{"title":"எதிர் வெளியீடு","description":null,"products":[{"product_id":"deivangalum-samooga-marabugalum","title":"தெய்வங்களும் சமூக மரபுகளும் (எதிர் வெளியீடு)","description":"\u003cp\u003eதெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த சமூகத்தின் தேவைகளையொட்டி அமைந்தவைதாம். கால்நடை வளர்ப்பபோரின் தெய்வம் மாடுகள், கன்றுகள் சூழ்ந்தபடி கையில் புல்லாங்குழலுடன்தான் இருக்க முடியும். உழவர்களின் தெய்வம் மழை தருகின்ற இந்திரனாகவோ, கையிலே கலப்பை ஏந்திய பலராமனாகவோதான் இருக்கமுடியும், சுருக்கமாகச் சொன்னால் ஒரு குறிப்பிட்ட இனக்குழு என்ன வகை உற்பத்தி முறையினைச் சார்ந்திருக்கிறதோ அதைப் பொறுத்து அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும் அமையும். தம்முடைய கிராமப்புறத் தேவதைகள் எல்லாம் கையிலே காவலுக்குரிய ஆயுதங்களையே ஏந்தியிருக்கின்றனவே, ஏன்? பயிரைக் காத்தல், கண்மாயிலிருந்து பாய்கின்ற நீரைக் காத்தல், விளைந்த பயிரைப் பகைவரிடமிருந்து காத்தல், அறுவடை செய்த தானியங்களைக் காத்தல், உழவுக்கு வேண்டிய கால்நடைகளைப் பகைவரிடமிருந்து காத்தல், ஊர் எல்லையில் நின்று எதிரிகளிடமிருந்து ஊரைக் காத்தல் - இந்தக் காப்பு நடவடிக்கைகள் தாம் நேற்றுவரை கிராமப் பொருளாதாரத்தின் அடிப்படை. எனவே இந்த மக்களின் தெய்வங்களெல்லாம் இந்த மக்ளைப் போலவே ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்தி, காவலுக்குரிய வயல்களின் ஓரத்திலும் கண்மாய்க் கரையிலும், ஊர் மந்ததையிலும் ஊர் எல்லையிலும் அயராது கண் விழித்து நிற்கின்றன.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53782064595307,"sku":"BK6188","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/deivangalum-samooga-marabugalum-10024226.jpg?v=1789617311"},{"product_id":"pen-yen-adimaiyanal","title":"பெண் ஏன் அடிமையானாள்?","description":"\u003cp\u003eஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53782075900267,"sku":"BK6467","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pen-yen-adimaiyanal-10015717.jpg?v=1789617523"},{"product_id":"urumatram","title":"உருமாற்றம்","description":"\u003cp\u003eஉருமாற்றம் ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53782077243755,"sku":"BK6605","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/urumatram-10000014.jpg?v=1789617624"},{"product_id":"aariya-maayai","title":"ஆரிய மாயை","description":"\u003cp\u003e\"ஆரிய மாயை ” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்கமாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784465473899,"sku":"BK6101","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aariya-maayai-10021542.jpg?v=1789617241"},{"product_id":"pothu-civil-sattam","title":"பொது சிவில் சட்டம்: ஒரு விளக்கக் கையேடு (UNIFORM CIVIL CODE)","description":"","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784572330347,"sku":"BK6488","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pothu-civil-sattam-10024222.jpg?v=1789617538"},{"product_id":"uyir","title":"உயிர்","description":"\u003cp\u003eஉயிர் அந்த ஊர் இதற்கு முன்னால் இப்படி இருந்ததே இல்லை என்று கூறிவிட முடியாது என்றாலும் இதற்கான வேர்கள் அதன் மண்ணுக்குள்ளே புதைந்திருந்தன என்பதை யாரேனும் மறுக்க முடியுமா? இப்போது அவை ஆங்காங்கே பூதங்கள் போல் விஸ்வரூபம் எடுத்திருப்பதைத் தான் மறுக்க முடியுமா? எப்படிப் புரிந்து கொள்வது இதையெல்லாம்? நுழைய முடியாத அடர்ந்த முள் காடு போலவும், இருண்ட தேசம் போலவும், இதில் தனித்தீவுகளாக யாருமே இல்லை என்பது போலவும் மிரட்சியை உண்டு பண்ணுகிறது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784684331371,"sku":"BK6607","price":240.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/uyir-10002699.jpg?v=1789617626"},{"product_id":"iravu","title":"இரவு...","description":"\u003cp\u003e1928ம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த வீஸல் சிறுவனாக இருந்தபோதே ஆஸ்விட்ச் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புச்சன் வால்ட் முகாமுக்கும் அனுப்பப்பட்டார். பெற்றோர்களும் தங்கையும் முகாமிலேயே மாண்டனர்.முகாம் அனுபவங்கள் அடிப்படையிலான அவரது முதல் சுயசரிதை ‘இரவு’. இந்நூலின் பக்கங்களில் வரலாற்றின் ரத்தக்கறை படிந்திருக்கிறது. இந்த அனுபவங்கள் மனிதகுலத்தின் மனசாட்சியில் வடுவாக நிலைத்திருக்கிறது. 