK2286","price":324.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"muthal-ulakappor-irantam-ulakap-por","title":"முதல் உலகப்போர்-இரண்டாம் உலகப் போர்","description":"\u003cp\u003eமுதல் உலகப்போர் உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது.முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்? ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா?இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும், இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும், ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்ற-தற்குமான மூல காரணம், முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது, விளைவு.மருதனின் இந்தப் புத்தகம், முதல் உலகப் போரின் அரசியல், சமூக, ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது. இரண்டாம் உலகப் போர் மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது.சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்-பட்ட மிருகத்தனம்.அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:ராஜராஜன் - 16-09-09\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784687378795,"sku":"BK2316","price":600.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"elan-mask-stiv-japs","title":"எலான் மஸ்க் -ஸ்டீவ் ஜாப்ஸ்","description":"\u003cp\u003eஎலான் மஸ்க் - கனவு நாயகன் ஒரு பிரிவினருக்கு அவர் மீட்பர் என்றால் இன்னொரு பிரிவினருக்கு அவர் சாத்தான். மாபெரும் கனவுகளை விதைப்பவர் என்று ஒரு சாராரும் பொருளற்றுப் பிதற்றுபவர் என்று இன்னொரு சாராரும் அவரை மதிப்பிடுகின்றனர். இருவரும் ஒத்துப்போகும் புள்ளி ஒன்றுதான். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது எலான் மஸ்க்கின் நூற்றாண்டில். நம் வாழ்வையும் சிந்தனைகளையும் வேறெவரையும்விட அதிகம் பாதித்துக்கொண்டிருப்பவர் அவர்தான். சாகசங்களும் சர்ச்சைகளும் நிறைந்து தளும்பும் துடிதுடிப்பான வாழ்க்கை அவருடையது. மஸ்க் தொட்டதெல்லாம் மின்னுகிறது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ட்விட்டர் என்று தொடங்கி இவர் உள்ளங்கைக்குள் குவிந்திருக்கும் நிறுவனங்களின் சாதனைகள் திகைப்பூட்டுபவை. எப்போதும் மீடியா வெளிச்சத்தில் இருப்பதால் அவருடைய ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு நகர்வும் பல கோடிப் பேரால் கணந்தோறும் கண்காணிக்கப்படுகிறது. அவருடைய வெற்றிகளைவிட அவர் வளர்த்து வைத்திருக்கும் கனவுகள் முக்கியமானவை. ஒட்டுமொத்த மனித குலத்தையும் வேறொரு தளத்துக்கு உயர்த்திக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் அவரிடம் உள்ளன. செவ்வாய் கிரகத்தை நாம் வெல்லப்போகிறோம், விரைவில் அங்கு குடியேறப்போகிறோம் என்று உறுதியாக நம்புகிறார் மஸ்க். எதிர்காலம் என்பது வேறொன்றுமில்லை, அது நான்தான் என்று அமைதியாக அறிவிக்கிறார். எலான் மஸ்க்கின் போராட்டங்கள், கனவுகள், பாய்ச்சல்கள், சறுக்கல்கள் அனைத்தையும் அட்டகாசமாக இந்நூலில் காட்சிப்படுத்துகிறார் நன்மாறன் திருநாவுக்கரசு. ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தேகமேயில்லாமல் இந்த நூற்றாண்டின் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகம் முழுக்க அவர் பெயர் இன்று அத்துப்படி. அவருடைய ஆப்பிள் தாயாரிப்புகள் பரவாத இடம் பூமியில் இல்லை.உலகப் புகழ்பெற்ற மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றைக் கட்டியெழுப்பியவராக மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் அசாதாரணமான ஒரு வெற்றியாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்று கொண்டாடப்படுகிறார். ஆப்பிள் என்னும் நிறுவனத்தின் பிறப்பும் வளர்ச்சியும் மட்டுமல்ல ஸ்டீவ் ஜாப்ஸின் பிறப்பும் வளர்ச்சியும்கூட திகைக்கவைக்கக் கூடியது. எந்தவொரு திரைப்படத்தையும் விஞ்சும் திருப்புமுனைகளைக் கொண்டது அவருடைய வாழ்க்கை. அதில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் மட்டுமல்ல, சர்ச்சைகளும் சறுக்கல்களும்கூட கலந்திருக்கின்றன. வசதியான பின்னணியெல்லாம் இல்லை அவருக்கு. பெரும் படிப்பாளி என்றும் அவரை அழைக்க முடியாது.