{"title":"இந்து தமிழ் திசை வெளியீடுகள்","description":"","products":[{"product_id":"mozhi-pirikkaatha-unarvu","title":"மொழி பிரிக்காத உணர்வு!","description":"\u003cp\u003eஎளிய கவிதைகளாக வரிகளை எழுதும் பாடலாசிரியரும் வரிகளின் பொருளை வருடிக் கொடுக்கும் விதமாக இசையமைக்கும் இசையமைப்பாளரும் இணைந்து பணியாற்றும்போது, தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்கள் பிறந்து விடுகின்றன.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784564957547,"sku":"BK1555","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/mozhi-pirikkaatha-unarvu.jpg?v=1788082370"},{"product_id":"yaanaigalin-varugai","title":"யானைகளின் வருகை","description":"\u003cp\u003eஇயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565023083,"sku":"BK1556","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/yaanaigalin-varugai.jpg?v=1788082373"},{"product_id":"munnaththi-yer","title":"முன்னத்தி ஏர்","description":"\u003cp\u003eஇயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு அரசு எந்தவித ஆதரவோ, உதவியோ செய்யவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய செய்தி. இப்படித் தங்களை இழந்து இயற்கைவழி வோளண்மையை முன்னனெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், வேளாண் மையில் நீண்ட நெடிய அனுபவமும், அதை மற்றவர்களுக்குக் கற்றுத்தரும் திறனும் கொண்டவருமான சத்தியமங்கலம் சுந்தரராமன்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565088619,"sku":"BK1557","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/munnaththi-yer.jpg?v=1788082376"},{"product_id":"podhu-arivu-2019","title":"பொது அறிவு 2019","description":"\u003cp\u003eஅனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் வழிகாட்டும் பொது அறிவு பொக்கிஷம்\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565186923,"sku":"BK1558","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/podhu-arivu-2019.jpg?v=1788082377"},{"product_id":"kadhal-vazhi-salai-1","title":"காதல் வழிச் சாலை!","description":"\u003cp\u003eஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலாகிக் கசிந்துருக எந்த வழிகாட்டியும் தேவையில்லை. இயற்கையே அந்த வேதிவினைகளை நிகழ்த்திவிடுகின்றது. ஆனால், நாம் அறிந்து கொள்ள வேண்டியது…\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565285227,"sku":"BK1559","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kadhal-vazhi-salai-1.jpg?v=1788082381"},{"product_id":"pandigai-kaala-samaiyal","title":"பண்டிகை கால சமையல்","description":"\u003cp\u003eஇன்று நேரமில்லை என்பதாலேயே பலரும் பலகாரங்களைச் செய்வதில்லை. சாஸ்திரத்துக்குச் சிலவற்றை மட்டும் கடைகளில் வாங்கி, பண்டிகையை நிறைவுசெய்துவிடுகிறார்கள்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565350763,"sku":"BK1560","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pandigai-kaala-samaiyal.jpg?v=1788082382"},{"product_id":"pesum-padam","title":"பேசும் படம்","description":"\u003cp\u003eஒரு தலைமுறையின் வாழ்க்கை முறையை, அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன. புகைப்படம் என்பது வெறும் ரசனையோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு வரலாற்றுக் குறிப்பாகவும் பதிவு செய்யப்படுகிறது. புகைப்படங்கள், அறிவியல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. நமது இல்லத்தில் நடைபெற்ற ஒரு விழாவை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்த்து மகிழ்வதற்கு, நமக்கு பெரிதும் உதவுவது புகைப்படங்களே. பல மறக்க முடியாத காலகட்டங்களான குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், திருமணம் போன்றவற்றை நினைவுகூர வைப்பது புகைப்படங்களே. வரலாற்று நிகழ்வுகள், இன்பம், துன்பம், பொதுக் கூட்டம், தலைவர்கள், விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுவது புகைப்படங்களே. நமது முன்னோரின் புகைப்படங்களைப் பார்த்து, அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565449067,"sku":"BK1561","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pesum-padam.jpg?v=1788082385"},{"product_id":"punniyam-theduvome-paagam-i","title":"புண்ணியம் தேடுவோமே..!","description":"\u003cp\u003eவழிபாட்டுத் தலங்களைப் பற்றி விரிவாக ‘புண்ணியம் தேடுவோமே..!’ என்ற இந்த நூலில் விளக்கியுள்ளார் முன்னூர் ரமேஷ்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565514603,"sku":"BK1562","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/punniyam-theduvome-paagam-i.jpg?v=1788082387"},{"product_id":"chottangal-1","title":"சொட்டாங்கல்","description":"\u003cp\u003eதமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் தமிழச்சி தங்கபாண்டியன். எப்போதும் மண் வாசமடிக்கும் அவரது எழுத்துகளில், மனித மனங்களை ஈரப்படுத்தும் கருத்துகள் அமர்ந்திருப்பதை தமிழ் வாசகர்கள் நன்கறிவர்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565580139,"sku":"BK1563","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chottangal-1.jpg?v=1788082390"},{"product_id":"punniyam-theduvome-paagam-ii","title":"புண்ணியம் தேடுவோமே..! பாகம்-II","description":"\u003cp\u003e‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதும் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதும் பெரியோர் வாக்கு. இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கையை வழிபடத் தொடங்கினான். சூரியன், சந்திரன், சிறுதெய்வம், பெண் தெய்வம், மழை, மரம், நீர், விநோத உருவம், பெருந்தெய்வம் என்று அனைத்தையும் வழிபடத் தொடங்கினான். வைணவம், சைவம் முதலிய சமயங்கள் தோன்றிய காலத்தே தெய்வங்களுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர் நமது முன்னோர். அத்தகைய வழிபாட்டுத் தலங்களைப் பற்றி விரிவாக ‘புண்ணியம் தேடுவோமே..!’ என்ற இந்த நூலில் விளக்கியுள்ளார் முன்னூர் ரமேஷ். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தைச் சேர்ந்த முன்னூரில் பிறந்த இவர் தற்போது தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வருகிறார். தமிழகத் திருக்கோயில்களின் வரலாறு மற்றும் கல்வெட்டுகளின் மீதுள்ள ஈடுபாட்டால், பல ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565645675,"sku":"BK1564","price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/punniyam-theduvome-paagam-ii.jpg?v=1788082393"},{"product_id":"vaan-mann-penn","title":"வான் மண் பெண்","description":"\u003cp\u003eஉலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565711211,"sku":"BK1565","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/vaan-mann-penn.jpg?v=1788082395"},{"product_id":"therikkattu-jamingalin-varalaru","title":"தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு","description":"\u003cp\u003eநல்ல கதைசொல்லி ஒருவரோடு (நூலாசிரியர்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது நாம் உணர்வோம். இவரின் இயல்பான வட்டார மொழி வனப்பு, இந்த வரலாறுகளை நம்ம பாட்டிமாரே பக்கத்திலிருந்து நமக்குச் சொல்வது போல் உணர்வது இன்னுமொரு சிறப்பு.