{"title":"காலச்சுவடு பதிப்பகம்","description":null,"products":[{"product_id":"naduppoaril-theevaiththal","title":"நடுப்போரில் தீவைத்தல்","description":"\u003cp\u003eபேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந்தவர். படைப்பை ரசித்து, அதன் நுட்பங்களை ஆராய்ந்து தனக்கென ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்பவர். அதைச் சுவையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதுபவர். பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையான கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திரைப்படம் தொடர்பான கட்டுரைகளும் உள்ளன. இந்தக் கட்டுரைகளில் தத்துவம் இருக்கிறது. அரசியல் கூர்ப்புண்டு. விஞ்ஞானக் கண்ணோட்டம் இழையோடுகிறது. அழகியல் நோக்குள்ளது. நுனிப்புல் மேய்தல்? இல்லை. ஆழ்வார் பாசுரங்கள், மணிமேகலை, திருக்குறள் முதலிய பண்டைய இலக்கியங்கள் முதல் கு. அழகிரிசாமி, தி. ஜானகி ராமன், தஸ்தயேவ்ஸ்கி, கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன், ஆத்மாநாம், பெருமாள்முருகன், பெருந்தேவி முதலான நவீன படைப்பாளிகளின் ஆக்கங்கள்வரை பல்வேறு இலக்கியப் பிரதிகளைப் பற்றிய ஆழமான, தனித்துவமான அலசலை இக்கட்டுரைகளில் காணலாம். பா. இரஞ்சித், ராம் ஆகிய இயக்குநர்களின் திரைப்படங்களைப் பற்றிய பார்வையும் இதில் உள்ளது. இலக்கிய வாசகர்களும் மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637014891,"sku":"BK6755","price":472.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/naduppoaril-theevaiththal.jpg?v=1789704404"},{"product_id":"agnich-siragugal-1931-2015","title":"அக்னிச் சிறகுகள் (1931-2015)","description":"","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637080427,"sku":"BK6756","price":239.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/agnich-siragugal-1931-2015.jpg?v=1789704304"},{"product_id":"tamilil-yaappilakkanam","title":"தமிழில் யாப்பிலக்கணம் (old)","description":"\u003cp\u003eதமிழ் யாப்பு இலக்கண வரலாற்று நூல் இது. காலந்தோறும் மாறியும் வளர்ந்தும் வந்துள்ள யாப்பு இலக்கணத்தை, இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இலக்கணம் அறிந்த இளந்தலைமுறைக்கும், இலக்கணம் தெளிந்த முதிய தலைமுறைக்கும் ஒருசேர இது பயன்படும். யாப்பருங்கலக்காரிகையே தொல்காப்பியத்திற்குப் பின் யாப்பு இலக்கணத்திற்குக் ‘கையேடு’. காரிகையை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னும் இயற்றப்பட்ட யாப்பிலக்கண நூல்கள் அனைத்தையும் ய. மணிகண்டன் திறமாக மதிப்பிடுகிறார். அதிலும் சான்று இலக்கிய நூல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆராய்ந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. யாப்பிலக்கணத்தை அறியவிரும்பும், ஆராய விரும்பும் எவராலும் இந்நூலைத் தவிர்க்க இயலாது.‘கூப்பிட்டுச் சொன்னால் கும்பிட்டுக் கேட்கும் யாப்புக்கு அதிகாரி ய. மணிகண்டன்’ என்ற ஈரோடு தமிழன்பனின் மதிப்பீடு மிகையல்ல என்பதற்கு இந்நூல் சான்றாகும்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637113195,"sku":"BK6757","price":316.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tamilil-yaappilakkanam.jpg?v=1789704444"},{"product_id":"theekkadal-kadainthu-thirumathuram","title":"தீக்கடல் கடைந்து திருமதுரம்","description":"\u003cp\u003eமலையாளத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து மலையாளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் சி. இராதாகிருஷ்ணன் எழுதிய வரலாற்றுப் புனைவு இந்த நூல். எழுத்தச்சனின் வாழ்க்கை என்பது மலையாள மொழி இன்றைய வரிவடிவில் உருவாகி அதில் இலக்கியங்கள் எழுந்த வரலாற்றோடும் அக்கால அரசியல், சமுதாயம், பண்பாடு, சமயம் முதலியவற்றின் வரலாற்றோடும் பிணைந்து கிடப்பது. அத்தகைய வரலாற்று நாயகனின் வாழ்வை எழுதும்போது இவையெல்லாம் ஊடும் பாவுமாக விளக்கம் பெற வேண்டும். அது இந்த நாவலில் சிறப்பாக அமைந்துள்ளது. வரலாற்று ஆராய்ச்சி நூல்களின் அடிப்படையில் இந்தப் புனை கதையை நாவலாசிரியர் உருவாக்கியுள்ளார். எழுத்தச்சன் கல்வி கற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் அவர் வாழ்ந்த இடங்களுக்கும் நேரில் சென்று தகவல் திரட்டி எழுதியுள்ளார். இந்த புனைவை மொழிபெயர்த்த மா. கலைச்செல்வன் ‘கண்ணச ராமாயணம்’ என்ற தொல்மலையாள நூலை ஆய்வுசெய்து தமிழில் ஒலிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்றவர். அவருடைய மொழிபெயர்ப்பு மூலத்திலிருந்து விலகிச் செல்லாமல் தமிழ்ப் படைப்பைப் போல அமைந்திருக்கிறது.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637145963,"sku":"BK6758","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/theekkadal-kadainthu-thirumathuram.jpg?v=1789704444"},{"product_id":"orumurai-pennaaki-vaa-kadavulae","title":"ஒருமுறை பெண்ணாகி வா, கடவுளே!","description":"\u003cp\u003e2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்ற பானு முஷ்தாக் கதைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள்ள பன்னிரண்டு கதைகளும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டவை. பானு முஷ்தாக்கின் கதையுலகம் இரு அச்சுக்களில் சுழல்கிறது. ஒரே சமயத்தில் மதத்தையும் பாலினத்தையும் சார்ந்தது. இஸ்லாமியப் பெண்கள், பெண்களாக இருப்பதனாலேயே அடையும் துயரங்களையும் மதக்கட்டுப்பாடுகள் மூலம் அனுபவிக்கும் இடர்களையும் தீராக் கோபத்துடனும் தீவிர நகைச்சுவையுடனும் இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பாலியல், மத அடக்கு முறைகளுக்கு எதிராக எழுத்திலும் சமூகப் பணி வாயிலாகவும் செயலாற்றிவரும் பானு முஷ்தாக் கன்னட முற்போக்கு எழுத்தாளர்களில் முன்னணி ஆளுமையாகக் கருதப்படுகிறார்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637178731,"sku":"BK6759","price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/orumurai-pennaaki-vaa-kadavulae.jpg?v=1789704405"},{"product_id":"thi-jaanakiraaman-sirukathaigal","title":"தி.