நூறு சதவிகிதம் ஒழுக்கமான, தூய்மையான மனிதர் என்றும் அவரைச் சொல்லி விட முடியாது. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸிடம் இளம் வயதிலேயே ஓர் பெரும் கனவு இருந்தது. அதைத் துரத்திச் செல்லும் துணிவும் இருந்தது.ஆப்பிள் என்னும் அதிசயம் சாத்தியமானதற்குக் காரணம் அதுதான். ஸ்டீவ் ஜாப்ஸின் பிரமிப்பூட்டும் வாழ்வையும் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக் கதையையும் ஒன்று சேர்த்து இந்தப் புத்தகத்தில் வழங்குகிறார் அப்பு. இப்படியொருவரால் நிஜமாகவே வாழ முடியுமா என்னும் திகைப்பையும் மயக்கத்தையும் இந்தப் புத்தகம் உங்களுக்கு ஏற்படுத்தப்போவது உறுதி\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784688296299,"sku":"BK2344","price":568.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"nattuk-kanakku-2-thokuthikal","title":"நாட்டுக் கணக்கு 2 தொகுதிகள்","description":"\u003cp\u003eநாட்டுக் கணக்கு பாகம் 1 வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். தவறு. நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்? உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது? அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது? அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது? சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது? அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா? எனில் யாரிடமிருந்து? அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா? அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா? ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்? இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன். நம் தேசத்தின் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்துக்கொள்வது நம் உரிமை. ஒரு குடிமகனாக அது நம் கடமையும்கூட. நாட்டுக்கணக்கு பாகம்-2 இந்தியா ஒளிர்கிறது, இந்தியாதான் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்றெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள். அதே நேரம், விலைவாசி உயர்வு, பட்ஜெட் பற்றாக்குறை, பெட்ரோல் டீசல் விலைகள் கடும் உயர்வு, புயல்பாதிப்புக்கு நிவாரணம், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யக் கோரிக்கை, தள்ளுபடி போன்ற செய்திகளும் அடிக்கடி காதில் விழுகின்றன. ஆக, பொருளாதாரம் என்பது ஏதோ பேராசிரியர்களும், வல்லுனர்களும், ஆட்சியார்களும் மட்டும் தெரிந்துகொள்கிற, விவாதிக்கிற விஷயம் இல்லை. அது குறித்து அனைவருமே தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. தெரிந்துகொள்ள விருப்பம்தான். ஆனால் எழுதப்படுவன புரிந்துகொள்ளும்விதமாக இல்லையே என்ற புகார்களும் இல்லாமல் இல்லை. அந்தக் கூற்றைப் பொய்யாக்கியவர் டாக்டர் சோம வள்ளியப்பன். பங்குச்சந்தைகள் குறித்ததுமட்டுமல்லாமல், நாட்டு நிகழ்வுகள் மற்றும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பட்ஜெட், கச்சா எண்ணை விலை, டாலர் மதிப்பு, வங்கி வட்டி விகிதங்கள், வருமான வரி, ஜி.எஸ்.