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565776747,"sku":"BK1566","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/therikkattu-jamingalin-varalaru.jpg?v=1788082398"},{"product_id":"thiranthidu-seesem","title":"திறந்திடு சீஸேம்","description":"\u003cp\u003eதேடுதல்’ தான் மனிதனை முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதிலும் பொக்கிஷங்கள், புதையல்கள் பற்றிய தேடுதல் ஆதி காலம் முதல் இன்று வரை மனிதர்களின் வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் குழந்தைகளின் விளையாட்டில் கூட `புதையல் வேட்டை’ முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அபூர்வமான விலை மதிப்பு மிக்கக் கற்கள், அரிய நூல்கள், அரசர்கள், செல்வந்தர்கள் புதைத்து வைத்த நாணயங்கள், ஆபரணங்கள் என்று ஏராளமான பொக்கிஷங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் முகில் தனக்கே உரிய சுவாரசியமான விறுவிறுப்பான நடையில் பொக்கிஷங்களின் வரலாற்றை எழுதியிருக்கிறார். `திறந்திடு சீஸேம்’ என்று சொன்னவுடன் மந்திரக்குகை திறந்து ஏராளமான செல்வத்தை அள்ளிக் கொடுப்பதுபோல், இந்தப் புத்தகமும் உங்களுக்கு ஆச்சரியத்தை அள்ளி வழங்கக் காத்திருக்கிறது!\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565842283,"sku":"BK1567","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thiranthidu-seesem.jpg?v=1788082400"},{"product_id":"annangal-yezhu","title":"வண்ணங்கள் ஏழு","description":"\u003cp\u003eவண்ணங்கள் ஏழு என்று வகைப்படுத்தினாலும் இவற்றுக்கு இடையே எழாயிரம் வண்ணங்களின் கலவை இருக்கத்தான் செய்கிறது. அதைப்போலத்தான் ஆண், பெண் என்று இருபாலரை மட்டும் நாம் பெரும்பான்மை பாலினங்களாக சொல்லிக்கொண்டாலும் இடைப்பட்ட பாலினங்கள் பல உண்டு. இவர்களைப் ‘பால் புதுமையர்’ என்று அறிவியல் வரையறுத்தாலும், பொது சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் ‘புரியாத புதிர்’. நம் மனத்தை ஆட்கொண்டிருக்கும் அந்தப் புதிரை அவிழ்க்கும் முயற்சிதான் வா.ரவிக்குமாரின் இந்த படைப்பு. மாற்றுப்பாலினத்தவர் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் வெளியான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. பால் புதுமையர் குறித்து நம் மனங்களில் அப்பிக்கிடக்கிற கற்பிதத்தைக் களைவதுதான் இந்தக் கட்டுரைகளின் நோக்கம். நம் அனைவரையும் போன்றதுதான் பால் புதுமையரின் வாழ்க்கை. அவர்களுக்கும் நம்மைப் போலவே குடும்பம், ஆசைகள், கனவுகள் என எல்லாமும் உண்டு. ஹார்மோன்களில் ஏற்படுகிற மாற்றத்துக்கு அவர்களை எப்படிக் குற்றவாளியாக்க முடியும்? ஆனால், அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். அவர்கள் ஏதோ செய்யக் கூடாத தவறைச் செய்துவிட்டதைப் போல, அவர்களைப் புறக்கணிக்கிறோம். பெரும்பாலான குடும்பங்கள் அவர்களைக் கைவிடுகின்றன. சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்தலும் புறக்கணிப்புமே பால் புதுமையரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565875051,"sku":"BK1568","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/annangal-yezhu.jpg?v=1788082403"},{"product_id":"nermugam-kavanam","title":"நேர்முகம் கவனம்","description":"\u003cp\u003eஎழுத்துத் தேர்வில் உயரிய மதிப்பெண் குவிக்கும் பலர் சறுக்கி விழுவது நேர்முகத் தேர்வில்தான். இந்த சோகம், வழக்கமான அலுவலகப் பணிவாய்ப்பு முதல் குடிமைப் பணிவரை பொருந்தும். ஏனென்றால், நேர்முகத் தேர்வை அணுகுவதற்கான பாடத்திட்டம் எந்த பல்கலைக்கழகத்திலும் கிடையாது. இதற்கென குறுக்குவழியோ சூத்திரங்களோ கிடையாது. ஆனால், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற பல நுட்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் தேர்வாளர்கள் நேர்முகத் தேர்வை நடத்தித் தங்களுக்கு தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்கிறார்கள். இத்தகைய நுட்பங்களை நுணுக்கமாக விளக்கும் புத்தகம்தான், ‘நேர்முகம்-கவனம்’.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565907819,"sku":"BK1569","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nermugam-kavanam.jpg?v=1788082405"},{"product_id":"emathullam-sudar-viduga","title":"எமதுள்ளம் சுடர்விடுக","description":"\u003cp\u003eஎளிய மனிதர்களுடன் சிக்கலற்ற மொழியில் இலகுவாக பேசுவது போன்று எழுதுபவர் பிரபஞ்சன். அந்த மொழியில் எப்போதும் ஒரு வெளிச்சம் இருக்கும். இருள் படிந்து கிடக்கும் உள்ளங்களைத் திறக்கும் அவ்வெளிச்சத்தை இங்கும் ஏந்தி வருகிறது இப்புத்தகம்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565940587,"sku":"BK1570","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/emathullam-sudar-viduga.jpg?v=1788082407"},{"product_id":"ini-ellaam-nalame","title":"இனி எல்லாம் நலமே","description":"\u003cp\u003eபதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் தொடராக வெளிவந்தன. நேர்த்தியான உள்ளடக்கத்துக்காக அப்போதே வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் பாரட்டையும் பெற்றன. இந்நூல் பெண்களுக்கானது மட்டுமல்ல; மகள், மனைவி, அம்மா எனப் பெண்களோடு பயணிக்கும் ஆண்களும் அவசியம் படித்துத் தெரிந்துகொள்வதற்கானது. பதின் பருவ மகள் ஏன் அடிக்கடி தனிமையை நாடுகிறாள், கருவுற்றிருக்கும் மனைவிக்கு ஏன் எதையும் பிடிப்பதில்லை, குழந்தை பிறந்த பிறகு மனைவியின் எரிச்சல் அதிகரிக்க என்ன காரணம், பேரக் குழந்தைகள் எடுக்கும் வயதில் அம்மாவை ஆட்டிப்படைக்கும் கவலை என்ன என்று நம்மில் பலருக்கும் பல்வேறுவிதமான கேள்விகளும் குழப்பங்களும் எழலாம். அவற்றுக்குப் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784565973355,"sku":"BK1571","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ini-ellaam-nalame.jpg?v=1788082410"},{"product_id":"kevli-neram","title":"கேள்வி நேரம்","description":"\u003cp\u003eமத்திய அரசுப் பணித் தேர்வுகள், மாநில அரசுப் பணித் தேர்வுகள், இதர போட்டித் தேர்வுகளிலும் பொது அறிவுக் கேள்வி-பதில்கள் முக்கிய அம்சமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த இரு தரப்பினரைத் தாண்டி பொது அறிவுத் தாகம் கொண்டவர்களும் தமிழகத்தில் அதிகம். இவர்கள் அனைவருடைய தேவைகளையும் மனதில்கொண்டு இந்தக் கேள்வி-பதில் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் தேடித்தேடிச் சேர்க்கப்பட்டுள்ளன.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784566333803,"sku":"BK1572","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kevli-neram.jpg?v=1788082412"},{"product_id":"tinguvidam-kelungal-paagam-2","title":"டிங்குவிடம் கேளுங்கள் (பாகம் - 2)","description":"\u003cp\u003e‘கேள்வி கேட்கும் குழந்தையே, அறிவின் விதையை விதைக்கும் விவசாயி’ என்று சொல்வது உண்டு. உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது ‘கேள்வி’ கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது. குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், ‘பெரியவர்களும் ஆசிரியர்களும்தான் கேள்விகள் கேட்பார்கள்; பதில் சொல்வது குழந்தைகள், மாணவர்களின் பொறுப்பு’ என்கிற எழுதப்படாத விதி ஒன்று இங்கே இருப்பதுதான். அதனால், கேள்வி கேட்க நினைக்கும் மாணவர்களின் இயல்பான ஆர்வம் தொலைந்துவிடுகிறது. உங்கள் கைகளில் தவழும் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ இரண்டாம் பாகம், வெறும் புத்தகம் அல்ல. இது ஓர் அறிவியல் களஞ்சியம். இந்து தமிழ் திசை ‘மாயா பஜார்’ இணைப்பிதழில் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ பகுதியில் கேட்கப்பட்ட அற்புதமான கேள்விகளின் தொகுப்பு இது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784566399339,"sku":"BK1573","price":83.