1986இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார் வீஸல்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53790512644459,"sku":"BK6248","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/iravu-10016990.jpg?v=1789617354"},{"product_id":"ayyankali","title":"அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்","description":"\u003cp\u003eஅந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை, தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித் அமைப்பான ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ அவருடைய மக்களின் சுதந்திரத்திற்கான பாதையை திறந்துவிட்டது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53796040442219,"sku":"BK6155","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ayyangaali-1.jpg?v=1789617284"},{"product_id":"stephen-hawking","title":"ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும்","description":"\u003cp\u003eவாழ்வும் பணியும் - தமிழில்: பேரா ச.வின்சென்ட் : ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களால் தான் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹாக்கிங் அப்போதும், இப்போதும் கூட செயலற்றவர் இல்லை; என்றும் செயல்படுகின்ற கணிதவியல் நிபுணர், இயற்பியல் அறிஞர். அப்போதே கூட அவரை ஐன்ஸ்டைனுக்கு அடுத்த ஆற்றல்மிக்க அறிவியலாளர் என்று அழைத்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லூக்காசியன் பேராசிரியர் பதவி மிக மதிப்பு வாய்ந்தது. 1663ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இப்பதவியில் இரண்டாவது பேராசிரியராக சர் ஐசக் நியூட்டன் இருந்திருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463727467,"sku":"BK6548","price":440.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/stephen-hawkings-vaazhvum-1.jpg?v=1789617582"},{"product_id":"kaanagaththin-kural","title":"கானகத்தின் குரல்","description":"\u003cp\u003eஜாக் லண்டன் கதை சொல்லுவதிலே இணையற்றவர். அவர் எழுதிய கதைகளில் பக்கின் கதையே மிகச்சிறந்தது. இதை ஆங்கிலத்திலே லட்சக்கணக்கான மக்கள் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் இதை மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழ் மக்களும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதைப் படித்தவர்கள் ஜாக் லண்டனுடைய மற்ற கதைகளையும் படிக்க ஆர்வங் கொள்ளுவார்கள் என்பதில் ஐயமில்லை.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53813443330411,"sku":"BK6265","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kaanagaththin-kural-10024236.jpg?v=1789617368"},{"product_id":"paisaasaththin-enjiya-sorkal","title":"பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்","description":"","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53813458370923,"sku":"BK6442","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/paisaasaththin-enjiya-sorkal-10019545.jpg?v=1789617506"},{"product_id":"kaalam","title":"காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்","description":"\u003cp\u003eகல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. கடினமான அறிவியல் கோட்பாடுகளை எளிமையான சொற்றொடர்கள் மூலம் கருத்து மாறாமல் சொல்லுவது என்பது மூளையைப் பின்னிப் பிணைந்து எடுக்கும் வேலை. திரு நலங்கிள்ளி இதனை மிகவும் திறம்படச் செய்துள்ளார். கடுமையான உழைப்பும், தளராத முயற்சிகளும் இதன் பின்னணியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிக கவனமாகவும் ‘அறிவியல் தமிழ்’ என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார். தமிழில் இது ஒரு புதிய முயற்சி.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53823516082539,"sku":"BK6262","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kaalam-1.jpg?v=1789617365"},{"product_id":"vennira-iravukal","title":"வெண்ணிற இரவுகள்","description":"\u003cp\u003eவெண்ணிற இரவுகள் பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்ததில்லை. என் கை நடுங்குகிறது என்றால்,ஒருபோதும் இதுபோன்ற அழகானதொரு கையால் பற்றப்பட்டதில்லை.பெண்களைப் பொருத்தவரை நான் ஓர் அந்நியன்.அதாவது நான் தனியேதான் வாழ்கிறேன்.அவர்களோடு எவ்வாறு பேச வேண்டும் என்று தெரியாது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53823535841643,"sku":"BK6621","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/vennira-iravukal-10000035.jpg?v=1789617638"},{"product_id":"ambedkar-vazhkai-varalaru","title":"டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு","description":"\u003cp\u003eடாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால் அவரது வாழ்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலுன் முக்கிய நோக்கமாகும். அம்பேத்கர் அவர்களின் வாழ்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலை எவ்வாறு