ஜானகிராமன் சிறுகதைகள்","description":"\u003cp\u003eஇந்தத் தொகுப்பைக் காலவரிசைப்படித் தொகுக்கவில்லை. வெளிவந்திருக்கும் தொகுதிகளின் வரிசைப்படிதான் அமைத்திருக்கிறேன். காரணங்களை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு‘க்கு எழுதியிருக்கும் பதிப்புரையில் விரிவாகவே முன்வைத்திருக்கிறேன். ஜானகிராமன் கதைகளில் பெருமளவுக்கு தூலமான மாற்றங்கள் இல்லை. முதல் கதையான ‘மன்னித்து விடு‘ வில் ஆரம்ப கட்ட எழுத்தின் குறைகள் உள்ளன. ஆனால் கதைப்போக்கு, பாத்திரங்களின் உரையாடல், கதையின் வடிவம் ஆகியவற்றில் பிற்காலக் கதைகளின் முன் மாதிரியாகவே அமைந்துள்ளது. ஒரு செவ்வியல் பூரிதநிலை கொண்டவை அவரது கதைகள்\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637211499,"sku":"BK6760","price":1432.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thi-jaanakiraaman-sirukathaigal.jpg?v=1789704444"},{"product_id":"broken-republic","title":"நொறுங்கிய குடியரசு","description":"\u003cp\u003eஇந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் இயல்பை ஆராய்வதோடு, நவீன நாகரிகம் பற்றியே அடிப்படையான கேள்விகளையும் இந்நூல் எழுப்புகிறது..\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637244267,"sku":"BK6761","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/broken-republic.jpg?v=1789704307"},{"product_id":"18-vathu-atchakodu","title":"18வது அட்சக்கோடு","description":"\u003cp\u003e18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்) ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு எந்தத் தமிழ் நாவலிலும் நான் பார்த்ததில்லை.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637277035,"sku":"BK6762","price":232.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/18-vathu-atchakodu.jpg?v=1789704305"},{"product_id":"1945il-ippadiyellam-irunthathu","title":"1945இல் இப்படியெல்லாம் இருந்தது","description":"\u003cp\u003e1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்: வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். ‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’தான் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளுக்குமான மையப் பொருள். கடந்த ஐந்தாண்டுகளில் அசோகமித்திரன் எழுதிய இருபத்தி இரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637670251,"sku":"BK6763","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/1945il-ippadiyellam-irunthathu.jpg?v=1789704304"},{"product_id":"1958","title":"1958","description":"\u003cp\u003e1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது; மொழிநடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கிறது.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637703019,"sku":"BK6764","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/1958.jpg?v=1789704304"},{"product_id":"8-nimidangal-46-vinadikal-16-alaralkal","title":"8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்","description":"\u003cp\u003e1980களுக்குப் பிறகு கறுப்பிலக்கியப் பதிவுகள் தமிழில் பெருமளவில் வரத் தொடங்கின. தமிழில் தலித்திய, பெண்ணிய எழுத்துகளின் மீது இவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ‘காலச்சுவடு’ இதழில் கறுப்பிலக்கியப் பதிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 1988-2025 ஆண்டுகளில் வெளியான இத்தகைய பதிவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பு இந்த நூல். இந்தத் தொகுப்பில் கறுப்பிலக்கியத்தின் அரசியல், சமூகம் சார்ந்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. காலச்சுவடு பதிப்பகம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2024 டிசம்பரில் காலச்சுவடு 300ஆவது இதழ் வெளியானது. இந்தத் தருணங்களை முன்னிட்டுக் ‘காலச்சுவடு’ இதழில் வெளியான முக்கியமான பதிவுகளை நூல்களாகத் தொகுக்கும் திட்டத்தின் தொடக்கமாக இந்தத் தொகுப்பு வெளியாகிறது.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637899627,"sku":"BK6765","price":176.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/8-nimidangal-46-vinadikal-16-alaralkal.jpg?v=1789704305"},{"product_id":"mahser-peruveli","title":"மஹ்ஷர் பெருவெளி","description":"\u003cp\u003eமஹ்ஷர் பெருவெளி, படைப்பு வேடம் புனைந்த யதார்த்தம். அனைத்தும் வகை முன் முடிவுகளையும் படைப்பு சார்ந்த நினைவிலி நிலையிலிருந்தே அது கலைத்துப் போடுகிறது. முன்கூட்டித் திட்டப்படுத்தாத புனத்திலின் கதைகள் சுயம்புவாகக் கிளிம்பி விடுகின்றன. ஆசிரியர் அதைப் பின்னால் நின்று செலுத்திச் செல்கிறார்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867637965163,"sku":"BK6766","price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/mahser-peruveli.jpg?v=1789704366"},{"product_id":"sila-nerangalil-sila-manithargal","title":"சில நேரங்களில் சில மனிதர்கள்","description":"\u003cp\u003eஇந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638096235,"sku":"BK6767","price":340.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sila-nerangalil-sila-manithargal.jpg?v=1789704441"},{"product_id":"aadiya-aatamenna-cricket-patriya-anubava-pathivugal","title":"ஆடிய ஆட்டமென்ன: கிரிக்கெட் பற்றிய அனுபவப் பதிவுகள்","description":"\u003cp\u003eஎதைப் பற்றி எழுதினாலும் அலாதியான பார்வையுடனும் அடியோட்டமான அங்கதத்துடனும் எழுதியவர் அசோகமித்திரன். அந்தக் காலத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினருடன் பிரிக்க முடியாமல் பிணைந்திருந்த கிரிக்கெட், அசோகமித்திரனையும் விட்டுவைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட் குழுவின் தலைவராகவும் உலக கிரிக்கெட்டின் தீவிரமான பார்வையாளராகவும் இருந்த அசோகமித்திரன் தான் ஆடிய ஆட்டங்களையும் அவதானித்த ஆட்டங்களையும் பற்றித் தொடராக எழுதியிருக்கிறார். கிரிக்கெட்டின் அழகியலைக் காட்டிலும் அதன் உளவியலுக்கும் ஆட்டத்தின் புதிர்களுக்கும் அழுத்தம் தரும் அசோகமித்திரனின் எழுத்து கிரிக்கெட்டை மாறுபட்ட கோணத்தில் பார்க்க உதவுகிறது. இந்தக் கட்டுரைகள் முதல்முறையாகத் தற்போது நூல் வடிவம் பெறுகின்றன.