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tinguvidam-kelungal-paagam-2.jpg?v=1788082415"},{"product_id":"aangilam-arivome-paagam-iv","title":"ஆங்கிலம் அறிவோமே - IV","description":"\u003cp\u003eபுதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமைப் படைத்தவர்களையும் இத்தொடர் ஈர்த்துவருகிறது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுபவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே இரண்டு புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்தத் தொடரின் அடுத்த பகுதியைத் தற்போது வெளியிடுகிறோம். சிரித்து, ரசித்து படித்தபடியே உங்களுடைய ஆங்கில அறிவை மேருகேற்றக் கைகொடுக்கும் கையேடு இது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784566595947,"sku":"BK1574","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aangilam-arivome-paagam-iv.jpg?v=1788082418"},{"product_id":"kadalamma-pesuran-kannu","title":"கடலம்மா பேசுறங் கண்ணு!","description":"\u003cp\u003eகாடுகளில் வாழும் பழங்குடிகளைப் போல், கடலைச் சார்ந்து வாழ்பவர்களும் கடல் பழங்குடிகள்தான். அவர்களுடைய தொழிலும் பண்பாடும் பல விதங்களில் இன்றைக்கு மாறியிருந்தாலும்கூட, வேட்டை – உணவு சேகரிப்பு என்ற பண்டைய அடிப்படை அப்படியேதான் இருக்கிறது. தொழில் புரியும் விதம் மட்டும் நவீனமடைந்திருக்கிறது. தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஒருபுறம். மற்றொருபுறம் சமவெளி மக்களும் நமது கடல்களையும் மீனவ மக்களையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருப்பதே நிதர்சன நிலை. சமவெளியில் வேளாண்மை பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதைப் போலவே, மீனவர்களின் வாழ்வாதாரமான கடல் வளமும் ஆபத்தின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத வளமாகக் கருதப்பட்ட கடல்கள், இன்றைக்குப் பெரும் தடுமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. அதன் காரணமாகவும் அரசியல்ரீதியிலும் மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784566825323,"sku":"BK1575","price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kadalamma-pesuran-kannu.jpg?v=1788082420"},{"product_id":"puthiya-kalvi-kolgai-nanmaiyaa-theemaiyaa","title":"புதிய கல்விக் கொள்கை","description":"\u003cp\u003eபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். அப்படிப்பட்ட கேள்விக்குறிக்கான பதிலை, தனது கருத்து ஏரைக் கொண்டு வாசிப்போரின் சிந்தனையில் ஆழ உழுது விதைக்கிறார். கூடவே, ஒவ்வொரு பெற்றோரும் கடனே என்று இருந்துவிடாமல் தங்களின் பொறுப்பையும் உணர வைக்கிறார். எதிர்காலத்தில் உறுதிமிக்க தேக்குமரமாக வளரத்தான் போகிறது என்பதற்காக, சின்னஞ்சிறிய கன்றாக இருக்கும்போது அதன் மீது நாம் சுமைகளை வைப்போமா? கனமான ஆணிகளை அறைவோமா? அப்படித்தான் இருக்கிறது இந்த கல்விக் கொள்கை என்று தனது கருத்துரையை தெளிவாக்கி இருக்கிறார்\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567087467,"sku":"BK1576","price":58.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/puthiya-kalvi-kolgai-nanmaiyaa-theemaiyaa.jpg?v=1788082423"},{"product_id":"pormunai-mudhal-therumunai-varai","title":"போர்முனை முதல் தெருமுனை வரை","description":"\u003cp\u003eஇரவு பகல் தெரியாது நமக்காக எல்லையில் தேசத்தைக் காக்கும் கவசப் பணியில் இருக்கிறார்கள் நமது ராணுவ வீரர்கள். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்களையும், காலத்துக்கேற்ற தொழில்நுட்ப வசதிகளுடன் எதிரிகளை சமாளிக்கும் நவீன சாதனங்களையும் கட்டமைத்துத் தந்து கொண்டே இருக்கிறது இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ). முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பணியாற்றிய இந்த நிறுவனத்தின் ராணுவ விஞ்ஞானி முனைவர் வி. டில்லிபாபு.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567153003,"sku":"BK1577","price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pormunai-mudhal-therumunai-varai.jpg?v=1788082425"},{"product_id":"moondrezhuththu-athisayam-mgr","title":"மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்!","description":"\u003cp\u003eவேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதன்முதலில் புரட்சி நடத்திய பெருமை வேலூருக்கு உண்டு. இப்போது அதே வேலூரில்  கல்விப் புரட்சியை விஐடி ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் விஐடியில் படிக்கின்றனர். ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஆலமரமாய் விஐடி கிளை பரப்பி நிற்கிறது. இந்த ஆல விருட்சத்துக்கு விதை போட்ட பெருமை தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உண்டு. எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும் என்பதற்கு விஐடி ஒரு உதாரணம். அவரது ஆட்சி பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு மக்களை நேசித்த, மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் எம்.ஜி.ஆர் என்பதில் சந்தேகம் இல்லை. எம்.ஜி.ஆரோடு அரசியலில் நெருக்கமாக பயணித்தவர் விஐடி பல்கலைக்கழக வேந்தரும் முன்னாள் அமைச்சருமான ஜி.விசுவநாதன். எம்.ஜி.ஆருடனான அவருடைய பசுமையான அனுபவங்களின் தொகுப்பே உங்கள் கைகளில் தவழும் ‘மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்!’ என்ற இந்த நூல்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567185771,"sku":"BK1578","price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/moondrezhuththu-athisayam-mgr.jpg?v=1788082427"},{"product_id":"digital-bothai","title":"டிஜிட்டல் போதை","description":"\u003cp\u003e2017-ம் ஆண்டு, உலகையே உலுக்கின ‘புளூ வேல்’ மரணங்கள். ‘புளூ வேல்’ எனும் சமூக வலைதள விளையாட்டால், அந்த மரணங்கள் நிகழ்ந்தன. அவை அனைத்தும் தற்கொலை மரணங்கள். தமிழகத்திலும் சில தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் நடந்தன. இதில் பெரும்பாலும் பதின் வயதினரும் இளைஞர்களும்தான் பாதிக்கப்பட்டனர். ‘ஏன்? எதற்கு இந்தத் தற்கொலைகள்?’ என்று ஆராய்ந்தபோது, இணையம் குறித்து பதின் வயதினர், இளைஞர்கள் ஆகியோருக்குப் போதுமான புரிதலும் விழிப்புணர்வும் இல்லாமல் போனதே காரணம் என்பது தெரிய வந்தது. சதாசர்வ காலமும் இணையத்திலேயே மூழ்கிக் கிடக்கும் அவர்களுக்கு உடல் நலம் மட்டுமல்ல, மனநலமும் சீர்கெடுகிறது என்பதையும் அந்த மரணங்கள் நமக்குக் கூறின! இதைத் தொடர்ந்துதான், ‘இந்து தமிழ்’ நாளிதழின், ‘நலம் வாழ’ இணைப்பிதழில், ‘டிஜிட்டல் போதை’ எனும் தலைப்பில், ‘பாதுகாப்பாக இணையத்தைப் பழகுவது எப்படி?’ என்பது குறித்துத் தொடர் எழுத ஆரம்பித்தார் வினோத் ஆறுமுகம். கணினி மென்பொருள் துறையைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே, ‘பாதுகாப்பான இணையம்’ குறித்துப் பல்வேறு ஆய்வுகளையும் களச் செயல்பாடுகளையும் மேற்கொண்டவர். அந்த அனுபவங்கள் நிறைந்த கட்டுரைகள் வாரா வாரம் வெளியாகி, வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567218539,"sku":"BK1579","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/digital-bothai.jpg?v=1788082430"},{"product_id":"nadaivazhi-ninaivugal","title":"நடைவழி நினைவுகள்","description":"\u003cp\u003eதமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர், கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்த நூலில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் கிட்டத்தட்ட நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் நூல் இது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை எழுதப்போகும் ஒரு ஆய்வாளருக்கு முன்னோடி நூலும்கூட. தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளின் புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் தொகுக்கப்படுவது சமீபகாலம் வரை தமிழ்ச் சமூகத்தில் உணரப்படாத பின்னணியில் ‘நடைவழி நினைவுகள்’ நூல் தமிழில் ஒரு சாதனை.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567251307,"sku":"BK1580","price":154.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nadaivazhi-ninaivugal.jpg?v=1788082432"},{"product_id":"ariviyal-1000","title":"அறிவியல் 1000","description":"\u003cp\u003eஅறிவியல் என்பது என்ன? விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலகமே அறிவியலால் இயங்கிக்கொண்டிருக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது. எப்போது ஒரு நிகழ்வையோ அல்லது செய்தியையோ அறிவியல் கண்ணோட்டத்தோடு  பார்க்க கற்றுக்கொள்கிறோமோ அப்போதுதான் அறிவியல் தென்படும். அறிவியலை பொறுத்தவரை அதை முழுமையாகப் புரிந்து படிக்கும்போதுதான் அது நம் வாழ்க்கையில் எப்படி ஒருங்கிணைந்து கிடக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அறிவியலை எளிதாகத் தெரிந்துகொள்ள பரிசோதனைகள்தான் இன்றுவரை உதவிவருகின்றன. ஆனால், அந்தப் பரிசோதனையை எந்தக் கஷ்டமும் இன்றி தெரிந்துகொள்ள வழியே இல்லையா என்று நொந்துக்கொள்வோரும் உண்டு. ஆனால், தன்னுடைய ஆழ்ந்த அறிவியல் புலமையால் அதை முறியடித்துக் காட்டியவர் பேராசிரியர் அ. சுப்பையா பாண்டியன். விஞ்ஞானத்தை விளையாட்டாக எடுத்துச் சொல்வதில் கைதேர்ந்தவர். மிகவும் கடினமான அறிவியலையும் குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில்  நூற்றுக்கணக்கான அறிவியல் விளையாட்டுகளை உருவாக்கியிருக்கிறார். அறிவியலை விளையாட்டாக சொல்வது மட்டுமல்லாமல், அது நம் வாழ்க்கையில் எங்கெல்லாம் பயன்படுகிறது என்பதையும் அழகாக எடுத்துச்சொல்வதில் புலமையுடையவர்.அப்படி அவர் உருவாக்கிய நூற்றுக்கணக்கான அறிவியல் விளையாட்டுகளை குழந்தைகளுக்குக் கொண்டு செல்ல விரும்பினோம்.  ‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பாக வரும் ‘மாயாபஜார்’ பகுதியில் ‘அடடே அறிவியல்’ என்ற பெயரில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு சுப்பையா பாண்டியன் தொடராக எழுதினார். அந்தத் தொடரின் மூலம் அறிவியலின் ஒவ்வொரு விதியையும் பரிசோதனையையும் விளையாட்டாக எடுத்து சொல்லி அதன் மகத்துவத்தைக் குழந்தைகளிடம் கொண்டுசேர்த்தார். பள்ளிகள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் அந்தத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567284075,"sku":"BK1581","price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ariviyal-1000.jpg?v=1788082434"},{"product_id":"arasu-palli-to-america","title":"அரசு பள்ளி To அமெரிக்கா","description":"\u003cp\u003eகல்வி என்னும் ஆயுதம் கிடைக்கப் பெறும் ஒரு மனிதன் எவ்வாறு பேராற்றல் மிக்கவன் ஆகிறான் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் இந்நூலை எழுதியுள்ள ரவிச்சந்திரன் சோமு. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் எளிய குடும்பத்தில் பிறந்து, இன்று அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்துள்ளார் ரவி. தன்னுடைய இந்த உயர் நிலைக்கு அடித்தளமிட்ட பள்ளி வாழ்க்கை பற்றி ‘அரசு பள்ளி To அமெரிக்கா’ என்ற இந்நூலில் அழகுபட விவரித்துள்ளார். குறிப்பாக தொடக்கக் கல்வி பயின்ற வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, உயர் நிலை வகுப்புகள் பயின்ற மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைக் கல்வி பெற்ற மன்னார்குடியில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் தன்னை செதுக்கி, அறிவூட்டி, சான்றோனாக்கிய ஆசிரியர்கள் பற்றியும், நல்ல மாணவர்களை உருவாக்குவதில் அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த பணிச் சிறப்பு பற்றியும் நினைவுகூர்கிறார் நூலாசிரியர்.  இன்றைய நவீனங்கள் ஏதுமில்லா 40, 50 ஆண்டுகளுக்கு முந்தைய பள்ளி வகுப்பறைகளில், சான்றாண்மைமிக்க மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் பற்றி அறியச் செய்வதன்மூலம், இன்றைய ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உத்திகளில் புதிய திசைவழிகாட்டியாக இந்நூல் அமைகிறது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567316843,"sku":"BK1582","price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/arasu-palli-to-america.jpg?v=1788082436"},{"product_id":"thottanaithu-oorum-amizhtham","title":"தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்","description":"\u003cp\u003eஇயற்கை வேளாண்மை செய்ய விழைபவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த நூல் உருவாகியிருக்கிறது. மிகவும் விரிவாகவும் படிப்படியாகவும் இயற்கை வேளாண் முறைகள் இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வெறும் நடைமுறைக் கையேடாக மட்டுமில்லாமல், ஏன் இந்த முறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற பின்னணி குறித்தும் இந்த நூல் விளக்கியுள்ளது. இயற்கை வேளாண்மைத் துறையில் நெடிய அனுபவம் பெற்றவரும் சிறந்த சூழலியல் எழுத்தாளருமான பாமயன் இந்த நூலை எழுதியுள்ளார். இன்றைய காலகட்டத்தில், இப்படி ஒரு நூலை எழுத அவரைவிட வேறு யாரும் இவ்வளவு பொருத்தமாக இருக்கமாட்டார்கள்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567349611,"sku":"BK1583","price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thottanaithu-oorum-amizhtham.jpg?v=1788082439"},{"product_id":"velluvatho-ilamai","title":"வெல்லுவதோ இளமை!","description":"\u003cp\u003eஉற்சாகம் தரும் திருப்புமுனை பிறக்கும்போதே யாரும் வெற்றியாளராகப் பிறப்பதில்லை. வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களையும் திருப்புமுனைகளையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக்கிக்கொள்பவர்களே உயரத்தை அடைகிறார்கள். குறிப்பாக, எல்லோருக்குமே வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திருப்புமுனை ஏற்படவே செய்கிறது. ஆனால், அதை எல்லோருமே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சாதனையாளர்களாக மாறிவிடுவதில்லை. வெகுசிலரே திருப்புமுனையைச் சரியாகப் பயன்படுத்தி, வெற்றியாளர்களாக மாறுகிறார்கள்; உலகத்தை வெல்கிறார்கள். எல்லா வயதிலும் திருப்புமுனைகள் வரலாம். ஆனால், இளமைக் காலத்தில் வரும் திருப்புமுனைக்கு தனி மதிப்புண்டு. லட்சிய வேட்கையும் ஜெயிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும் விதைக்கும் வயது அதுதான். இன்று ஒவ்வொரு துறையிலும் மிளிரும் ஆளுமைமிக்கவர்களின் இளமைக் காலத்தைத் திருப்பி பார்த்தால், அவர்கள் சந்தித்த தோல்விகள், தடைகள், தடுமாற்றங்களை நீளமாகப் பட்டியலிடலாம்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567382379,"sku":"BK1584","price":83.