டி. போன்றவை குறித்து, தொடர்ந்து வெகுஜன பத்திரிக்கைகள் மற்றும் நாளிதழ்களில் பாமரருக்கும் புரியும் விதம் எழுதிக்கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க பொருளாதாரம் குறித்து, 'சிக்ஸ்த்சென்ஸ்'க்காக சோம வள்ளியப்பன் எழுதிய நாட்டுக்கணக்கு, வாசகர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று பல பதிப்புகள் கண்டிருப்பதைத் தொடர்ந்து, 2004 தொடங்கி 2018 வரை பல்வேறு இதழ்களில் இந்தியாவின் பொருளாதார நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய 59 கட்டுரைகள், நாட்டுக்கணக்கு- 2 ஆக வெளிவருகிறது. நம் நாட்டின் பொருளாதார நிகழ்வுகள் கடந்து வந்திருக்கும் பாதையை பதிவு செய்யும் ஒரு ஆவணமாக மட்டுமல்லாமல், கட்டுரைகளில் விவரிக்கப்படும் பொருள் குறித்து 2018ம் ஆண்டின் நிலை என்ன என்பதையும்- இந்திய பொருளாதாரம்: அன்றும் இன்றும்- என வாசகரே ஒப்பிட்டுப் பார்த்து, முடிவுக்கு வர உதவும் விதமாக புத்தகம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் பயன்தருகிறது. அரசியல், சமூக, பொருளாதார நோக்கர்கள், விமர்சகர்கள், மத்திய மாநில, வங்கி வேலைகளுக்கு முயற்சிப்பவர்கள் மட்டுமல்லாது, எவருக்கும் பயன்தரும் ஒரு புதிய புத்தகம்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784691507563,"sku":"BK2408","price":450.4,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"pichinas-chaikkalaji-pichinas-tips-pichinas-chikrets","title":"பிசினஸ் சைக்காலஜி-பிசினஸ் டிப்ஸ்-பிசினஸ் சீக்ரெட்ஸ்","description":"\u003cp\u003eஇதுதான் பிசினஸ், அதை இன்னின்ன வழிகளில் நடத்தினால் இன்னின்ன கிடைக்கும் என்று போதிப்பதற்கு விலையுயர்ந்த அயல்நாட்டு ஜர்னல்கள் இருக்கின்றன. சாதித்தவர்கள் எழுதி வைத்திருக்கும் சரித்திரம் மலையளவு குவிந்திருக்கிறது. கோட்பாட்டுப் புத்தகங்களுக்கும் குறைவில்லை. ஆனால் இவ்வளவையும் தேடிப் பிடித்துப் படிக்க எனக்கு அவகாசமோ பணமோ இல்லை. எனக்குத் தேவை ஒரேயொரு நூல். அதுவும் தமிழில். அதில் கோட்பாடுகளும் இருக்கவேண்டும். நடைமுறைக்கு ஒத்துவரும் விஷயங்களும் இருக்கவேண்டும். மேலைநாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைச் சொல்லவேண்டும். ஆனால் ஒரு சொல்கூடப் புரியாததாக, கடினமானதாக இருக்கக்கூடாது. அப்படியொரு நூல் கிடைக்குமா? இதுதான் உங்கள் எதிர்பார்ப்பு என்றால் உங்களுக்கான தீர்வு இந்நூல். பிசினஸ் உலகம் எப்படி இயங்குகிறது? அதில் நான் எப்படி நுழைவது? என்னை மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபடுத்திக் காட்டுவது? எனக்கான உத்திகள் வகுப்பது எப்படி? மார்க்கெட்டிங்குக்கும் சேல்ஸுக்கும் என்ன வேறுபாடு? இரண்டிலும் சிறந்து விளங்குவது எப்படி? மனித வளத்தைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி? பிசினஸ் உலகின் முக்கியமான, அடிப்படையான சீக்ரெட்ஸ் அனைத்தையும் ஜாலியான மொழிநடையில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் நம்பர் 1 பெஸ்ட் செல்லர் நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784695964011,"sku":"BK2534","price":436.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"karuppu-amerikka-amerikka-ulnattup-por","title":"கறுப்பு அமெரிக்கா-அமெரிக்க உள்நாட்டுப் போர்","description":"\u003cp\u003eகறுப்பு அமெரிக்கா அமெரிக்கா மாபெரும் ஜனநாயக நாடுதான். செல்வம் கொழிக்கும் டாலர் தேசம்தான். உலகளவில் செல்வாக்கைச் செலுத்திவரும் மாபெரும் சக்திதான். ஆனால் அதே அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின மக்கள் தலைமுறை, தலைமுறையாக ஜனநாயகமின்றி, செல்வமின்றி, செல்வாக்கின்றிக் கடுமையான பாகுபாடுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். கறுப்பின மக்கள் எப்போது, எங்கிருந்து, எதற்காக அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்கள்? அவர்களை வெள்ளை அமெரிக்கா எப்படி நடத்தியது? எப்படி அவர்களைச் சமுகத்திலிருந்து விலக்கி வைத்து, ஒடுக்கியது? குறைந்தபட்ச மனிதத்தன்மைகூட இன்றி கறுப்பின மக்களின் வாழ்வும் கனவுகளும் நொறுக்கப்பட்டது ஏன்? வானதியின் இந்நூல் கறுப்பின மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளை மட்டும் பட்டியலிடாமல் அந்த அநீதிகளை எவ்வாறு அவர்கள் ஒன்று திரண்டு எதிர்கொண்டனர் என்பதையும் தங்கள் உரிமைகளை எவ்வாறு உத்வேத்தோடு போராடி மீட்டெடுத்தனர் என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆபிரகாம் லிங்கன், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங் போன்றோரின் போராட்டங்கள் நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா என்பது கறுப்பினத்தவர்களின் தேசமும்தான். அமெரிக்க வரலாறு என்பது அவர்களுடைய வரலாறும்தான் என்பதை அழுத்தந்திருத்தமாகவும் ஆதாரபூர்வமாகவும் நிறுவும் நூல். அமெரிக்க உள்நாட்டுப் போர் அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும் கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்படை மானுடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட போர் என்பதால்தான் இது நீதியின் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரின் கதாநாயகனாக ஆபிரகாம் லிங்கன் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை இந்தப் போர் விழுங்கிவிட்டது.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784696029547,"sku":"BK2536","price":528.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"pillaiyar-chuzhi-telli-tharpar","title":"பிள்ளையார் சுழி-டெல்லி தர்பார்","description":"\u003cp\u003eபிள்ளையார் சுழி பிள்ளையார் சுழி' நடிகர் டெல்லி கணேஷின் சுயசரிதை நூல். வாழ்க்கைச் சம்பவங்களைப் பூத்தொடுப்பது போல அழகாகத் தொடுத்து எழுதப்பட்ட நூல். உண்மைச் சம்பவங்களின் பதிவுதான். ஆனால் கற்பனையாக எழுதப்பட்ட நாவலை விடவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. நூலில் ஆங்காங்கே விரவியிருக்கும் நகைச்சுவை, படிக்கும் போதே நம் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவலைத் தோற்றுவிக்கிறது. எடுத்தால் படித்து முடிக்காமல் வைக்கத் தோன்றாது. கீழே கணேசன் என்ற பெயருடைய ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பையன் விடா முயற்சியால் டெல்லி கணேஷ் என்ற நடிகராகப் பரிணமித்ததை விளக்குவதே இந்த நூல். 'திருநெல்வேலி வல்லநாடு கணேசனை, மதுரை கணேஷாக மாற்றியது டி. வி. எஸ்... மதுரை கணேசனை கார்ப்போரல் கணேஷாக மாற்றியது இந்திய விமானப்படை... ஏர்ஃபோர்ஸ்காரனை நாடகக்காரனாக மாற்றியது டெல்லியின் தக்ஷிண பாரத நாடக சபா... 'டெல்லிகணேஷ்' என்று நாமகரணம் சூட்டி நாடகக்காரனை சினிமாக்காரனாக மாற்றியது திரு. கே.பி...' என முத்தாய்ப்பாக அவர் தொகுத்துச் சொல்லும்போது படிக்கும் நமக்கே ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்ந்த நிறைவு தோன்றுகிறது. டெல்லி தர்பார் பிள்ளையார் சுழி\" மூலமாக தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, தற்போது தனது திரையுலக அனுபவங்களை \"டெல்லி தர்பாராக\" தந்திருக்கிறார் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784696422763,"sku":"BK2544","price":448.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"chikkanam-chemippu-muthalitu-panam-chila-rakachiyankal-paname-oti-va","title":"சிக்கனம் சேமிப்பு முதலீடு-பணம் சில ரகசியங்கள்-பணமே ஓடி வா","description":"\u003cp\u003eசிக்கனம் சேமிப்பு முதலீடு சம்பாதிக்கத் தெரியும் சேமிக்கத் தெரியுமா? ஒவ்வொருவருக்குமான அற்புதமான நிதி வழிகாட்டி. அதிக வருமானம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. சிக்கனத்தைக் கடைபிடித்து நிறைய சேமிக்கவேண்டும். சாமர்த்தியமாக முதலீடுகள் செய்யவேண்டும். கேட்பதற்கு மிகவும் எளிமையான யோசனைகளாகத் தோன்றும். ஆனால் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்போதுதான் ஆயிரம் சந்தேகங்கள் முளைக்கும். செலவுகள் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டிருக்கும்போது