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638227307,"sku":"BK6768","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aadiya-aatamenna-cricket-patriya-anubava-pathivugal.jpg?v=1789704305"},{"product_id":"aagave-naanum","title":"ஆகவே நானும்…","description":"\u003cp\u003eமிகவும் பரந்துபட்ட விஷயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது பூபதியின் கவிதை. சொல்லும் சொல் குறிக்கும் பிம்பங்களும், அவை விரிக்கும் பொருளும் நுட்பத்துடன் பின்னப்பட்டு இருப்பது இவரது வலிமை. சிக்கல் விடுத்த எளிமை கைவர தேர்ச்சியும் நேர்த்தியும் கைகூட வேண்டும். பூபதியின் ‘ஆகவே நானும் . . .’ கவிதைத் தொகுதியில் இது பெருமளவுக்குக் கைகூடி வந்திருக்கிறது.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638292843,"sku":"BK6769","price":56.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aagave-naanum.jpg?v=1789704303"},{"product_id":"aalatra-palam","title":"ஆளற்ற பாலம்","description":"\u003cp\u003eஇயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற ஒரு பெண்மணியின் சுயசரிதை மட்டுமல்ல; பொதுவுடைமைக் கட்சியின் ஒரு கால நிகழ்வை, தலைவர்களின் நடப்புகளுக்குச் சாட்சி கூறும் நூல் இது. காலப்பெண்ணின் வாழ்வு இந்தத் தன்வரலாற்றில் பொதிந்து கிடக்கிறது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தன் அரசியல் பயணத்தின் தோழமையாக இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். அவ்வாறே பாடல்களும் வீதி நாடகங்களும் அவரோடு சேர்ந்துகொண்டன. கனவுகள், அதிகாரத் துரத்தல்களின் பின்னணியில் தலைமறைவு வாழ்வு, காதல், உறவுகள், பெண் இயக்கங்கள், சங்கங்கள், போராட்டங்களை விவரிக்கிறார். மக்கள் பரப்பில் சமத்துவத்தையும் மறுமலர்ச்சியையும் உருவாக்க உழைத்தவர்களின் தடங்கள்தான் இந்நூல். பெண்களும் தலித்துகளும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிற காலத்தில், மீட்சிக்காய்ப் போராடிய இயக்கத்தின் வரலாறு இது.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638325611,"sku":"BK6770","price":236.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalatra-palam.jpg?v=1789704304"},{"product_id":"aalavayan","title":"ஆலவாயன்","description":"\u003cp\u003e'மாதொருபாகன்' முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு இந்நாவல்.ஆண மையமிட்டதாகவே பெண்ணுலகு இருப்பினும் சுய செயல்பாட்டுக் களம் அமையும்போது எல்லாவற்றையும் கடந்து தனக்கான தேர்வுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளுதல், நம்பிக்கைகளாலும் சடங்குகளாலும் கட்டப்பட்டிருக்கும் சமூகவெளியை அதன் போக்கிலேயே வீச்சுடன் எதிர்கொள்ளுதல் முதலிய இயல்புகளைச் சம்பவங்களாகவும் எண்ணங்களாகவும் காட்டுகிறது இது. நிலம் சார்ந்த வாழ்வு உழைப்பினால் அர்த்தப்படுவதைச் செயல்களைப் பிடிக்கும் சொற்கள் வழியாகவும் எளிமையும் அடர்த்தியுமான தொடர்களைக் கொண்டும் இந்நாவல் கைவசப்படுத்தியிருக்கிறது. உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது. வட்டார மொழி வாழ்வோடு பிணைந்துள்ள பாங்கை வெளிப்படுத்தும்போது வாசிப்புத்தன்மை கூடும் என்பதற்கான சான்று இந்நாவல்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638358379,"sku":"BK6771","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalavayan.jpg?v=1789704303"},{"product_id":"aaloo-aaloo","title":"ஆலோ ஆலோ","description":"\u003cp\u003eபோர், புலம்பெயர்வு, மேற்குலக வாழ்வு போன்ற சமகால நிகழ்வுகளின் தாக்கங்களினால் மாரிய சமூக, பண்பாட்டு, பொருளாதார மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் புதிய பிரதியாக ஜயகரனின் படைப்பு முக்கியம் பெறுகிறது. புதிய கதைக் களமும் கதை மாந்தர்களும் எளிய மொழி நடையும் தமிழ் வாசகர்களுக்கு மாற்று வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. அரசியல் எல்லைகள் தாண்டிப் புகலிடத்தின் புது அனுபவங்களுக்கூடாகத் தமிழ் இலக்கிய வெளிப்பாட்டில் நிலவும் எல்லைகளைத் தாண்டும் எழுத்து இது. இக்கதைகள் தமிழின் முக்கியமான படைப்புகளாகக் கொள்ளத்தக்கவையாகும்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638423915,"sku":"BK6772","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aaloo-aaloo.jpg?v=1789704303"},{"product_id":"aalumaigal-tharunangal","title":"ஆளுமைகள் தருணங்கள்","description":"\u003cp\u003eதான் சந்திக்கும் மனிதர்களின் தோற்றத்தை அங்குல அங்குலமாகப் பதிவுசெய்துகொள்ளும் ஆற்றல் ரவியின் கண்களுக்குண்டு. அவர்கள்தம் ஒவ்வொரு அசைவுக்குமான பொருளை உணருமாற்றல் அவர் நெஞ்சுக்கு உண்டு. தமிழ் இலக்கிய வரலாற்றின் மீதான பரந்த பார்வையும் தன் சமகாலச் சமுதாயத்தின் செல்நெறிகள் மீதான கணிப்பும் விமர்சனமும் அவர் அறிவுக்குண்டு. அவற்றைத்தாம் அவர்தம் படைப்புகள் புலப்படுத்தி வியக்கச் செய்கின்றன. பொய்மை சூழுகிற உலகில் நம் சமகாலக் கலைஞர்களைக் குறித்துக்கூட உண்மையான பதிவுகளற்றுப் போகும் நாட்களில், வெளிவரும் ரவியின் கட்டுரைகள் படைப்பிலக்கியத்திற்குரிய அத்தனை இயல்புகளையும் கொண்ட வரலாற்று ஆவணங்களாகின்றன. - பாரதிபுத்திரன்\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638456683,"sku":"BK6773","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalumaigal-tharunangal.jpg?v=1789704305"},{"product_id":"aanaivariyum-ponkurusum","title":"ஆனைவாரியும் பொன்குருசும்","description":"\u003cp\u003eவைக்கம் முகம்மது பஷீர் என்ற படைப்பாளுமையின் இருவேறு முகத் தோற்றங்களைக் காட்டுகிறது இந்நூல். ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற நெடுங்கதையும் ‘செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை’ என்ற நீண்ட உரையும் இதில் இடம்பெற்றுள்ளன. பஷீர் கதைகளில் மிகவும் விநோதமும் தீவிர நகைச்சுவையும் கொண்ட கதை இது. பஷீர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் மிகவும் நீண்டதும் தீர்க்கமானதுமான உரை இது. கதையில் ஊடாடும் கட்டுரைத்தன்மையும் உரையில் பளிச்சிடும் கதைக் கூறுகளும் இவற்றை ஒன்றிணைத்துப் பார்க்க உதவுகின்றன. அவை பஷீர் என்ற ஆகச் சிறந்த கதைசொல்லியின் ஆற்றலை அடையாளம் காட்டுகின்றன. இன்றும் புதுமை கலையாத கதை; இன்றைக்கும் பொருந்தக்கூடிய உரை.