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/velluvatho-ilamai.jpg?v=1788082442"},{"product_id":"thirunambiyum-thirunangaiyum","title":"திருநம்பியும் திருநங்கையும்","description":"\u003cp\u003eஒருவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுவதும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுவதும் நேற்று, இன்று நிகழ்ந்தவையல்ல. பரிணாம வளர்ச்சியில் மனித இனம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்பட்டது எவ்வளவு அறிவியல்பூர்வமானதோ அதைப் போன்றதுதான் திருநர் உடலில் நிகழும் மாற்றங்களும். தங்கள் அறிவுக்குப் புலப்படாத எதையுமே அச்சப்பட்டு ஒதுக்கிவைப்பது மனிதர்களின் இயல்பு. ஆரம்பத்தில் திருநர் சமூகத்தையும் இந்த உலகம் அப்படித்தான் அணுகியது. பேய் பிடித்துவிட்டது என்றும் மனநலக் குறைபாடு என்றும் தவறாகப் புரிந்துகொண்டு பலர் வினையாற்றியிருக்கிறார்கள். தங்களது உடல் - உள மாறுதல்களை இந்தச் சமூகத்துக்குப் புரிய வைக்க முடியாமல் அடையாளமின்றி அழிந்த திருநர்கள் ஏராளம்.ஆனால், இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஆண் பால், பெண் பால் போலவே திருநர்களை மூன்றாம் பாலினமாக அரசு அங்கீகரித்துள்ளது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567415147,"sku":"BK1585","price":102.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thirunambiyum-thirunangaiyum.jpg?v=1788082444"},{"product_id":"nalam-tharum-naangezhuthu","title":"நலம் தரும் நான்கெழுத்து","description":"\u003cp\u003eஇன்றைய வாழ்க்கை அவசர கோலமாகிவிட்டது. உலகில் பலரது வாழ்க்கை, ஓட்டத்துக்கு இடையேதான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிக்கொண்டு நம் உடல் படாத பாடு படுகிறது. நோய்கள் பெருகுகின்றன. அதற்கு மருத்துவர்களைப் பார்க்கிறோம், சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறோம்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567447915,"sku":"BK1586","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nalam-tharum-naangezhuthu.jpg?v=1788082446"},{"product_id":"aadum-kalam","title":"ஆடும் களம் (தேசத்தைத் தலைநிமிர வைத்த வீராங்கனைகள்)","description":"\u003cp\u003eஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கத் தொடங்கியது முதல் தற்போது வரையிலான வீராங்கனைகளின் வெற்றிக் கதைகளின் தொகுப்பே இந்நூல். ஆண்களின் வெற்றியை ஆயிரம் கரங்கள் கொண்டாடினால் பெண்களின் வீர வரலாற்றை உருப்பெருக்கி மூலம்தான் தேடவேண்டியிருக்கிறது. அந்தக் குறையை இந்நூல் போக்குகிறது. அரை நூற்றாண்டு கால வீராங்கனைகளின் விளையாட்டுப் பயணத்தைப் பேசுகிறது இந்நூல். ஒவ்வொருவரின் வெற்றிக் கதையை மட்டும் கொண்டாடாமல் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதை அவர்கள் நேர்த்தியாகச் சமாளித்த விதத்தையும் இந்நூல் விவரிக்கிறது. அந்த வகையில் தனித்துவம் பெறுகிறது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567480683,"sku":"BK1587","price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aadum-kalam.jpg?v=1788082448"},{"product_id":"aan-nandru-penn-inithu","title":"ஆண் நன்று பெண் இனிது","description":"\u003cp\u003eதன்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றியும், ஆண்-பெண் உறவு பற்றிய புரிதலை உணர்த்தும் விதமாக, தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியும் கட்டுரைகளாக நினைவுகூர்கிறார் கவிஞர் சக்திஜோதி.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567513451,"sku":"BK1588","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aan-nandru-penn-inithu.jpg?v=1788082451"},{"product_id":"thuli-samuthiram-sufi","title":"துளி சமுத்திரம் சூஃபி","description":"\u003cp\u003eஉலகத்தின் மதங்கள் அனைத்துக்கும் அன்பே ஆதாரம். இறைவனை அன்பின் வழியில் அடைவதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. உலகத்து உயிர்கள் அனைத்திலும் நீக்கமற உறைந்திருக்கும் இறையைக் காண வேண்டுமென்றால், முதலில் நம்மை நாம் உணர வேண்டும். அஞ்ஞான இருட்டில் மூழ்கியிருக்கும் நம்மை அதிலிருந்து மீட்டு உள்ளொளி தரும் அணையாச் சுடரே ஆன்மிகம். நம்மை மேம்படுத்தும் ஆன்மிக வழிகளுள் ஒன்றுதான் சூஃபி தத்துவம்.உலகில் உதித்த இறையியலாளர்கள் அனைவருமே மக்களின் மேன்மைக்காகத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள். நம்மில் ஒருவராக உதிக்கும் அவர்கள் ஏதோவொரு புள்ளியில் மெய்ஞானம் பெற்றுப் பிறருக்குப் போதிக்கும் நிலையை எய்துகிறார்கள். அவர்களது வாழ்க்கையே நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அமைகிறது. உலகத்து மக்கள் மெய்ஞானம் பெற்று மேன்மையடைய வழிகாட்டிய 42 சூஃபி ஞானிகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையையும் தத்துவத்தையும் எளிய மொழியில் விளக்கியிருக்கிறார் நூல் ஆசிரியர் முகமது ஹுசைன்.‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் இடம்பெற்ற கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ‘எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது’ என்று சொன்ன ஜலாலுதீன் ரூமி தொடங்கி ஒவ்வொரு சூஃபி ஞானியும் நம் மனக் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்துவைக்கிறார்கள். கதவுகள் திறக்க, திறக்க மனம் விசாலமடைகிறது. சூஃபி ஞானி ராபியா சொன்னதைப் போல இன்பமும் துன்பமும் வேறல்ல என்பது புலப்படுகிறது. இரண்டுமே கடவுளின் கொடைதான் என்று உணர்வதே ஆன்ம ஞானம். இதைத்தான் ‘ஆன்மா அன்பால் மட்டுமே தூய்மையடையும்’ என்கிறார் ஞானி ஹபிப் முகமது.கௌதம புத்தரும் இப்ராஹீம் இப்னு அத்ஹமும் ‘துறவறம்’ என்கிற புள்ளியில் ஒன்றிணைகிறார்கள். பொ.ஆ. (கி.பி) 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்ராஹீம், ஆப்கானிஸ்தானின் செல்வாக்கு பெற்ற இளவரசராக இருந்தார். ஓட்டின் மீது ஒட்டகத்தைத் தேடுவது அறிவீனம் என்பதை உணர்ந்த அவர், அரச வாழ்வின் சகல வசதிகளையும் துச்சமெனத் தூக்கியெறிந்தார். மனிதர்கள் வருவதும் போவதுமாக இருக்கும் இந்தப் பூமி, சத்திரம் என்பதை உணர்ந்தார். தான் உணர்ந்த உண்மையை உலகுக்கும் அவர் உணர்த்தினார். 1,700 ஆசிரியர்களின் மூலம் ஆயிரக்கணக்கான நூல்களைக் கற்றறிந்த ஷகீக் பல்கீ, தான் கற்றவை அனைத்துமே ஏற்கெனவே யாரோ எழுதியளித்த அறிவுப் பிச்சை என்பதை உணர்ந்த நொடியில் ஞானம் பெற்றார். அறிவும் செல்வமும் பிறருக்குக் கொடுப்பதற்கே என்பதை உணர்ந்து முற்றும் துறந்து நாடோடியாகத் திரிந்தார்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567546219,"sku":"BK1589","price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thuli-samuthiram-sufi.jpg?v=1788082453"},{"product_id":"perumaimigu-sakthi-thalangal","title":"பெருமைமிகு சக்தி தலங்கள்","description":"\u003cp\u003eஆதி சக்தியின் ரூபமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் 51 பாகங்களாக விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  தேவி பாகவதம் என்ற நூல், சக்திக்கு 108 பீடங்கள் உள்ளதாகவும், அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்றும் கூறுகிறது. தந்திர சூடாமணியில் 51 சக்தி பீடங்கள் பிரதானமானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கராச்சாரியாரின் ‘அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரம்’ 18 மகா சக்தி பீடங்கள் பற்றியும், காளிகா புராணம் 4 ஆதி சக்தி பீடங்கள் பற்றியும், மார்க்கண்டேய மற்றும் திருவிளையாடற் புராணங்கள் 64சக்தி பீடங்கள் குறித்தும்,ஸ்கந்த புராணம் மற்றும் பத்ம புராணங்கள், சக்தி தேவிக்கு 70 முதல் 108 பீடங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றன. எவ்வகையிலும் சாராத உப பீடங்கள் 55 உள்ளதாகவும் அறியப்படுகிறது.