சிக்கனத்தைக் கடைபிடிப்பது எப்படி? வீட்டுக்கடனும் வண்டிக்கடனும் வங்கிக்கடனும் போட்டிப்போடும்போது சேமிப்பு எப்படிச் சாத்தியப்படும்? முதலீடு குறித்து எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எதில் முதலீடு செய்வது? சீட்டுக் கட்டுவது பாதுகாப்பானதா? பங்குச்சந்தையில் பணம் போடலாமா? தங்கம் வாங்குவது நல்ல சேமிப்பு முறையா? அல்லது காப்பீடு எடுக்கவேண்டுமா? நிர்வாகவியல் குருவும் பங்குச்சந்தை நிபுணருமான சோம. வள்ளியப்பன் இந்நூலில் அளிக்கும் யோசனைகள் நம் அச்சங்களைப் போக்கி, குழப்பங்களை விளக்கி, சரியான திசையில் நம்மை வழிநடத்துகிறது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஓர் அருமையான பொருளாதார வழிகாட்டி இது. பணம் சில ரகசியங்கள் எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்கவேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் வாசல்கள் வழியாக உள்ளே வருவதற்கும் இன்னும் ஆயிரம் வாசல்கள் வழியே வெளியில் செல்லவும் பணம் தயாராக இருக்கிறது. எந்தெந்த கதவுகளைத் திறந்துவைக்கவேண்டும்? எவற்றையெல்லாம் மூடி வைக்கவேண்டும்? பணம் ஒரு கருவி மட்டுமே. அது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் வாழ்க்கை என்பது அது மட்டுமேயல்ல என்கிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சரியான இலக்குகளை அமைத்துக்கொள்ளாவிட்டால் பணம் நம்மை, நம் பணி வாழ்வை, நம் குடும்ப உறவுகளை, நம் எதிர்காலக் கனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் சோம. வள்ளியப்பனின் இந்நூல் பணம் குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. பணமே ஓடி வா சம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தகம்தான் ‘பணமே ஓடி வா’.‘அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784696455531,"sku":"BK2545","price":396.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"nakur-rumiyin-inthiya-chufikal-varichai","title":"நாகூர் ரூமியின் இந்திய சூஃபிகள் வரிசை","description":"\u003cp\u003eதாஜுத்தீன் பாபா ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள், மிருகங்கள், மரம் மட்டை என அவரது கருணை அனைவரையும், அனைத்தையும் சென்றடைந்தது. இறந்த பிறகும் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அற்புதங்கள் சந்தேகம் கொண்ட மானிட அறிவின் நாக்குகளை வெட்டுபவையாகும். தான் வாழ்ந்த மனநலக்காப்பகத்தை மக்கள் குறை தீர்க்கும் மன்றமாகவும், நாக்பூரை தாஜ்பூராகவும் மாற்றியவர். நாக்பூரின் ஆரஞ்சுப் பழத்தைப்போல தித்திக்கும் நடையில் நாகூர் ரூமி அவரது கதையைச் சொல்கிறார். படித்துப் பாருங்கள். ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம் முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையும் அணைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உள்ளது. அதனால்தான் மேற்குலக நாடுகளும் அறிந்துகொள்ளும் வண்ணம் சூஃபித்துவத்தை அங்கு அறிமுகப்படுத்தினார் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல். சத்தியத்தின் பாதை எந்த மதத்துக்கும் சொந்தமானதல்ல என்னும் கொள்கை கொண்ட ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அதை மானுடத்தின் கரங்களில் ஒப்படைத்து விடவேண்டும் என்பதையே தன் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தார். நாகூர் ரூமியின் இந்நூல் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூலின் அற்புதமான வாழ்வையும் அவருடைய ஞானத் தேடல்களையும் எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது. இந்திய சூஃபி மெய்யியல் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்நூல். ஷாஹ் வலியுல்லாஹ் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேதைகளில், மாபெரும் இஸ்லாமிய