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638489451,"sku":"BK6774","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanaivariyum-ponkurusum.jpg?v=1789704367"},{"product_id":"aang-udhayan-cartoons","title":"ஆங்! உதயன் கார்ட்டூன்ஸ்","description":"\u003cp\u003e‘இல்லஸ்டிரேடட் விக்லி’, ‘பிளிட்ஸ்’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா, ‘தினமணி’, ‘தினமலர்’, ‘ஜூனியர் விகடன்’, ‘நக்கீரன்’ போன்ற இதழ்கள் - நாளிதழ்களில் பணியாற்றிய உதயனின் 250க்கும் மேற்பட்ட கார்ட்டூன்களின் தொகுப்பு. நரசிம்மராவ், சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ராமதாஸ் என்று எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் பாரபட்சமின்றி விமர்சிக்கின்றன உதயனின் கார்ட்டூன்கள். “சராசரித் தமிழன் என்கிற, ஏமாற்றப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, கோபம் கொப்பளிக்கிற, கோபத்தை எங்கு காட்டுவது என்று அறியாத மக்களின் வெடிப்புற்ற சிந்தனைகளாக உதயனின் கார்ட்டூன்கள் மிளிர்ந்தன” என்கிறார் பிரபஞ்சன்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638522219,"sku":"BK6775","price":160.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aang-udhayan-cartoons.jpg?v=1789704305"},{"product_id":"aanavak-kolai-samigalum-perumitha-kolai-ammangalum","title":"ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்","description":"\u003cp\u003eஅகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகள்தான் இந்த நூல்; இதைப் புலனாய்வு அறிக்கை என்றும் கூறலாம். கதைகளை மட்டும் சொல்லாமல் அவற்றின் குற்றப் பின்னணி, தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிபாட்டு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867638653291,"sku":"BK6776","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanavak-kolai-samigalum-perumitha-kolai-ammangalum.jpg?v=1789704304"},{"product_id":"aanma-vanikan","title":"ஆன்ம வணிகன்","description":"\u003cp\u003eதனது கடந்தகால சுயத்தை அறியும் பொருட்டு முன்பு மேற்கொண்ட பயணங்களின் பாதையில் மீண்டும் பயணிக்கும் கதைசொல்லி, தான் முன்பிம் அறிந்திராத ஒரு தீவில் தங்க நேர்கிறது. பண்டைய மரபுலிருந்து நவீனத்தூக்கு மாறிக்கொண்டிருக்கும் அந்தத் தீவின் விசித்திரமும் மர்மமுமான நிகழ்வுகளை அவர் பிந்தொடர்கிறார்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639046507,"sku":"BK6777","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanma-vanikan.jpg?v=1789704305"},{"product_id":"aaranjaayanam","title":"ஆரஞ்சாயணம்","description":"\u003cp\u003eநீண்ட இடைவெளியைக் கடந்து வெளிவருகிறது 'ஆரஞ்சாயணம்'. இந்த இடைவெளியைப் புதிய தொகுப்பின் கவிதைகள் நுட்பமான கால உணர்வுடன் நிரப்புகின்றன. காட்சி சார்ந்த சித்தரிப்புகள், நினைவேக்கப் பதிவுகள், பகடிக் கூற்றுகள், பெண்நிலைக் குமுறல்கள், நேரடியான மொழிதல்கள், மௌன அரற்றல்கள் என்று நிகழ்காலக் கவிதை வரித்திருக்கும் எல்லா வகைமாதிரிகளிலும் கல்யாணராமன் கைவரிசை காட்டியிருக்கிறார். பேச்சுமொழிக்கு இணக்கமான கூறுமுறை கல்யாணராமனுடையது. அநேகமாக எல்லாக் கவிதைகளும் திறந்த குரலில் சொல்லப்பட்டிருப்பவை. தன் அந்தரங்கத்துக்குச் சொல்லும் ரகசியத்தைக்கூடத் தன்னிடமிருந்து விலக்கி முன்னிலையில் நிறுத்தியே சொல்கிறார். வேடிக்கை பார்ப்பவர்கள் காணாமல் போகவும் கேள்வி கேட்பவர்களை பிழைத்திருக்கவும் செய்பவை இந்தக் கவிதைகள். - சுகுமாரன்\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639112043,"sku":"BK6778","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aaranjaayanam.jpg?v=1789704304"},{"product_id":"aathmanaam-padaippugal","title":"ஆத்மாநாம் படைப்புகள்","description":"\u003cp\u003eஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத \/ அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. 1984ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் அகால மரணமடைந்த ஆத்மாநாமின் படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இலக்கியவாதிகள் முதல் தீவிர இடதுசாரிகள்வரை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு அபூர்வமான இலக்கியவாதி ஆத்மாநாம். பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் பல ஆண்டுக்கால முயற்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639177579,"sku":"BK6779","price":192.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aathmanaam-padaippugal.jpg?v=1789704303"},{"product_id":"aattanathi","title":"ஆட்டனத்தி","description":"\u003cp\u003e1970களின் தொடக்கத்திலிருந்து எழுதி வரும் வண்ணநிலவனின் புதிய சிறுகதைத் தொகுப்பு இந்த நூல். சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை இலக்கியமாக மாற்றும் கலையில் தேர்ந்தவர் வண்ணநிலவன். தன்னிடமிருக்கும் அனைத்தையும் இழந்துவிட்ட பிறகும் சகமனிதனைப் போற்றுவதற்கான அன்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் மனிதர்களே வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள். இவருடைய ஆரம்பகாலக் கதைகளில் ஒலித்த மென்மையான குரலும் உணர்ச்சிவசப்படாத யதார்த்தப் பார்வையும் இத்தொகுப்பிலும் காணப்படுகின்றன. இதில் இடம்பெறும் 11 கதைகளும் வேறுவேறு காலங்களிலும் இடங்களிலும் நிகழ்கின்றன. மெல்லிய நகைச்சுவையும் யதார்த்தமான மனநிலையை உருவாக்கும் சூழலும் புறவுலகை ஒரு சாட்சியாக நின்றுபார்க்கும் மனோபாவமும் கூடிய இந்தக் கதைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை. கட்டபொம்மன், மேனகை ஆகிய பாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் புதிய பார்வைகளையும் திறப்புகளையும் தருகின்றன.