அநீதியை அழிக்கும் பூமியாகவும், அன்பைப் பொழியும் இடமாகவும் சக்தி தலங்கள் விளங்கி வருகின்றன. தேவியானவள் அனைத்து அரக்கர்களையும் அழித்து பக்தர்களை காப்பதாக அறியப்படுகிறது. அரக்கன் என்பவன் அகம், புறம் ஆகிய இரு இடங்களிலும் அழிக்கப்பட வேண்டியவனாக இருக்கிறான். கண்களுக்கு நேரே இருக்கும் அரக்கனை அழிப்பது நடக்கக் கூடியதே. ஆனால் நமக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும் துர்குணங்களாகிய அசுரர்களை அழிப்பதே நம்முடைய ஆன்மிக முன்னேற்றத்துக்கு வழிகாட்டக் கூடியதாக அமையும்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567578987,"sku":"BK1590","price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/perumaimigu-sakthi-thalangal.jpg?v=1788082456"},{"product_id":"sakthi-peedangalil-silirpaana-ula","title":"சக்தி பீடங்களில் சிலிர்ப்பான உலா","description":"\u003cp\u003eஆதி சக்தியின் ரூபமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தந்தை தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, அவர் நடத்திய யாகம் அழியுமாறு சபித்தார். தட்சனின் மகள் என்று தான் அழைக்கப்படுவதை விரும்பாத அவர், பின்னர் அந்த யாகத் தீயிலேயே எரிந்து போகிறார். சிவபெருமானால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். தாட்சாயிணியின் உடலை தன் தோளில் சுமந்து கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார் சிவபெருமான்.சிவபெருமானின் தாண்டவத்தை நிறுத்த, திருமால் தன் சக்ராயுதத்தை தாட்சாயிணியின் உடல் மீது செலுத்துகிறார். இதில் சக்தியின் உடல் 51 பாகங்களாக சிதறி பல்வேறு இடங்களில் விழுகிறது. இந்த 51 பாகங்களே 51 சக்தி பீடங்கள் ஆனதாக கூறப்படுகிறது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567611755,"sku":"BK1591","price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sakthi-peedangalil-silirpaana-ula.jpg?v=1788082458"},{"product_id":"mounam-kalaiththa-cinema-1","title":"மௌனம் கலைத்த சினிமா","description":"\u003cp\u003eஇந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ இதழில் எழுத்தாளர் சோழ நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு நிலத்தின் தனித்த பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய அம்சங்களும் இப்புத்தகத்தில் இயல்பாக பதிவாகியிருக்கின்றன. அந்தந்த மொழியின் வரலாறு, அது பேசப்படும் மக்களின் பண்பாட்டுச் சூழல், பிராந்திய மொழி சினிமாவின் பாதைக்கு அது அடித்தளமிட்ட பின்னணி என அடுக்கடுக்கான விஷயங்களை ஆற்றொழுக்காகப் பதிவுசெய்திருக்கிறார் சோழ நாகராஜன். இந்தியாவின் முதல் பேசும்படமான ‘ஆலம் ஆரா’ வெளியானபோது ரசிகர்கள் அதை எப்படி உள்வாங்கிக்கொண்டனர், ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்கள் திரையரங்கில் காட்சியுடன் ஒலித்தபோது அதை எப்படியெல்லாம் ரசித்தனர் என்பன உள்ளிட்ட தகவல்களை சுவாரசியம் குன்றாமல் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். திரைக்கலைஞர்கள் தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட சவால்கள், கலை வெளிப்பாட்டின் மூலம் சமூக அங்கீகாரத்தை அவர்கள் வென்றெடுத்த தருணங்கள் என உத்வேகமூட்டும் வரலாறுகளும் திரைப்பட வரலாற்று நதியினூடே பளபளக்கும் கூழாங்கற்களாய் பதிவாகியிருக்கின்றன.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567644523,"sku":"BK1592","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/mounam-kalaiththa-cinema-1.jpg?v=1788082460"},{"product_id":"utporul-arivom","title":"உட்பொருள் அறிவோம்","description":"\u003cp\u003eமனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567677291,"sku":"BK1593","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/utporul-arivom.jpg?v=1788082462"},{"product_id":"sila-tharunangalum-sila-nigazhvugalum","title":"சில தருணங்களும் சில நிகழ்வுகளும்","description":"\u003cp\u003eநம் எல்லோரது நினைவிலும் ஆயிரமாயிரம் ஜன்னல்கள் கொண்ட ஞாபக அறைகள் இருக்கும். ஒவ்வொரு ஜன்னலைத் திறந்தால் ஒவ்வொரு கதை இருக்கும். நல்லது கெட்டது, இனிப்பு கசப்பு, நட்பு துரோகம் என்று நினைத்துப்பார்க்கவும் அந்த நினைவுகளில் மூழ்கிக் கடந்த காலத்துக்குச் சென்றுவரவும் அந்தக் கதைகள் கைகொடுக்கும். நம் அனுபவங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி என்றால் பிறரது அனுபவங்கள் உலகத்தைக் காட்டும் கண்ணாடி. மூத்தோரது அனுபவங்களில் பல நமக்குப் புதிய பாதைகளை அறிமுகப்படுத்தும். குழம்பித் தவிக்கிற மனங்களுக்குத் தெளிவைத் தரும். எண்பது வயதைக் கடந்த இதய நோய் நிபுணர் கல்யாணி நித்யானந்தனின் அனுபவங்களும் அதைத்தான் செய்கின்றன. கரோனா ஊரடங்கு நாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைய கல்யாணி நித்யானந்தனுக்கோ தன் மனத்தின் அடியாழத்தில் கூழாங்கற்களைப் போலப் பரவிக் கிடக்கும் நினைவுகளை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துக் கதைசொல்லும் பேறைத் தந்தன. பரண்மேல் போட்டுவைத்திருந்த பழைய டிரங்க் பெட்டியைத் திறந்து அதற்குள் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கதையைச் சொல்லும் நம் வீட்டுப் பெரியவர்களைப் போல அவ்வளவு அணுக்கமாகச் சம்பவங்களைக் கோத்திருக்கிறார் கல்யாணி. அவரது பால்ய கால நினைவுகள் தொடங்கி, கல்லூரிக் காலம், மருத்துவப் பணி, மறக்க முடியாத மனிதர்கள், வெளிநாட்டுப் பயணம், மருத்துவ ஆலோசனைகள், முதியோர் நலன் என்று வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் சுவைபட விவரித்திருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567710059,"sku":"BK1594","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sila-tharunangalum-sila-nigazhvugalum.jpg?v=1788082464"},{"product_id":"bharathiya-janada-katchiyin-puthiya-sirpi","title":"பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி","description":"\u003cp\u003eஇதுவரை பிரதமராக இருந்த எவரும் இப்படி கட்சியின் அடிமட்டத் தொண்டர் நிலையிலிருந்து தலைமைப் பதவிக்கு உயர்ந்ததில்லை. அது வெறும் அதிருஷ்டத்தின் மூலமோ, குடிப்பிறப்பின் மூலமோ அவருக்கு வாய்த்துவிடவில்லை. குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றது, மிகப் பெரிய வகுப்புக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் அதன் பிறகு கலவரத்துக்கே இடம் கொடாமல் பார்த்துக் கொண்டது, தொடர்ந்து மூன்று முறை குஜராத் முதலமைச்சராக தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகித்தது, நல்வாழ்வு திட்டங்களை அரசின் நிதியாதாரத்துக்கு சேதம் இல்லாமல் நிறைவேற்றியது, ஊழலுக்கு இடம்தராமல் நிர்வகித்தது, திட்டமிட்டு செயல்களைச் செய்தது, கட்சியையும் அரசு அதிகார இயந்திரத்தையும் ஒருங்கிணைத்தது என்று மோடியின் நிர்வாகத் திறமை பலதிறப்பட்டது. விமர்சகர்கள் பலரும் இவற்றைப் பற்றி குறிப்பிட்டதுகூட கிடையாது. 