ஆளுமைகளில் ஒருவர் ஷாஹ் வலியுல்லாஹ். அவர் ஒரு மேதைமட்டுமல்ல, கல்வியாளர், சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளர். எல்லாவற்றுக்கும் மேலாக ஞானிகளின் குடும்பத்தில் பிறந்த இறைநேசர். இந்தியாவில், அல்லது உலகில், முதன் முதலாகத் திருக்குர்’ஆனை அரபியிலிருந்து பாரசீகத்துக்கு மொழிபெயர்த்தவர். மார்க்கத்தின் அகமியங்களை விளக்கி அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஆட்சியாளர்களால் மதிக்கப்பட்டவர், அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லக்கூடியவர். ரஹீமிய்யா என்று ஒரு மார்க்கக்கல்லூரியை நடத்திக்கொண்டே இதெல்லாம் செய்தவர்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784696652139,"sku":"BK2551","price":832.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"charavanan-chanthiranin-puththakankal","title":"சரவணன் சந்திரனின் புத்தகங்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் சரவணன் சந்திரன் புத்தகங்கள்\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784696684907,"sku":"BK2552","price":1724.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"ariviyal-ethu-en-eppati-2-pakankal","title":"அறிவியல்: எது? ஏன்? எப்படி? - 2 பாகங்கள்","description":"\u003cp\u003eஅறிவியல்: எது? ஏன்? எப்படி? - பாகம் 1 நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன? இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள்மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம்? இயற்பியலும் உயிரியலும் புவியியலும் நம் அறிவை எப்படி விசாலமாக்குகின்றன?அணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலம் முதல் ஆகாயம்வரை; ரத்தம் முதல் மூளை வரை; ஓசோன் முதல் பொலோனியம் வரை; பனிக்கட்டி முதல் எரிமலை வரை; நிலா முதல் ரோபோ வரை. அனைத்தையும் மிகவும் எளிமையாக, ரசிக்கும்படி அறிமுகப்படுத்துகிறது இந்த அறிவியல் பெட்டகம்.இந்நூல் அறிமுகப்படுத்தும் அறிவியல் அடிப்படைகளைக் கற்பதன்மூலம் நம் சிந்தனைகள் அழகாகும்; நம் பார்வை விசாலமடையும்; இந்த உலகமே நம் பார்வையில் வண்ணமயமாக மாற்றம் பெறும்.இனிமையான எழுத்து நடை. ஆதாரபூர்வமான தகவல்கள். இரண்டு பாகங்களில் வெளிவரும் மினி அறிவியல் என்சைக்ளோபீடியா.அனைத்து முன்னணி இதழ்களிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கட்டுரைகள் எழுதிவரும் என். ராமதுரை தினமணி சுடர் என்னும் அறிவியல் வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். தினமணி சிறுவர் மணியில் அணுசக்தி, சூரிய மண்டலம் குறித்து தொடர்கள் எழுதியிருக்கிறார். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். அறிவியல்: எது? ஏன்? எப்படி? - பாகம் 2 நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன? இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள்மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம்? இயற்பியலும் உயிரியலும் புவியியலும் நம் அறிவை எப்படி விசாலமாக்குகின்றன?அணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலம் முதல் ஆகாயம்வரை; ரத்தம் முதல் மூளை வரை; ஓசோன் முதல் பொலோனியம் வரை; பனிக்கட்டி முதல் எரிமலை வரை; நிலா முதல் ரோபோ வரை. அனைத்தையும் மிகவும் எளிமையாக, ரசிக்கும்படி அறிமுகப்படுத்துகிறது இந்த அறிவியல் பெட்டகம்.இந்நூல் அறிமுகப்படுத்தும் அறிவியல் அடிப்படைகளைக் கற்பதன்மூலம் நம் சிந்தனைகள் அழகாகும்; நம் பார்வை விசாலமடையும்; இந்த உலகமே நம் பார்வையில் வண்ணமயமாக மாற்றம் பெறும்.இனிமையான எழுத்து நடை. ஆதாரபூர்வமான தகவல்கள். இரண்டு பாகங்களில் வெளிவரும் மினி அறிவியல் என்சைக்ளோபீடியா.