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639210347,"sku":"BK6780","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aattanathi.jpg?v=1789704305"},{"product_id":"aathma-sahotharan","title":"ஆத்ம சகோதரன்","description":"\u003cp\u003eகிராமத்து முதியவர் ஒருவர் வாழ்க்கையின் இரகசியங்களைப் பற்றி எங்களுக்குத் தீட்சையளித்தார். எங்களுக்குச் சொன்ன மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால், நிகழ்வுகள்தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மனிதன் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதாகும். ஒரு மனிதனுக்கு வரும் திடீர் சோதனை அதற்கு முன் அவன் போன்ற மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். மனிதனின் சாத்தியக் கூறுகள் எல்லாம் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டவை. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், நமக்கு ஏற்படுவதெல்லாம் ஒன்றும் புதிதல்ல. இருப்பினும், நாம் அனுபவிப்பது நமக்குப் புதிதாகத் தோன்றும், ஏனென்றால், மனிதன் ஒவ்வொருவனும் தனிப்பட்டவன் - ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு மரமும் தனிப்பட்டதாக இருப்பதைப் போல!\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639243115,"sku":"BK6781","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aathma-sahotharan.jpg?v=1789704305"},{"product_id":"aattroor","title":"ஆற்றூர் ரவிவர்மா","description":"\u003cp\u003eநவீன மலையாளக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. நவீனத் தமிழின் உயிரையும் உணர்ந்தவர். அந்த உணர்வில் தமிழ்ப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிமாற்றி இரு மொழிக்கும் வலிமை சேர்த்தவர். ஆற்றூர் நினைவேந்தலாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சிறு நூலில் அவரது கவிதைகளும் அவரைப் பற்றிய கவிதைகளும் அவருடைய தமிழ்ப் பார்வையும் அவர் மீதான தமிழ்ப் பார்வையும் கொண்ட கட்டுரைகள் இடம்பெறுகின்றன. மலையாள மொழியின் தமிழ்க் காதலருக்கான காணிக்கை இந்நூல்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639308651,"sku":"BK6782","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aattroor.jpg?v=1789704303"},{"product_id":"aatuthi-amuthe","title":"ஆட்டுதி அமுதே","description":"\u003cp\u003eஆட்டுதி அமுதே கவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீனத் தமிழ்க் கவிதையில் இவ்வியல்பை வழுவாது கடைப்பிடிக்கும் கவிஞர்களில் இசையும் ஒருவர்..\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639374187,"sku":"BK6783","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aatuthi-amuthe.jpg?v=1789704302"},{"product_id":"aatukutikal-alikum-thandanai","title":"ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை","description":"\u003cp\u003eஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - எம்.எஸ் :\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639439723,"sku":"BK6784","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aatukutikal-alikum-thandanai.jpg?v=1789704305"},{"product_id":"aazhaththai-ariyum-payanam","title":"ஆழத்தை அறியும் பயணம்","description":"\u003cp\u003eபாவண்ணன், வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவங்களையும் இணைத்துப் பல்வேறு சிறு கதைகளைப் பற்றிப் பேசுகிறார். வாசிப்பனுபவம் சார்ந்த உரத்த சிந்தனையாக வெளிப்படும் இந்தப் பதிவுகள் புனைவு மொழியின் சுவையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வாசகரும் தனக்குப் பிடித்த படைப்புகளைத் தமது வாழ்பனுபவம் சார்ந்து மதிப்பிடவும் தொகுத்துக் கொள்ளவும் அவற்றின் அர்த்த தளத்தை விரிவுபடுத்திக்கொள்ளவும் முடியும். வாசகர்களை குறிப்பாக இளம் வாசகர்களை புதிய புதிய இலக்கிய ஆசிரியர்களை நோக்கிப் பயணிக்கத் தூண்டுவது இக்கட்டுரைகளின் கூடுதல் சிறப்பு.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639472491,"sku":"BK6785","price":112.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aazhaththai-ariyum-payanam.jpg?v=1789704302"},{"product_id":"aazhi-soozh-ulagu","title":"ஆழி சூழ் உலகு","description":"\u003cp\u003eஆழி சூழ் உலகு (நாவல்) - ஆர்.என்.ஜோ டி குரூஸ் : கடலிலும் கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் அதன் வண்ணங்களோடும் வலிகளோடும் சித்தரிக்கும் இது தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்று.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639505259,"sku":"BK6786","price":660.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aazhi-soozh-ulagu.jpg?v=1789704307"},{"product_id":"abaraagithan","title":"அபராஜிதன்","description":"\u003cp\u003eஇந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கவில்லை. போர் உச்சம் பெற்று நாளாந்தம் படையினரின் சடலங்கள் சவப்பெட்டிகளில் வீடுகளுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் ‘பிரபாகரனும் நேசிக்கப்பட வேண்டியவர்’ என்று சிங்களவர்களுக்கு அன்பாக எடுத்துரைக்கும் இந்த நாவலை அந்தச் சமயத்தில் எழுதுவதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமாதானத் தூதுக் குழுக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றோடு இலங்கை அரசாங்கம், பாராளுமன்றம் ஆகியவற்றின் குறைபாடுகளையும் செயற்பாடுகளையும் ஊழல்களையும் வெளிப்படையாக விமர்சித்திருப்பதால் அதிகார வர்க்கத்திலிருந்தும் இந்த நாவலுக்கும் நாவலாசிரியைக்கும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639538027,"sku":"BK6787","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/abaraagithan.jpg?v=1789704305"},{"product_id":"adaikkum-thazh","title":"அடைக்கும் தாழ்","description":"\u003cp\u003eபெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பு உயிர்களின் ஆதாரமான உணர்வு. வாழ்வின் அமுதம். சாதியும் மதமும் இந்த அமுதத்தை விஷமாக்கி வருகின்றன. மதங்களுக்கிடையிலான விரோதம் மத எல்லைகளைக் கடந்த காதலையும் தீண்டி அதனைக் கருகச் செய்கின்றது. மதம் தாண்டிய காதலை இறைமைக்கு எதிராகக் காணும் பிற்போக்குத்தனமும் அத்தகைய காதலைப் போர் வியூகமாகக் காணும் மதவாதமும் சந்திக்கும் புள்ளியில் வெடித்துச் சிதறுகின்றன இளம் மனங்களின் களங்கமற்ற காதல்கள். அன்பைத் தாழிட்டு அடைக்க முடியாது என்கிறார் வள்ளுவர். பேதங்களில் ஊறிய மானுட மனம் சாதி, மத, வர்க்க எல்லைகளைக் கடந்த காதல்களுக்கு அந்தப் பெருமையை வழங்க மறுக்கிறது. காதலும் அரசியலாக மாறிச் சந்தி சிரிக்கும் காலகட்டத்தின் காதல்களை அடையாளம் காட்டுகிறது சல்மாவின் நாவல்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639570795,"sku":"BK6788","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adaikkum-thazh.jpg?v=1789704305"},{"product_id":"adi","title":"அடி(நாவல்)","description":"\u003cp\u003eஅடி(நாவல்) - தி.