ஏற்படும் என்பதைக் குறிப்பதும் இந்நூலின் ஓர் அம்சமாகும்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53831448199531,"sku":"BK6122","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ambedkar-vazhkai-varalaru-10016092.jpg?v=1789617260"},{"product_id":"antha-nadhikkaraiyil-yen-idhayaththaip-puthaiyungal","title":"அந்த நதிக்கரையில் என் இதயத்தைப் புதையுங்கள்","description":"\u003cp\u003eபூர்வ குடிகள் குறித்த அமெரிக்க மக்களின் எண்ணத்தை மாற்றியமைத்த உன்னத படைப்பு இந்த நூல். அமெரிக்காவில் நிகழ்ந்த வெள்ளையர்களின் குடியேற்றமும், அவர்களது நிலப்பசியும், தங்க வேட்டையும், நூற்றாண்டுகளாகப் பூர்வ குடிகள் வாழ்ந்திருந்த பிரதேசங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்தன. அழித்தொழித்தன. வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, அவர்கள் ரிசர்வேஷன்களில் அடைக்கப்பட்டனர். இயற்கையோடு இசைந்த அவர்களது வாழ்வு பறிக்கப்பட்டது. அந்த வரலாறே, இந்த நூல்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862392627563,"sku":"BK5917","price":639.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10027979_a679297a-2a36-45f4-9bf4-617a44c50a13.png?v=1789617222"},{"product_id":"kasaargalin-akaraathi-aang-pirathi","title":"கசார்களின் அகராதி: ஆண் பிரதி","description":"\u003cp\u003eசர்வதேச அளவில் மிகச்சிறந்த விற்பனையைக் கொண்ட புத்தகம், கசார்களின் அகராதி நியூயார்க் டைம்ஸ்சில் 1988ஆம் வருடத்தின் சிறந்த புத்தகங்களுள் ஒன்றெனக் குறிப்பிடப்பட்டது. ஆண் மற்றும் பெண் என இரண்டு பிரதிகளை உடையது, அவை ஒன்றையொன்று ஒத்தவை என்றாலும் பத்தொன்பது முக்கியமான வரிகளில் வேறுபட்டவை. அகராதி என்பது கசார்களின் கற்பனையான அறிவுப் புத்தகம். இவர்கள் ஏழு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையே ட்ரான்சில்வேனியாவைத் தாண்டியதொரு நிலப்பரப்பில் தழைத்திருந்த இனம். மரபார்ந்த கூறுமுறை மற்றும் கதையமைப்பைத் தவிர்த்துவிட்ட அகராதி வடிவிலான இப்புதினம் உலகின் முப்பெரும் மதங்களது அகராதிகள் ஒன்றிணைந்து உருவானது. இதன் பதிவுகள் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையே தவ்விச் செல்பவை. கட்டுப்பாடற்ற மூன்று மதிநுட்பமுடையவர்கள், நச்சு மையினால் அச்சிடப்பட்ட புத்தகம், முகம் பார்க்கும் கண்ணாடிகளால் நிகழும் தற்கொலை, பெரும்புனைவாய் ஓர் இளவரசி, ஒருவரின் கனவுக்குள் உட்புகுந்து செல்லக்கூடிய குறிப்பிட்டதொரு இனத்தின் பூசாரிகள், இறந்துவிட்டவர்களுக்கும் இருப்பவர்களுக்குமிடையே உருவாகும் காதல் என இன்னும் பலவற்றை உள்ளடக்கியது இப்புதினம்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862392889707,"sku":"BK5840","price":480.0,"currency_code":"INR","in_stock":false}]},{"product_id":"neela-gundu-bulb","title":"நீல குண்டு பல்பு","description":"\u003cp\u003eதிட்டவட்டமான கருத்திலிருந்து திரவமாய் வழியும் காட்சிகளை நோக்கி, ஆளுமைகளில் குணங்களில் ஆட்படுவதிலிருந்து விடுபட்டு வெறும் பெயர்களை நோக்கி, நாரோ இழையோ இல் லாமல் விடுபூக்களையே, அருபமாலையாக்கிப் பார்க்கும் சொற்சித்திரங்களை நோக்கி, உக்கிரமும் சன்னதமும் கூடி, தன்போக்கிலேயே என்னைச் சுழித்து அழைத்துச்சென்ற திட்டம் குறைந்த கவிதைகள் இவை. சிறிய அச்சானிய உணர்ச்சியையும் ஏற்படுத்தலாம். ஆழ்மனத்தில் புதைந்திருந்த சிறுவயது நினைவுகளும் கோலங்களும் இப்போது இந்த வயதில் துல்லியமாகத் தம்மைத் திறந்துகொண்டு எனக்குப் பரிமாறின. எனக்கு விருப்பமான பெண்களைப் பூனைகளாக ஆக்கி, அவர்களால்கூட அடையாளம் காணவியலாத அளவுக்கு அரூபமாக்கி, இத்தொகுப்பில் அலையவிட்டிருக்கிறேன்.அழகியதொரு பழி.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862393184619,"sku":"BK5682","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10028903.jpg?v=1789617223"},{"product_id":"arinarkal-aasiriyargal-aalumaigal","title":"அறிஞர்கள் ஆசிரியர்கள் ஆளுமைகள்","description":"\u003cp\u003eசுந்தர ராமசாமி வீட்டின் மேல்மாடியில் ஆவணமாகச் சேகரிக்கப்பட்டிருந்த இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் பழைய இதழ்களை நானும் நண்பன் தளவாய் சுந்தரமும் சேர்ந்து பார்த்திருக்கிறோம். அவையெல்லாம் லட்சியத் தமிழ் இதழ் ஒன்றை நடத்தும் ஆசையைத் தொடர்ந்து எங்களுக்குள் வளர்த்திருக்கின்றன. அப்படி ஒரு மாற்றிதழ்ப் பண்பாட்டைக் கனவாகக் கண்ட பலரின் பொது விருப்பம், தமிழில் தீராந்தி, விகடன் தடம், இந்து தமிழ் திசை பத்திரிகைகளின் வாயிலாக யதார்த்தமாகவும் ஆனது. அந்த இயக்கத்தில் நானும் பங்குபெற்றதன் சுவடுகள்தாம் இந்த நேர்காணல்கள்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862393413995,"sku":"BK5550","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10028905.jpg?v=1789617224"},{"product_id":"moondru-kaalangalukkup-purappattuch-sendra-moondru-railkal","title":"மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று