அனைத்து முன்னணி இதழ்களிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கட்டுரைகள் எழுதிவரும் என். ராமதுரை தினமணி சுடர் என்னும் அறிவியல் வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். தினமணி சிறுவர் மணியில் அணுசக்தி, சூரிய மண்டலம் குறித்து தொடர்கள் எழுதியிருக்கிறார். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784696848747,"sku":"BK2557","price":496.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"the-idea-called-malai","title":"அண்ணாமலை எனும் திருப்புமுனை","description":"\u003cp\u003eஅண்ணாமலை எனும் திருப்புமுனை சமூக நலனில் அதிக அக்கறைகொள்ளவும் பாரதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்யவும் இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் முன்வர இந்தப் புத்தகம் உந்துவிசையாக இருக்கும்.’ - சாய் தீபக் அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது. - அரவிந்தன் நீலகண்டன் ஒரு தவறான அரசியல்வாதி தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அவருடைய அல்லது அந்தக் கட்சியின் பிரச்னை. எல்லா மக்கள் பிரதிநிதிகளுமே மோசமானவர்கள்தான்; எல்லா நேரங்களிலும் எல்லா தேர்தல்களிலும் அப்படித்தான் என்று சொன்னால் பிரச்னை நம் மீதுதான் இருக்கிறது. பழியை அரசியல்வாதிகள் மீது போட்டுவிட்டு நாம் தப்பிக்கமுடியாது. இந்நிலைக்கு மாற்று எதுவும் இல்லை. அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். அப்படி வாக்காளர்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பதென்பது நீண்ட நெடிய பயணம். இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது. அரசியல்வாதி, கட்சி அல்லது தலைவர் எல்லாம் தாற்காலிகமே. அரசியல் விழிப்புணர்வே நிரந்தரமானது. அது ஒரு தனி நபரின் சிந்தனையாக, கருத்தாக இருந்தால் போதாது. மாற்றத்தை முன்னெடுக்கவேண்டியவர்களான நம் அனைவருடைய கூட்டு முயற்சியாகப் பரிணமிக்கவேண்டும். The Idea called Malai This title will be released around April 10, 2024. Pre-order now. This book is a peek into Annamalai's nascent journey for those who wish to understand the potential future he represents for Tamil Nadu and Bharat. I, for one, will certainly follow this journey as a keen and interested votary of the Bharatiya cause. - J. Sai Deepak Tamil Nadu needs a change. This book is about that change personified in a person as author feels in an informed and enlightened way – Annamalai. The book is unapologetic and honest with respect to what it is. The author sees a revolution of sorts happening in Tamil Nadu. He feels he should be part of it and hence this book. The book is both a narration of ‘Annamalai phenomenon’ to the vast readers it will reach. It is also a feedback to Annamalai – of not only how a sceptic-turned-admirer views Annamalai with admiration but also what he expects. The book will be an important document in ages to come as to what impact Annamalai Phenomenon had on its admirers and who those admirers are. - Aravindan Neelakandan Suresh Kumar, a Chemical Engineer, changed his professional path to IT consultancy after earning his MBA in Systems. After 15 years of successful consulting with multinational clients, he founded his firm in Nagercoil, his birthplace. In addition, he has authored two novels. He constantly expresses his political ideas on social media.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784696947051,"sku":"BK2560","price":480.