ஜானகிராமன் :\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639636331,"sku":"BK6789","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adi.jpg?v=1789704305"},{"product_id":"adimai-aavanangal","title":"அடிமை ஆவணங்கள்","description":"\u003cp\u003eதமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு, ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் 'தமிழகத்தில் அடிமைமுறை' நூல் குறிப்பிடத்தகுந்தது. அந்த வரிசையில் வருவது அ.கா. பெருமாளின் இந்த நூல். இதில் இருப்பவை அடிமைமுறை தொடர்பான மூல ஆவணங்கள். நாட்டார் வழக்காறுகளின் வழியும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிவரும் அ.கா. பெருமாள். இந்த நூலில் அதைப் பெருமளவில் பாவித்திருக்கிறார். இந்நூலின் முன்னுரை அரிய பல செய்திகளைக் கூறுவது. தென்குமரியில் உள்ள சில சாதிகளைப் பற்றிய அரிய செய்திகளைக் கதைப்பாடல்கள் வழி மீட்டெடுத்திருக்கிறார் பெருமாள். கடின உழைப்பு நூலில் தெரிகிறது.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639701867,"sku":"BK6790","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adimai-aavanangal.jpg?v=1789704304"},{"product_id":"adutha-veedu-imbathu-mile","title":"அடுத்த வீடு ஐம்பது மைல்","description":"\u003cp\u003eபயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’. ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல். கல்வி ஒலிபரப்பு நிமித்தம் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப் பயணம் மேற்கொள்ளும் தி. ஜானகிராமன் நூலில் முதன்மையாக விவாதிப்பது சிறார்களின் கல்விப் பயிற்சியையும் அதன் மேம்பாட்டையும். இந்த நோக்கத்தைக் கடந்து ஆஸ்திரேலியப் பயணத்தின் வரலாற்றையும் புவியியலையும் மனித வாழ்க்கையையும் ஒளிரும் சான்றுகளுடன் முன்வைக்கிறார். எங்கேயும் மனிதர்கள் ஒரே போன்றவர்கள் என்று தமது அனுபவங்களின் மூலம் தி.ஜா. உணர்கிறார். நமக்கும் உணர்த்துகிறார்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639734635,"sku":"BK6791","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adutha-veedu-imbathu-mile.jpg?v=1789704304"},{"product_id":"agathiyin-berlin-vasal","title":"அகதியின் பேர்ளின் வாசல்","description":"\u003cp\u003eபிரிவினைக்குள்ளான ஜெர்மனியின் கிழக்கு பேர்ளினில் இறங்கி மேற்கு பேர்ளின் வழியாகப் பல்வேறு தேசங்களுக்கும் புலம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வு குறித்த பிரதி இது. ஐரோப்பியப் பெருநகரமொன்றிலிருந்து ஆரம்பிக்கும் நாவல் இலங்கை இனக்கலவரம், போர் ஆகியவற்றின் இணைகோடாகப் பயணித்து நீண்ட அகதி வாழ்வையும் அதன் மூல காரணங்களையும் திக்கிறது. அக, புறச் சிடுக்குகளுக்குள்ளால் அகதிகளின் அந்தர வாழ்வைக் கவனப்படுத்துகிறது. பிளவுபட்ட ஜெர்மனியின் சிக்கலான நில அமைப்பையும் ‘போட்ஸ்டம்’ உடன்படிக்கையின் விளைவுகளையும் குறித்து வரலாற்றுத் தகவல்கள், கதாபாத்திரங்களின் உரையாடல்கள், வர்ணனைகள் மூலம் அகதிகளின் துயரமான வாழ்வைப் பேசுகிறது. அவர்களின் வருகையையொட்டி ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, ஊதியக் குறைப்பு, வேலைவாய்ப்பின்மைகள் ஆகியவற்றைப் புனைவில் மீட்டெடுத்து ஒரு காலத்தை வாசகர்முன் திறந்துவைக்கிறது. அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாயும் பரிதாபத்துக்குரியவர்களாயும் வந்திறங்கிய அவர்களின் துல்லியமற்ற, பதற்றமான அனுபவங்களையும் மேல்நாட்டுக் கல்விமூலமாகப் பலாபலன் அடைந்தோர் வாழ்வையும் இப்பிரதியில் இணையாக வாசிக்க முடியும். காலக்கண்ணாடியின் முன் நிர்வாணமான வாழ்வை மீட்டெடுக்க முயல்கிறது இந்நாவல்\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639767403,"sku":"BK6792","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/agathiyin-berlin-vasal.jpg?v=1789704304"},{"product_id":"agaya-thamarai","title":"ஆகாயத் தாமரை (காலச்சுவடு பதிப்பகம்)","description":"\u003cp\u003e'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான். நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார். எல்லாக் கோணங்களிலிருந்தும் நீ இப்போது வேலையிலிருக்கும் இடம் உன்னை இன்னும் இருபது வருடங்களில் ஒரு பெங்ய மனிதனாக உயர்த்திவிடுமா என்று நீயே நின்றாக யோசித்துப்பார். ஓரளவு சாத்தியம் என்றிருந்தாலும், இப்போதிருக்கும் இடத்திலேயே உன்னை உயர்த்திக் கொள்ள நீ என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கு. ஒரு திட்டம் முன் யோசனையும் இல்லாமல் காலம் கழிக்காதே. ஆனால் உன் மனத்துக்கேற்ப இந்த வேலையில் போதிய வாய்ப்புகள் இல்லை என்றால் இப்போதே ஒரு முடிவு எடுத்துக்கொள். ஒரு மாதம், அதிகம் போனால் ஆறு மாதம். அதற்குமேல் காலத்தை வீணாக்காதே. உடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார். இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். சொல்லாதே, என்னிடம் சொல்லாதே. உன்னுடைய இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே. - ஆகாயத்தாமரை நாவலில் இருந்து.. '\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639800171,"sku":"BK6793","price":176.