2014-ல் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைமையை ஏற்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராகி, தேர்தல் உத்திகளை வகுத்து வெற்றி பெற்றது என்று அனைத்துமே நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மோடியின் அரசியல் வாழ்க்கையைக்கூட நிறை – குறைகளை விவரித்து விமர்சிக்காமல், வாசகர்களுக்கு அவருடைய ஆற்றலை மட்டும் உணர வைத்திருக்கிறார் நூலாசிரியர். அரசியல், சமூகவியல், பொருளியல், மானுடவியல் மாணவர்களும் ஆர்வலர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். இந்தியாவின் மேற்குப்புற மாநிலத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் உலகத் தலைவர்களில் ஒருவராக இன்று அமெரிக்க அதிபர் பிடேனாலும் ஆஸ்திரேலியப் பிரதமராலும் பாராட்டப்படுவதும் ரஷ்ய, பிரெஞ்சு, கனடா அதிபர்களால் மதிக்கப்படுவதும் தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567742827,"sku":"BK1595","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/bharathiya-janada-katchiyin-puthiya-sirpi.jpg?v=1788082466"},{"product_id":"ondril-irandu-1","title":"ஒன்றில் இரண்டு","description":"\u003cp\u003eஓர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் இரு தெய்விக அற்புதங்கள், இரு தத்துவங்கள் என்னும் பொருளில் ஆலயங்களை அணுகும் புதிய முயற்சி ஜி.எஸ்.எஸ்ஸின் கட்டுரைகளில் வெளிப்படும். அதில் பொதிந்திருக்கும் உண்மை, தத்துவம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்னமும் பக்தியின் மீதான பற்றை உங்களுக்குள் வளர்க்கும். ஆலயம் தொடர்பான புராணம், வரலாறு, செவிவழிச் செய்திகள், கர்ண பரம்பரைக் கதைகள், அந்தப் பகுதி மக்களிடையே நிலவும் நம்பிக்கை, கலை, பண்பாட்டு விழுமியங்கள் போன்ற அனைத்தையும் கட்டுரையின் உள்ளடக்கத்தில் கொண்டுவரும் லாகவமான ஜி.எஸ்.எஸ்ஸின் எழுத்துப் பாணியில், ஒரு கட்டுரையில் அனேக கருத்துகளும் மிளிர்கின்றன. சென்னை நகரத்துக்கே காரணப் பெயராக அமைந்த சென்னமல்லீஸ்வரர் - சென்ன கேசவர் ஆலயம், வட சென்னை வியாபாரிகளுக்கெல்லாம் காவல் தெய்வமாக விளங்கும் சின்னக்கடை அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் இரு தெய்வத் திருவுருக்கள், திருப்பாற்கடல் திரிமூர்த்தி ஆலயம், தாய்லாந்தின் ப்ரா ப்ரோம் ஆலயம் என ஒவ்வொரு ஆலயத்திற்குள்ளும் உறைந்திருக்கும் இரு அதிசயங்கள் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567775595,"sku":"BK1596","price":77.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ondril-irandu-1.jpg?v=1788082467"},{"product_id":"kaviri-arasiyal","title":"காவிரி அரசியல்","description":"\u003cp\u003eதமிழகம் வஞ்சிக்கப்பட்ட வரலாறு\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567808363,"sku":"BK1597","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kaviri-arasiyal.jpg?v=1788082469"},{"product_id":"sirithralaya","title":"சிரித்ராலயா","description":"","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567841131,"sku":"BK1598","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sirithralaya.jpg?v=1788082471"},{"product_id":"vetriyin-ragasiyangal-615","title":"வெற்றியின் இரகசியங்கள்","description":"\u003cp\u003eசமூக கட்டமைப்பில் பின்தங்கியிருக்கும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து பல்வேறு தடைகளைத் தகர்த்து பல துறைகளிலும் முத்திரை பதித்திருக்கும் 25 ஆளுமைகளைக் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. பேராசிரியர் அ.முகமது அப்துல்காதரின் தெளிவான நீரோடை போன்ற எழுத்து நடை கட்டுரைகளின் சிறப்பைக் கூட்டுகின்றன. இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த இளைய தலைமுறைக்கு புதிய பாதையையும் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சக்கூடியவையாகவும் இந்தக் கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆளுமைகளின் திறமைகளுக்கு ஒத்திசைவாக ஜென் கதை, தத்துவங்கள் கையாளப்பட்டிருப்பது வாசகர்களின் வாசிப்பனுபவத்தை அதிகரிக்கும். மேனாள் நீதிபதி கே.என்.பாஷா, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, பேராசிரியர் ஜவாஹிருல்லா, பத்ஹுர்ரப்பானி, எம்.அப்துல் ரஹ்மான், டாக்டர் ஜெ.சதக்கத்துல்லாஹ், பாத்திமா முசாபர், அகமது மீரான், முனைவர் சே.சாதிக், நவாஸ் கனி, சிங்கப்பூர் முஸ்தபா உள்ளிட்ட ஆளுமைகளின் கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567873899,"sku":"BK1599","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/vetriyin-ragasiyangal-615.jpg?v=1788082473"},{"product_id":"paarambariyam-kaakkum-thiruthalangal","title":"பாரம்பரியம் காக்கும் திருத்தலங்கள்","description":"\u003cp\u003eகலை பொக்கிஷங்களை பேணிக் காப்போம்..! முன்னோரால் நிர்மாணிக்கப்பட்ட கோயில்கள், சமயம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பல நூற்றாண்டுகள் கடந்தும் எடுத்துக் காட்டும் கலைப் பொக்கிஷங்களாக உள்ளன. கோயில்கள் சார்ந்தே சமூக மேம்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டின் முகவரியாக உள்ள கோயில்களை, காப்பதும் போற்றுவதும் நமது தலையாயக் கடமையாகும். பல தலைமுறைகளுக்கு பாடம் சொல்லும் வண்ணம் கோயில்கள் அமைய வேண்டும் என்ற வகையில் அவை மன்னர்களாலும், சான்றோர் பெருமக்களாலும் நிர்மாணிக்கப்பட்டன. தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலமாக, நாம் பண்டைய தமிழகம், கோட்டைகள், தமிழகக் கோயில்கள், அவற்றின் வரலாற்றுச் சிறப்புகள், கோயிலுக்குள் இயங்கிய வைத்தியசாலைகள் குறித்து அறிகிறோம். இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி, இன்றும் வரலாற்று பொக்கிஷங்களாகத் திகழும் ஆவணங்கள், நமக்கு மன்னர்களின் மதிநுட்பம் குறித்தும் விளக்குகின்றன. கற்பாறைகளைக் குடைந்து கல்லுளிகளைப் பயன்படுத்தி, குடவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கல்லிலே கலைவண்ணம் கண்ட கைதேர்ந்த சிற்பிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கோயில்கள் கட்டிடக் கலைக்கு உதாரணமாகத் திகழ்கின்றன, குன்றின் மேலும் கோயில் அமைத்தனர்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567906667,"sku":"BK1600","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/paarambariyam-kaakkum-thiruthalangal.jpg?v=1788082475"},{"product_id":"agaththai-thedi","title":"அகத்தைத் தேடி","description":"\u003cp\u003eஅஷ்டாவக்கிரர், அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து சத்தியம் என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணிதான் அனைவருக்கும் இல்லை. திறந்துகிடக்கும் உண்மையைப் பார்ப்பதற்கான எதிர்கொள்வதற்கான திராணி இல்லாத இடத்தில் தான் உண்மைக்குத் திரைபோடப்பட்டு பூசைகளும் புனஷ்காரங்களும் தொடங்குகின்றன. அனுஷ்டானங்களும் மடத்தனங்களும் நியமங்களும் மனிதனைப் பிரித்து வகுக்கும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன. நன்மை, தீமை, கருத்தியல், விருப்பு வெறுப்புகள், ஆசைகள், அச்சங்களால் மனிதர்களும் சமூகங்களும் தேசங்களும் தங்களுக்குள் போரிட்டு மாயும் காலத்தில் மனிதர்கள் நேசிக்க மறந்துவிட்ட சூழலில் தஞ்சாவூர்க்கவிராயர், நம்மையும் உள்ளடக்கிய இந்த உலகத்தை, சக உயிர்களை, இயற்கையை, மனிதர்களை, புலப்படுவதை புலப்படாத தை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் தந்திருக்கும் சாவி ‘அகத்தைத் தேடி’.