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"chennai-marukantupitippu-kuvam-ataiyaru-pakkinkam-chennaiyin-nirvazhiththatainkal","title":"சென்னை மறுகண்டுபிடிப்பு-கூவம்-அடையாறு-பக்கிங்காம்:சென்னையின் நீர்வழித்தடைங்கள்","description":"\u003cp\u003eசென்னை மறுகண்டுபிடிப்பு சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் அவர்களுடைய சுவாரஸ்யமான கதைகளும்கூட இதில் அடங்கியுள்ளன. அந்த வகையில், இது சென்னையின் சரித்திரத்தை மட்டுமல்ல, அந்நகரின் நகமும் சதையுமாக விளங்கிய மனிதர்களின் வாழ்க்கையையும் ஒருங்கே சொல்கிறது.பிரபலமானவர்கள் மாத்திரமல்ல, அதிகம் அறியப்படாத முக்கிய நபர்களின் பங்களிப்பும் இதில் பதிவாகி உள்ளது. ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ், ஃபிரான்சிஸ் டே, கணித மேதை ராமானுஜன், நோபல் விஞ்ஞானி சுப்ரமணியம் சந்திரசேகர், எஸ்.எஸ். வாசன், ஜே. கிருஷ்ணமூர்த்தி, ருக்மிணி தேவி அருண்டேல், பாரதியார், பச்சையப்பர், பாரி, பின்னி இன்னும் பல.சேப்பாக்கம் மைதானம், கவர்னர் மாளிகை, உயர் நீதிமன்றம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, எல்.ஐ.சி. கட்டடம், வள்ளுவர் கோட்டம், சாந்தோம் தேவாலயம், துறைமுகம், சென்னையின் முதல் மருத்துவமனை, முதல் ஜாதிக் கலவரம், முதல் பாலியல் பலாத்கார வழக்கு, முதல் அச்சகம், முதல் திரையரங்கம் என்று சென்னையின் கச்சிதமான குறுக்குவெட்டுத் தோற்றம் இதில் இடம்பெற்றுள்ளது.இன்னமும் அறியப்படாத, இதுவரை சொல்லப்படாத சென்னையின் பல நூறு ரகசியங்களைக் கொண்டிருக்கும் இந்நூல், இந்நகரை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வரலாற்று வழிகாட்டி. சென்னையின் முறையான வரலாறு எழுதப்படவில்லை என்னும் குறையை எஸ். முத்தையா இதில் தீர்த்து வைக்கிறார். கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள் சென்னையின் நீர்வழித்தடங்களைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முதன்மையான காரணம் நவம்பர் 2015ல் பெய்த பெருமழையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும்தான்.துண்டிக்கப்பட்ட தனித் தீவாக சென்னை நகரம் மாறியபோது தவிர்க்க-இயலாதபடி, கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி, கொசஸ்தலை ஆறு, செங்குன்றம், பூண்டி போன்ற பெயர்களை ஊடகங்கள் உச்சரிக்கத் தொடங்கின. ஆண்டு தவறாமல் வறண்டு போகும் சென்னைக்கு மழை ஒரு சாபமாக மாறும் என்றோ இத்தனை பெரிய சேதத்தை இந்நகரம் சந்திக்கும் என்றோ கனவிலாவது நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? இருந்தும், இயற்கையையும் அரசியலையும் குறைகூறிய கையோடு இந்நிகழ்வை நாம் கடந்துசென்றுவிட்டோம் என்பதுதான் அனைத்தையும்விடப் பெரிய வேதனை.நாம் மறந்துவிட்ட பலவற்றை நினைவுபடுத்துவதே இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கம். பண்டைய தமிழர்கள் நீர்நிலைகளை எப்படிப் பேணினார்கள்? அழுக்குக்கு உதாரணமாகச் சொல்லப்படும் கூவத்தின் ஆரம்ப வரலாறு என்ன? பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னையின் நீர்நிலைகள் எப்படி இருந்தன? அடையாறும் பக்கிங்காம் கால்வாயும் இன்று எந்த நிலையில் உள்ளன? சென்னையின் நீர்நிலைகளை விவரித்துச் செல்லும் இந்தப் புத்தகம் ஒரு வகையில் சென்னையின் சுருக்கமான வரலாறும்கூட. சுவாரஸ்யமூட்டும் வகையில், சங்க இலக்கியம் தொடங்கி பாரதியார், பாரதிதாசன், அன்னி பெசண்ட், ம.பொ.சி என்று பலருடைய மேற்கோள்கள் இதில் இடம்-பெற்றுள்ளன.தினகரன், தினமலர், தினமணி தொடங்கி 20 ஆண்டுகால ஊடக அனுபவம் பெற்ற கோ. செங்குட்டுவன் எழுதிய இந்நூல் சென்னையை ஒரு புதிய கோணத்தில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கும்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784696979819,"sku":"BK2561","price":616.0,"currency_code":"INR","in_stock":true}]}],"url":"https:\/\/anytamilbooks.com\/collections\/kizhakku-veliyeedu.oembed","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}