இரயில்கள்","description":"\u003cp\u003eஇதிலிருக்கும் குறுங்கதைகளும் நுண்கதைகளும் வாசகனின் கற்பனையைத் துணைக்கு அழைத்துக்கொள்கிற சில அடிப்படை விதிகளை வைத்திருக்கின்றன. வெவ்வேறு மொழிதல் முறைகளை, இக்கதைகளில் முயன்றிருக்கிறார் தூயன்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862393610603,"sku":"BK5306","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10028906.jpg?v=1789617225"},{"product_id":"thayavuseithu-suttuk-konruvidu","title":"தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு","description":"\u003cp\u003eமாபெரும் சிறை மாபெரும் மயானம் மாபெரும் மருத்துவமனை மூன்றும் ஒருங்கே அமைந்த நிலத்தின் கதைகள் தேச ஆக்கிரமிப்பு, மனை - வீடு - வேளாண்மை நிலம் - கால்நடைகள் - மரங்கள் அபகரிப்பு, புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்தல், இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதல், மரணம், போதிய மருத்துவ வசதி கிடைக்காத துயரம், பட்டினி இவ்வளவையும் உலகுக்குத் தெரியப்படுத்த, ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக்கொண்ட காஸா இளம் பெண்களின் படைப்புகள்தான் இவை. ஆனால் அவர்கள் எழுதுவதற்கு இதுவல்ல பிரதானக் காரணம்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862393643371,"sku":"BK4808","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10029044.jpg?v=1789617226"},{"product_id":"pazhangudigalin-olivilakku","title":"பழங்குடிகளின் ஒளிவிளக்கு","description":"\u003cp\u003eசில ஆயிரம் பழங்குடி மக்களின் வாழ்க்கைச் சூழலில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர இந்த 11 தோழர்களும் தன்னலமற்ற சேவையைச் செய்திருக்கிறார்கள். இந்த விளிம்புநிலை மனிதர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் இவர்களும் இல்லாமல் போயிருந்தால் இந்தப் பழங்குடி மக்களின் கடினமான வாழ்க்கை நிலைமையை நினைத்துப் பார்க்கவே நம் மனம் நடுங்குகிறது. பழங்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக உழைத்து வரும் இந்த 11 போராளிகளின் அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் இந்தப் புத்தகம், ஒரு லட்சிய வாழ்க்கை மேற்கொள்வதற்கு இளைய தலைமுறைக்குத் தூண்டுதலாக அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862393905515,"sku":"BK4414","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10029045.jpg?v=1789617226"},{"product_id":"vaarana-mouni","title":"வாரண மௌனி","description":"\u003cp\u003eநினைவிலிருந்து கரையாத கதாபாத்திரங்களும் வியப்பூட்டும் காட்டுயிர்களும் நிறைந்த The Elephant Whisperer நூல் நமக்கு அறிமுகப்படுத்தும் களம்,சாகசங்களையும் காடுகளையும் வன உயிர்களையும் விரும்பும் உலக மக்கள் யாவரையும் கவரக்கூடியதாகும். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாவலராய் இயங்கி வந்த லாரன்ஸ் ஆண்டனியை, சூலூலேண்டில் உள்ள அவரது துலா துலாவில் (பாதுகாக்கப்பட்ட தனியார் காட்டுப் பகுதி) ஒரு முரட்டு யானைக் கூட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்டபோது, அதை நிராகரிக்க வேண்டும் என்று அவரின் பொது புத்தி சொன்னாலும் அந்த யானைக் கூட்டத்தின் உயிர் மீட்க அவற்றின் கடைசி வாய்ப்பாக தான் இருப்பதை அவர் உணர்ந்தார். அவை கணிக்க முடியாதவையாகவும் ஆபத்தானவையாகவும் இருந்தன. ஆண்டனி அவற்றை நிராகரித்து விட்டால் அவை நிச்சயம் கொல்லப்படும் என்ற நிலையில் ஆண்டனி தன் உயிரைப் பணயம் வைத்து அந்தக் காயப்பட்ட மூர்க்கமான யானைக்கூட்டத்தின் மீள் வாழ்வை துலா துலாவில் தொடர செய்ததோடு அவற்றுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட உறவு, கூட்டத்தை வழிநடத்திய ஞானம் பொதிந்த தாய் யானை ‘நானா’ முதல், வாழ்விற்கான தீராத தாகத்தில் உயிர் பிழைக்க தொடர் போராட்டங்களின் அங்கமான குட்டி யானைகளும், எப்போதும் கூட்டத்தின் தலைமைக் காவலாளியாக சீறி நிற்கும் போராளி சகோதரியான ‘ஃபிரான்கி’ வரை, இந்த யானைக்கூட்டம் எவ்வளவு மகத்தான குடும்பம் என்பதை அவருக்கு உணரச் செய்தது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862394167659,"sku":"BK3971","price":479.2,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"tholaithoora-vadakkin-odukiya-paathai","title":"தொலைதூர வடக்கின் ஒடுகிய பாதை","description":"\u003cp\u003e”கோர்மக் மெக்கார்த்தியின் ‘The Road' புதினத்துக்குப் பிறகு இதுபோல் என்னைப் பாதித்த ஒன்று எதுவுமில்லை” - The Washington Post புகழ்பெற்ற ‘Gould’s Book of Fish' புதினத்தை எழுதிய ஆசிரியரிடமிருந்து, இரண்டாம் உலகப்போர் முதல் இன்றுவரை ஒருவனின் வாழ்நாள் முழுக்கத் தொடரும் காதலையும் போரையும் விவரிக்கும் ஒரு மகத்தான புதினம்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862394364267,"sku":"BK6083","price":520.