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784567972203,"sku":"BK1601","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/agaththai-thedi.jpg?v=1788082477"},{"product_id":"sivanarul-petra-adiyaargal","title":"சிவனருள் பெற்ற அடியார்கள்","description":"\u003cp\u003eசிவனருளால் உயிர்கள், பல பிறவி எடுத்து பக்குவம் அடைந்து, மெய்ஞானத்தை உணர்ந்து வீடுபேற்றை அடைகின்றன. இறைவன் மீது மாறாத அன்பு செலுத்தி, பக்தியுடன் அவனை வணங்கி, முக்தி பெற வேண்டும். அவ்வாறு இறைவனை வழிபட்டு, அவனது திருவருள் பெற்ற சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறு, நமக்கு வழிகாட்டியாக உள்ளது. திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றை, சேக்கிழார் பெருமான் ‘திருத்தொண்டர் புராணம்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்துள்ளார். திருத்தொண்டத் தொகை என்ற நூலை எழுதிய சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானின் தோழராகவே அறியப்படுகிறார். ஒருசமயம் திருவாரூர் கோயிலில் சிவபெருமானுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உரையாடிக் கொண்டிருந்தபோது, தேவாசிரியன் மண்டபத்தில் சிவனடியார்கள் பலர் வருகை புரிந்தனர். அவர்கள் குறித்து சுந்தரர், ஈசனிடம் வினவ, சிவபெருமானும் அவர்களது பெருமைகளை எடுத்துரைக்கிறார். திருத்தொண்டர்கள் குறித்து பாடுமாறு சுந்தரரைப் பணித்த சிவபெருமான், அவருக்கு ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று அடியெடுத்துக் கொடுக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகை நூல், பதினோரு பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதில் 58 ஆண் அடியார்கள், காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசி ஆகிய 2 பெண் அடியார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை மூலமாகக் கொண்டு, பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள், செவிவழி செய்திகள் ஆகியவற்றை இணைத்து, சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் பெரிய புராணத்தை இயற்றினார். சுந்தரமூர்த்தி நாயனார், அவரது தந்தை சடையனார், தாய் இசைஞானியார் ஆகியோரையும் சேர்த்து 63 சிவனடியார்கள் (நாயன்மார்கள்) குறித்து சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் கூறியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784568004971,"sku":"BK1602","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sivanarul-petra-adiyaargal.jpg?v=1788082478"},{"product_id":"108-vainava-divya-desa-ula","title":"108 வைணவ திவ்ய தேச உலா","description":"\u003cp\u003eசாகசத்துக்காக, ஆன்மிகத் தேடலுக்காக, வரலாற்று உண்மைகளை கண்டறிவதற்காக என நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்ட உலக உயிர்கள் அனைத்தையும் ஆட்கொள்ளும் பொருட்டு, அளவில்லா அன்பால், அகிலத்தை படைத்த இறைவன், அர்ச்சாவதார ரூபத்தில் பல அவதாரங்கள் எடுத்து, பல அற்புதங்களை நிகழச் செய்துள்ளார். பின்னர் பலரும் போற்றிப் பணிந்து வழிபடும் வண்ணம் வேண்டுவன வழங்கும் வல்லமை பெற்று கருணாமூர்த்தியாக, இறைவன் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களே திருக்கோயில்கள். கோயில் என்பது தலைவனின் வீடு. இறைவனின் இருப்பிடம் என்பதாகும். பதியாகிய இறைவனை வழிபட்டு, பசுவாகிய உயிர் தூய்மை அடைந்து, முக்தியைப் பெறுவதற்கு, மூலாதாரமாக பூவுலகில் மாயையைப் போக்கும் இடம் - கோயில். இதுவே ஆணவம் அடங்குவதற்கான இடமாகவும் உள்ளது. துயர்களைத் துடைத்து, துன்பங்களை தீர்த்து பக்தர்களை பரிவுடன், தீமையில் இருந்து தடுத்து, ஆட்கொள்ளும் தலைமை வாய்ந்த தூயவன் உறையும் இடமாக கோயில் திகழ்கிறது. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்றே’ என்றும், ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றும் வழங்கப்படும் மொழிகள், கோயில்களுக்குச் சென்று சேவிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. மனத்தூய்மை வளர்த்து, நிம்மதியை நல்கி, மனிதனை தூயவனாக்கி, தூயவனை அடைய இக்கோயில்கள் துணை புரிகின்றன.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784568037739,"sku":"BK1603","price":256.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/108-vainava-divya-desa-ula.jpg?v=1788082481"},{"product_id":"samayam-valarththa-saandror","title":"சமயம் வளர்த்த சான்றோர்","description":"\u003cp\u003eமகான்களின் வழியைப் பின்பற்றி, தூய மனதுடன், நாம் இறைவனை சிக்கெனப் பிடித்து, அவனை நோக்கி பயணிக்க வேண்டும். மகான்களின் வழியில் நடந்து, அவர்களது பெருமைகளை உணர்ந்து கொண்டால், அவர்களின் நடத்தை போன்றே நமது நடத்தையும் அமைந்துவிடும். மனிதரின் வாழ்க்கைப் பயணத்துக்கு உரிய விதிகளாக மகான்களின் வாக்கும் வாழ்வும் விளங்குகின்றன. அவர்களிடம் இருந்து கிடைக்கக் கூடிய படிப்பினைகள், நமது வாழ்வை சிறப்பாக்கும். சூரியன் பகலில் இருளைப் போக்குகிறார். தீபம் இரவில் இருளைப் போக்குகிறது. அதுபோல மகான்கள் இரவிலும் பகலிலும் நம் அஞ்ஞான இருளைப் போக்குகின்றனர். சூரியன் உப்புக் கடலில் இருந்து உப்பு நீரை எடுத்து, மேகத்தில் வைத்து, நன்னீராக மாற்றி மழையை பெய்விக்கிறார். மகான்கள், கடல் போன்ற நம் சம்பிரதாயங்களில் இருந்து, நமக்குப் புரியாத விஷயங்களை எடுத்துக் கூறி நம்மை தெளிவடையச் செய்கின்றனர். மேகங்கள் மழை பொழிந்து, பள்ளங்களை நிரப்புகின்றன. மகான்கள் குணத்தில் தாழ்ந்தோரை ஞானத்தால் நிரப்புகிறார். மகான்களை வணங்கி, அவர்களின் பொன்மொழிகளைக் கேட்க முயற்சித்தால், நாம் மெய்ஞானம் பெறுவது உறுதி. அருணோதயத்துக்குப் பிறகு சூர்யோதயம் ஏற்படுவதுபோல் மெய்ஞானம் கிடைக்கப் பெற்றதும், அவை சத்வ குணங்களாகவும், பக்தியாகவும், வைராக்கியமாகவும் மலர்ந்து நமக்கு மோட்சத்தை அளிக்கும். ஒரு மகான்\/ஆச்சாரியர்\/குருநாதரை அண்டி வாழ்பவரின் வாழ்க்கை தூய்மை உடையதாக இருக்கும். அவர் திருவடிகளின் கீழ் மெய்ஞானம் பெற்றால், இறைவன் நம்மை ஏற்கிறார். குருநாதரை அண்டாத நம் வாழ்க்கை, இறைவனை மதியாத வாழ்க்கையாகி விடுகிறது. குகனோடு ஐவரானோம் என்று ராமபிரான் கூறினாலும், குகன் தந்த பழங்களை அவர் ஏற்கவில்லை. ஆனால் சபரி தந்த பழங்களை ஏற்றார். காரணம், சபரி ஓர் ஆச்சாரியரை சரணடைந்து தூய வாழ்க்கை வாழ்ந்தவள். ஆனால் குகன் அவ்வாறு ஏற்றம் பெறவில்லை. திருக்கச்சி நம்பிகள், காஞ்சி தேவப்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார். தனக்குள்ள சந்தேகங்களை தேவப்பெருமானிடம், திருக்கச்சி நம்பிகள், கேட்கும்போது, ‘தனக்கு மோட்சம் உண்டா?’ என்று வினவுகிறார். அப்போது பெருமாள், ‘ஆச்சாரியரை சரண் அடைந்தவருக்கே மோட்சம்’ என்று பதிலளிக்கிறார். உடனே திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீரங்கம் எழுந்தருளி, அங்கு ஆச்சாரியர்களை சரணடைந்தார்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":53784568070507,"sku":"BK1604","price":205.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/samayam-valarththa-saandror.jpg?v=1788082483"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/Hindhu_thamiz_thisai.jpg?v=1771475752","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/hindu-tamil-thisai.oembed?page=2","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}