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/agaya-thamarai.jpg?v=1789704303"},{"product_id":"agathiyin-thuyaram","title":"அகதியின் துயரம்","description":"","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639931243,"sku":"BK6794","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/agathiyin-thuyaram.jpg?v=1789704302"},{"product_id":"agniyum-mazhaiyum","title":"அக்னியும் மழையும்","description":"\u003cp\u003eசுதந்திரத்துக்குப் பிறகான இந்திய நாடக உலகில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கிரீஷ் கார்னாட். கன்னட நாடகங்களுக்கு இந்திய மேடைகளில் மட்டுமன்றி பல உலகநாடுகளின் மேடைகளிலும் கௌரவத்தையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தவர். வரலாறு, புராணம், நாட்டுப்புறக் கதைகளிலிருந்து தம் படைப்புகளுக்கான கருக்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அவை அனைத்தும் சமகால அரசியல், வாழ்வியல் பிரச்சனைகளையே முன்வைக்கின்றன. மொத்த நாடகத்தின் காட்சியமைப்பின் வழியாக அவர் உருவாக்கும் வசீகரம் மிகுந்த கவித்துவம் பார்வையாளர்கள் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிடும் தன்மையுடையது. கருத்துகளின் சுமையால் உரையாடலின் அழகு மங்கிவிடாதபடி மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கார்னாடின் கலையுணர்வுக்குச் சான்றாகும். சமூகத்தில் தம்மைக் கட்டுப்படுத்தும் எல்லா அம்சங்களிலிருந்தும் விடுபட்டு மீறி நிற்கிற மன ஆற்றலும் போர்க்குணமும்கொண்ட பெண் பாத்திரங்கள் கார்னாடின் நாடகங்களில் இடம்பெற்றிருக்கிறார்கள்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867639996779,"sku":"BK6795","price":392.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/agniyum-mazhaiyum.jpg?v=1789704305"},{"product_id":"ainooru-koppai-thattugal","title":"ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்","description":"\u003cp\u003eதமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை. பெண்கள், குழந்தைகள், தொழிலாளிகள், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பேய்கள், படுகொலைகள், சன்னியாசிகள் என்று பல அம்சங்களைக்கொண்ட அசோகமித்திரனின் சிறுகதை உலகின் சாராம்சத்தை இக்கதைகள் உணர்த்துகின்றன. சுமார் 190 சிறுகதைகள் எழுதியிருக்கும் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்குச் சிறந்ததொரு அறிமுகம் இந்தத் தொகுப்பு.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867640062315,"sku":"BK6798","price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ainooru-koppai-thattugal.jpg?v=1789704303"},{"product_id":"akaalam-kalachuvadu","title":"அகாலம்","description":"\u003cp\u003eசமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாகக் குடும்பங்கள் இருக்கின்றன. அதே சூழலில் அவ்வமைப்பின் பரப்பில் விதிகளை ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வன்னுணர்வுகளின் ஆட்டத்தையே செந்திலின் கதைகளுக்குள் பார்க்கிறோம். கட்டற்ற காதலின் பரிதவிப்பு, மீறிப் பெருகும் காமத்தின் பித்துநிலை, கருணையற்று நிகழ்த்தப்படும் துரோகங்கள், இருபால் உளங்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, அகம் குலைக்கும் புறக்கணிப்புகள் என மனித மனத்தின் இருண்மை கூடிய பிரதேசங்களில், வழித்தடங்களில் பயணிக்கின்றன இக்கதைகள். எனினும் அன்பு, பிரியங்களின் ஒளிமிகுந்த விகாசிப்பையும் இவற்றில் ஆங்காங்கே காண்கிறோம். சூழலின் நிர்ப்பந்தங்கள் உருவாக்கும் நெருக்கடிகளில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் உறவுச்சூதில் வெட்டியெறியப்பட்டவர்களாகவும் நினைவழிந்து அகாலத்திற்குள் சென்று மறையும் மனிதர்களின் காலடித் தடங்கள் பதிந்த இக்கதைகளில் இழைவுகளும் சிடுக்குகளும் ஊடுபாவிய அகவுலகின் நுட்பமான புள்ளிகள் தொட்டுக் காட்டப்படுகின்றன. - குணா கந்தசாமி\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867640095083,"sku":"BK6799","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/akaalam-kalachuvadu.jpg?v=1789704305"},{"product_id":"akgirakarathil-periyar","title":"அக்கிரகாரத்தில் பெரியார்","description":"\u003cp\u003eபி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் கவிதை, மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு, மேற்கத்திய நாவல், கிரிக்கெட், மக்கள் அறிவியல், சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தினை உள்ளடக்கியுள்ளன\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867640127851,"sku":"BK6800","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/akgirakarathil-periyar.jpg?v=1789704305"},{"product_id":"akkaa-kannada-pen-ezhuththaalargalin-sirukathaigal","title":"அக்கா: கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்","description":"\u003cp\u003eகன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது சுயபச்சாதாபமற்ற, ‘பெருமித’ வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தைத்தேடும், இயலாமையிலும் உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கித் தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்ளும் பெண்ணின் உலகமாக இருக்கிறது. இந்தப் பெண், சமூக அமைப்பின் மீது அளவற்ற பரிகாசம் மற்றும் நிராகரிப்பு, புதிய தேர்ந்தெடுப்புகளைப் பற்றிய மகிழ்ச்சி, வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனோதிடம் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறாள். - ஆஷாதேவி, கன்னட விமர்சகர்\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867640193387,"sku":"BK6801","price":180.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/akkaa-kannada-pen-ezhuththaalargalin-sirukathaigal.jpg?v=1789704303"},{"product_id":"akkarai-seemaiel","title":"அக்கரைச் சீமையில்","description":"\u003cp\u003eசுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ‘உணவும் உணர்வும்’ சுந்தர ராமசாமியின் முழுச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறாத கதை. “இத்தொகுதியிலுள்ள பல்வேறு கதைகளும் வாசகர்களின் உள்ளத்தில் பசுமை குன்றாமல் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் ரகுநாதன், முதல் பதிப்பின் முன்னுரையில்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867640258923,"sku":"BK6802","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/akkarai-seemaiel.jpg?v=1789704303"},{"product_id":"alagar-koil","title":"அழகர் கோயில்","description":"\u003cp\u003eமதுரைக்கருகில் அழகர் மலை என்னும் வனாந்தரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோயில் அழகர் கோயில். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இப்பகுதி சமணம், பௌத்த மதங்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. முருகக் கடவுளோடு தொடர்புடையதாகவும் பேசப்படுகிறது. இம்மலை யாருக்கு உரிமையுடையது, கோயிலுக்கும் அப்பகுதி மக்களுக்கும் உள்ள உறவு, அவ்வுறவுகளால் எழுந்த விழாக்கள், சடங்குகளுக்கான பின்புலங்கள், வைதீக அழகர் கள்ளழகராக அவதாரம் கொண்டதன் காரணம், நாட்டார் இலக்கியமான வர்ணிப்புப் பாடல்களின் அரசியல், அழகர் கோயில் வெளியில் சாமியாடுதல், கிடா வெட்டுதல் போன்ற நாட்டார் கூறுகளை ஏற்றுக்கொண்ட சனநாயகப் பண்பு எனப் பல்வேறு கூறுகளை விரிவாகக் கூறும் இந்நூல் துப்பறியும் புதினம் போலச் சுவையாக எழுதப்பட்டுள்ளது. தொ. பரமசிவன், நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதிய இந்த நூலின் முந்தைய பதிப்புகளில் இருந்த எழுத்துப் பிழைகளை நீக்கியும் கூட்டுச் சொற்களை எளிமை கருதிச் சீர் பிரித்தும் இன்றைய தலைமுறையினருக்கு உதவும் வகையில் தேவையான அடிக்குறிப்புகளையும் கூடுதல் தகவல்களையும் இணைத்தும் இந்தப் பதிப்பு உருவாகியுள்ளது. தொ.ப.வின் ஆய்வுத் தோழர் வெ.வேதாசலம் அவர்கள் தந்துதவிய அழகர் கோயில் தொடர்பான படங்களும் இப்பதிப்பில் உள்ளன.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867640291691,"sku":"BK6803","price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/alagar-koil.jpg?v=1789704305"},{"product_id":"aliyum-ninovum","title":"அலியும் நினோவும்","description":"\u003cp\u003eஅலியும் நினோவும்’ நாவல், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா, ஈரான், அஜர்பைஜான், ஜியார்ஜியா பகுதிகளின் கொந்தளிப்பான பின்னணியில் அமைந்த அழுத்தமான அழகான காதல் கதை. இஸ்லாமிய அஜர்பைஜானி இளைஞருக்கும் கிறிஸ்துவ ஜார்ஜிய இளவரசிக்கும் இடையிலான ஆழமான, சிக்கலான காதலைப் பேசும் இந்தக் கதை வரலாறு, அடையாளம், பண்பாடு என்கிற அடுக்குகளில் பயணித்துக் காலத்தை வெல்லும் படைப்பாக மாறுகிறது. முதலாம் உலகப் போர் காலத்தில் சோவியத் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அஜர்பைஜான் நாட்டின் வரலாற்றையும் இக்காதல் கதையுடன் இணைத்திருக்கிறார் நாவலாசிரியர். இதுவரை 30 மொழிகளில் வெளிவந்து, 100 பதிப்புகளுக்கு மேல் கண்ட நூல் இது. திரைப்படமாகவும் வந்திருக்கிறது. பயணி தரனின் உயிரோட்டமுள்ள மொழியாக்கம் உலகப் புகழ்பெற்ற இந்த நாவலைத் தமிழ் வாசகருக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867640324459,"sku":"BK6804","price":296.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aliyum-ninovum.jpg?v=1789704305"},{"product_id":"amaanushya-ninaivugal","title":"அமானுஷ்ய நினைவுகள்","description":"\u003cp\u003eஅமானுஷ்ய நினைவுகள் - அசோகமித்ரன் : அறுபது ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அசோகமித்திரன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் இவை. தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரனின் படைப்பாற்றலும் அவரது படைப்புகளின் சிறப்புக் கூறுகளும் கடைசி மூச்சு வரையிலும் அவரிடம் இருந்ததை உறுதிப்படுத்தும் கதைகள். எளிய மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், இயல்பான உணர்வுகள், இவற்றினிடையே நிகழும் ஊடாட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்வின் ஆதார ஸ்ருதியைத் தொட்டுக் காட்டும் கதைகள். வாழ்க்கை நிகழ்வுகளின் பல்வேறு சாத்தியக்கூறுகளே என் கதைகள் என்று அசோகமித்திரன் கூறியிருக்கிறார். நிகழ்வுகளின் மாறுபட்ட சாத்தியக்கூறுகளினூடே மாறாத வாழ்வின் அடிப்படைகள் குறித்து இக்கதைகள் பேசுகின்றன. அசோகமித்திரனின் தொடக்ககாலக் கதைகள் இளம் எழுத்தாளருக்கான சலுகை கோராமல் தம் பலத்தில் நின்றன. அவருடைய கடைசிக் கதைகளும் அந்திம காலக் கதைகளுக்கான சலுகை எதுவும் தேவைப்படாமல் படைப்பாற்றலோடு நிற்கின்றன.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867640357227,"sku":"BK6805","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/amaanushya-ninaivugal.jpg?v=1789704365"},{"product_id":"amara-nayagan","title":"அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு)","description":"\u003cp\u003eஇந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோசின் அறிவார்ந்த வாழ்க்கை வரலாற்று இது. நேதாஜியின் அரசியல், சமூக, தார்மீக உறுதிப்பாடுகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. நூலாசிரியர் சுகதோ போஸ் கல்கத்தா, கேம்பிரிட்ஜ் ஆகியவற்றைச் சார்ந்த அறிவுசார் சூழலில் நேதாஜி உருவான விதத்தை அற்புதமாகச் சித்தரிக்கிறார். தேசியவாத அரசியலின் உச்சத்தை அவர் எட்டியதை விளக்குகிறார். இந்துக்கள், முஸ்லிம்கள், ஆண்கள், பெண்கள், பல்வேறு மொழியியல் குழுக்கள் ஆகியோரை ஒரே சுதந்திர இந்திய தேசத்திற்குள் ஒன்றிணைக்கும் நேதாஜியின் லட்சியப் பார்வையைத் தெளிவாகத் தீட்டிக்காட்டுகிறார். அவர் மரணம் பற்றி இந்த நூல் தரும் தகவல் இந்த அமர நாயகன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நேதாஜியின் வாழ்க்கை விறுவிறுப்பாகவும் நுண்ணுணர்வுடனும் அந்தக் காலகட்டத்து அரசியல் குறித்த தெளிவான பிரக்ஞையுடனும் பதிவாகியுள்ளது. ஆதாரபூர்வமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல் நேதாஜியையும் அவரது காலத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது. நூலாசிரியர் சுகதோ போஸ் ஹார்வர்ட் பல்கலையில் மூத்த வரலாற்றுப் பேராசிரியர். அப்பல்கலை வெளியிட்டுள்ள நூலின் தமிழாக்கம் இது. இதழாளர் ந. வினோத்குமார் சரளமான நடையில் இந்த நூலைத் தமிழில் தந்திருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"காலச்சுவடு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53867640422763,"sku":"BK6806","price":504.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/amara-nayagan.jpg?v=1789704305"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/Kalachuvadu_Logo.jpg?v=1789664495","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/kalachuvadu-pathippagam.oembed","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}