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"soviet-pal","title":"சோவியத் பால்","description":"\u003cp\u003e‘சோவியத் பால்’ இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி பெர்லின் சுவர் இடிக்கப்படும்போது முடியும் நாவல். பால்டிக் நாடுகளில் ஒன்றான லாட்வியா சோவியத் யூனியனின்கீழ் இருந்த வருடங்களில் அந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட அக, புற நெருக்கடிகளை இரண்டு பிரதான கதாபாத்திரங்களின் வழியே விவரிக்கிறது இந்த நாவல். தாயும், மகளுமாய் இரண்டு கதாபாத்திரங்கள் தங்களது பார்வைகளினூடாக மாறி மாறி நாவலை முன்னெடுத்துச் செல்லும் வண்ணம் கதையோட்டத்தை அமைத்திருக்கும் நாவலின் ஆசிரியர் நோரா இக்ஸ்டெனா தீவிரமானதொரு அரசியல் பின்னலை நாவல் முழுக்கப் படரவிட்டிருக்கிறார். குறைந்த பக்கங்களில் தீவிரமானதொரு கதையை அதன் முழுமை குன்றாமல் நோரா இக்ஸ்டெனாவால் சொல்ல முடிந்திருக்கிறது. கவித்துவமான மொழியும், விவரணச் சிக்கனமும் அமைந்த இந்த நாவல் தீவிர அரசியலைப் பேசும் அதேவேளை தாய்-மகள் உறவின் நுட்பமான புள்ளிகளையும் தொட்டுச் செல்கிறது. எந்த வடிவிலிருந்தாலும் அடிமைத்தனத்தை மறுக்கும் சுதந்திரத் தேட்டம் மானுட வாழ்வின் ஆதார விழுமியங்களில் ஒன்று என்பதைச் சொல்லியிருக்கும் இலக்கியங்களது வரிசையில் ஒளியுடன் நிற்கத் தகுந்த படைப்பு ‘சோவியத் பால்’.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862394560875,"sku":"BK6084","price":200.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"silapathikaraththin-aaychchiyar-kuravai-aayvu","title":"சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ஆய்வு","description":"\u003cp\u003eசிலப்பதிகார மதுரை காண்டத்தின் அரங்கேற்றுக்காதையில் நிகழும் ஆய்ச்சியர் குரவை, மேய்ச்சல் நில மக்களின் குரவைக் கூத்து, குரவைக் கூத்து என்பது நாட்டிய நாடகத்தைக் (Operர் குறிக்கும். இது. ஒரு செவ்வியல் கூத்து. இக்குரவையில் சுரங்களை எப்படிப் பிடித்துப் பாடி ஆடினர் என்பதை இளங்கோவடிகள் 15 அடிகளில் விவரிக்கிறார். இந்தக் கூத்தைப் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் செய்தவர், நம் தமிழிசைத் தந்தை ஆபிரகாம் பண்டிதர், அவர் தன் 'கருணாமிர்தசாகரம்'.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862394757483,"sku":"BK6085","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10029211.jpg?v=1789617228"},{"product_id":"vangkaari-maaththaai","title":"வங்காரி மாத்தாய்","description":"\u003cp\u003eவான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப் பகுதி இயக்கத்தின் நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. The Green Belt Movement (1985) Bottom Is Heavy Too(1994) The Challenge For Africa (2009) முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய தன் வரலாறான UNBOWED: A Memoir 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. புற்று நோயால் அவதியுற்ற அவர்2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மரணமடைந்தார்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862394986859,"sku":"BK6086","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10029227.jpg?v=1789617229"},{"product_id":"beech","title":"பீச்","description":"\u003cp\u003eநவதாரளவாதத்திற்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. பணத்தைத் தவிர அதன் மனதில் எதுவும் இல்லை. மனிதர்கள் வெறுமனே சரக்குகளாகியிருந்தார்கள். யாரேனும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். யாரோ முடித்து வைக்கிறார்கள்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862395117931,"sku":"BK6087","price":319.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10028904.jpg?v=1789617229"},{"product_id":"venus","title":"வீனஸ்","description":"\u003cp\u003eகண்மணி காட்டும் பின்நவீன உலகம் 'இளமை' என்னும் கருத்தாக்கத்தின் பொருளை விரிவுபடுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862395249003,"sku":"BK6088","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10028902.jpg?v=1789617230"},{"product_id":"chinnasik-kizhavanin-sengarif-pasu","title":"சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு","description":"\u003cp\u003eஈழத்தின் வன்னி எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்க ஆளுமையாக விளங்குபவர் தாமரைச்செல்வி. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக அவர் தந்த படைப்புக்கள் ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் நின்று நிலைக்கக் கூடியன. குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மூலம் தன் பெயரை நிலை நாட்டிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் காலத்தைப் பிரதிபலிக்கும் அற்புத சாட்சிகளாய் அமைந்தவை. இவர் தன் வாழ்க்கையோடு இணைந்த மனிதர்களை, அவர்கள் சுமந்த பாடுகளை எழுத்திலமைந்த ஆவணமாக மாற்றியிருக்கிறார். அதனால்தான் இவர் கூட்டிச் செல்லும் வெளிகளில் சலிப்பின்றி எம்மால் அவர் கூடப் பயணிக்க முடிகிறது. பயணத்தின் முடிவில் துளிக் கண்ணீர் சிந்தும் விழிகளோடு அவரிடமிருந்து விடை பெற முடிகிறது.இன்னுமொரு சந்திப்பிலும் நம்மிடமிருந்து கண்ணீரை உதிர வைக்கக் கூடிய கதைகளுக்கான அனுபவங்கள் அவரிடம் உண்டு. சந்திப்போம். கண்ணீர் உகுப்போம். அக்கண்ணீர்தானே அவரது எழுத்துக்களின் வெற்றிக்கான அத்தாட்சி.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862395281771,"sku":"BK6089","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chinnasik-kizhavanin-sengarif-pasu-10025632.jpg?v=1789617231"},{"product_id":"13-varudangal-oru-naksalaittin-sirai-kuripugal","title":"13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்","description":"\u003cp\u003eதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன. - வரவர ராவ் இது மனதிலிருந்து சொல்லப்பட்ட புரட்சி, வாழ்க்கை மற்றும் காதல் பற்றிய நினைவுக்குறிப்பு. இதனுடைய எளிமையும் உண்மைத்தன்மையும் உணர்ச்சிகளை உருக்கக்கூடியது. - கே.ஆர்.மீரா இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று. - ஆனந்த் டெல்டும்டே\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862395412843,"sku":"BK6090","price":239.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/13-varudangal-oru-naksalaittin-sirai-kuripugal-10016134.png?v=1789617232"},{"product_id":"26-11-mumbai-thakuthal-tharum-padipinaikal","title":"26\/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்","description":"\u003cp\u003e26\/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1992 பாம்பே கலவரத்திருந்து, 1993 தொடர் குண்டு வெடிப்புகள், 2002 குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரத்த காடாக உள்ளது இந்தியா…\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862395609451,"sku":"BK6091","price":52.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/2611-mumbai-thakuthal-tharum-padipinaikal-10002686.png?v=1789617233"},{"product_id":"360","title":"360°","description":"\u003cp\u003e360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில்லை. ஆனால் அவற்றின் ஊடாக வெகுமக்கள் திரளின் கவனத்திற்கு வராத, பல நேரங்களில் தந்திரமாக மறைக்கப்பட்ட அல்லது அதன் உண்மைத்தன்மையல்லாது வேறாக தோற்றம் கொண்டிருந்த நிகழ்வுகள் குறித்து நுட்பமாக எழுதப்பட்டவை இக்கட்டுரைகள். எழுதப்பட்ட காலங்களில் மேலதிக கவனத்தையும் மதிப்பையும் பெற்று கொண்டாடப்பட்டவை. இப்புத்தகம் முக்கியமாக முன்வைக்கும் கருத்து தமிழக அரசியலினைப் பற்றி......\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862395838827,"sku":"BK6092","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/360-10004102.jpg?v=1789617233"},{"product_id":"57-snegadhigal-snegitha-pudhinam","title":"57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்","description":"\u003cp\u003eவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்தான்!\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862396068203,"sku":"BK6093","price":88.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/57-snehithigal-1.jpg?v=1789617235"},{"product_id":"darwinin-vaal","title":"டார்வினின் வால்","description":"\u003cp\u003eகண்முன் காணும் இருப்பினைத் தாண்டி பயணிக்க விழைவிருந்தால்.. இருப்பை இல்லாமலாக்குவதும், இன்மையை இருப்பாக மாற்றுவதும், மாய மற்றும் யதார்த்த உலகிற்குள் மாறி மாறி நமமை பயணிக்கச் செய்வதும், எது மாயம்? எது யதார்த்தம்? என்று புரியாமல் இரண்டின் எல்லையையும் கலைத்துப்போடும் சுழல் விளையாட்டும், வார்த்தைச்சுழலுக்குள் சுலபமாய் தொலைந்துபோய்விடும் சௌகர்யமும், இருப்பைக்குறித்த ஆய்வுக்குள் உருவாக்கப்படும் புதிர்களும், அவை அவிழ்ந்தும் அவிழாமலும் ஏற்படுத்தும் தவிப்பும் - இவ்வெழுத்தின் நிதர்சனம். ஒரு மாய உலகத்தை சிருஷ்டிக்க கற்பனைக்கு அப்பாற்பட்ட உலகத்திற்கு போகாமல் சாதாரண மக்களின் அன்றாடங்களையும், அவர்களின் உணர்வுகளுக்குள் விழும் முடிச்சுகளையும் அசாதாரண தருணங்களாக மாற்றி, இறுதியில் அவற்றைக் கலைத்தும்விடுகிறார் ஆசிரியர் வழுக்கி ஓடும் வார்த்தைகளைப் பிடித்து அதற்கு அர்த்தம் தேடாமல், அதன்மேல் ஏறி பயணிக்க வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. - சாந்தினிதேவி\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862396264811,"sku":"BK6094","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/56222-10019690.jpg?v=1789617234"},{"product_id":"aadu-jeevitham","title":"ஆடு ஜீவிதம்","description":"\u003cp\u003eநஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார். மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார். 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862396461419,"sku":"BK6095","price":240.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aadu-jeevitham-10016989.jpg?v=1789617235"},{"product_id":"aadippavaipola","title":"ஆடிப்பாவைபோல","description":"\u003cp\u003eஆடிப்பாவைபோல - தமிழவன் : ஆடிப்பாவைபோல என்ற நாவல் , அதன் பெயர்சுட்டுவதுபோல இரு வடிவங்கள் கொண்டது. முன்பு ஆசிரியனை மையமாக்கி நாவலை அணுகினார்கள். ஆசிரியனின் ‘மரணத்துக்கு’ப்பின் வாசகனின் நோக்கில் நாவலை அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே மூன்று வகையாக இந்த நாவலை வாசிக்கலாம். இளங்காதலர்கள் கதையில் ஊடாடினாலும் அவர்களுக்குத் தொடர்பில்லாமல், திராவிட அரசியலின் இந்தி எதிர்ப்புக்கால வரலாறு வருகிறது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862396625259,"sku":"BK6096","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aadippavaipola-10004105.jpg?v=1789617236"},{"product_id":"aagarkal-nam-nanpargal","title":"ஆகர்கள் நம் நண்பர்கள்","description":"\u003cp\u003eஆகர்கள் நம் நண்பர்கள் அவர்கள் மலைகளையும், கடல்களையும், ஆறுகளையும் வெறுக்கத்தகுந்த ஒன்றாக்கினார்கள் ஆனால் சந்தையை பொருட்களால் நிரப்பினார்கள் தங்களுடைய பைகளை பணத்தால் நிரப்பிக்கொண்டார்கள் மனிதர்களுக்கோ மகிழ்ச்சி தங்களுடைய முகங்கள் கறுத்துப்போனாலும், கால்கள் மண்ணடைந்தாலும். பெற்றோர்கள் மூச்சுத்திணறினாலும், குழந்தைகள் விம்மியழுதாலும் மனிதர்களுக்கு மகிழ்ச்சிதான்.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862396887403,"sku":"BK6097","price":12.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aagarkal-nam-nanpargal-10002704.jpg?v=1789617237"},{"product_id":"aakkaandi","title":"ஆக்காண்டி","description":"","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862397018475,"sku":"BK6098","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aakkaandi-10022597.jpg?v=1789617237"},{"product_id":"aanai-malai","title":"ஆனை மலை","description":"\u003cp\u003eவனத்திற்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டும் அல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் நிறைந்தது. இந்தக் கடுமையான போராட்டத்தை அனுதினமும் மேற்கொள்ளாமல் ஒரு பழங்குடி அவன் மண்ணில் வாழ முடியாது. பழங்குடியின் மண்ணிலிருந்து அவனை வெளியேற்ற ஒரு பெரும் அதிகாரம் கட்டமைக்கப்படுகின்றது. புலிகள் அதன் சரணாலயம் மற்றும் இயற்கை , சுற்றுச்சூழல் அதன் ஆர்வலர்கள் மற்றும் அது சார்ந்த நிதியம் என எல்லாமுமே அந்தப் பழங்குடிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கக்கூடியதாக மாறிய நிலையில், அந்த மக்கள் யாரிடத்தில் தங்கள் நியாயத்தை, நீதியைக் கோர முடியும்? ஆனால் வனம் அவர்களைக் காக்கும் தாயாக மாறி தன் குழந்தைகளின் நியாயத்தைப் பேசுவாள் எனப் பழங்குடிகள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை மட்டுமே அவர்களைத் தொடர்ந்து உள்ளேயும், வெளியேயும் வனத்தை இறுகப்பற்றிப் போராட வைக்கின்றது. ஆனைமலை என்பது வெறும் மரங்களும், விலங்குகளும் மட்டும் கொண்ட நிலமகள் அல்ல. அவளின் மக்கள் அவளிடமிருந்து பிரிக்க முடியாதவர்கள். அவளின் அறுபடாத தொப்புள் கொடி இன்னமும் அவர்களுடன் வளர்சிதை மாற்றத்தை உருவாக்கி வருகின்றது. இந்த உறவால் மட்டுமே வனம் உயிருடன் உள்ளது. இதனைத் தனது படைப்பில் தொடர்ந்து பிரசாந்த் வே இலக்கியமாகக் காட்சிப் படுத்துகின்றா ர். இந்தக் காட்சிப்படுத்தல் பழங்குடிகளுக்கானது மட்டுமல்ல, ஒருவகையில் பொதுச் சமூகம் வனத்தின் குரலை தங்கள் சுயநலத்தின் பொருட்டேனும் கேட்க வேண்டும் என்ற கரிசனத்துடன் எனக் கருதுகிறேன். - ச. பாலமுருகன்\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862397051243,"sku":"BK6099","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanai-malai-10026535_2067d2ce-a950-4947-9942-bff243dfd69b.jpg?v=1789617238"},{"product_id":"aanmiga-arasiyal-ethir-veliyeedu","title":"ஆன்மிக அரசியல்: சாதுக்கள், அகாராக்கள் மற்றும் இந்து வாக்கு வங்கி","description":"\u003cp\u003e“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது.” - அனில் ஸ்வரூப், அலகாபாத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி “ஒவ்வொரு கும்பமேளாவின் போதும் ஊடகக் கேமராக்களில் தோன்றும் பல்லாயிரக்கணக்கான ஆன்மிகத் துறவிகளைப் பற்றிய கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்நூல்.”\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862397247851,"sku":"BK6100","price":319.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanmiga-arasiyal-ethir-veliyeedu-10019558.jpg?v=1789617239"},{"product_id":"aariyakoothu","title":"ஆரியக்கூத்து","description":"\u003cp\u003eகால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்​றைய இந்துத்துவ எழுச்சி​யைப் பின்புலமாகக் ​கொண்டு வரலாற்​றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற ​பெயரில் ​​பொய் மூட்​​டைக​ளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சி​னை, திராவிட மற்றும் இந்​தோ – ஆரிய ​​​மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்த​னைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுக​ளை ​​தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் ​வெறும் விவாத ​நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்​மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் ​​தொகுப்பாகவும் இது அ​மைந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862397346155,"sku":"BK6104","price":80.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aariya-koothu-1.jpg?v=1789617247"},{"product_id":"aasiriyar-vanthuirukiraar","title":"ஆசிரியர் வந்திருந்தார்","description":"\u003cp\u003eஒரு திரைப்படம் ஒரு கருவாக, கதையாகப் பதிவு செய்யப்பட்ட தொகுக்கப்பட்ட படச்சுருளாக இருக்கிற தன் நிலையிலிருந்து எதையோ ஒன்றைக் கடந்ததாக மாறுகிறது. ஒருவர் அதைப் பார்க்கும் போது அது அவருடன் தொடர்பு கொள்கிறது. அதனுடைய ஆசிரியரிடமிருந்து விலகி தனது வடிவத்திலும் அர்த்தங்களிலும் மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே தன்னுடைய சொந்த வாழ்க்கையை வாழத் துவங்குகிறது. - தார்க்கோவ்ஸ்கி\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862397477227,"sku":"BK6105","price":208.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aasiriyar-vanthuirukiraar-10028571.png?v=1789617248"},{"product_id":"aatalum-paatalum","title":"ஆடலும் பாடலும்","description":"","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862397673835,"sku":"BK6106","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/10030117_cover.png?v=1789617248"},{"product_id":"aathi-thivasikal","title":"ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்","description":"\u003cp\u003eஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் - ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர்: விளிம்பிலிருந்து எழுதப்பட்ட இக்கதைகள், மிகுந்த தேர்ச்சியோடும் மனிதத்தோடும் சொல்லப்பட்டவை . ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் போன்ற எழுத்தாளர்கள் தேடிக் கண்டடைய வேண்டியவர்கள். நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் போல நாங்கள் ஆடுகிறோம்,பாடுகிறோம், வாத்தியங்கள் இசைக்கிறோம். நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே எங்கள் காலடியில் உள்ள எங்கள் பூமியை எங்களிடமிருந்து பிடிங்கி விட்டார்கள். சொல்லுங்கள். நான் சொன்னது தவறா?\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862397903211,"sku":"BK6107","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aathi-thivasikal-10004103.jpg?v=1789617248"},{"product_id":"aathi-kudimakkalum-alcoholum","title":"ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்","description":"","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862398132587,"sku":"BK6108","price":239.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aathi-kudimakkalum-alcoholum-10026321.jpg?v=1789617249"},{"product_id":"aayan-milkman","title":"ஆயன்","description":"\u003cp\u003e2018ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதினை வென்ற நாவல். ”நிஜத்திற்கு வெகு நெருக்கமாக அமைந்துள்ளது... அசலானதாகவும், வேடிக்கையானதாகவும், ஸ்தம்பிக்கச்செய்யுமளவிற்கு ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதாகவும் உள்ள இந்நாவல் தனித்துவமானதாகும்.” – தி கார்டியன் “அவல நகைச்சுவையுடனும் பதின்பருவத்தின் சினத்துடனும் பெரியவர்களின் உலகையும் அதன் கொடூர அபத்தங்களையும் நோக்குகிறது ஆயன். சர்வாதிகாரத்தின் பல்வேறு வடிவங்களை – அரசியல், பாலின, இன, மத - எதிர்கொள்ளும் வாழ்வை எழுதிய வகையில் இந்நூல் ஒரு சுவாரஸ்யமான பகடியாகிறது.” – தி நியூ யார்க்கர்\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862398165355,"sku":"BK6109","price":479.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aayan-milkman-10024235.jpg?v=1789617250"},{"product_id":"aayiram-sooriya-peroli","title":"ஆயிரம் சூரியப் பேரொளி","description":"\u003cp\u003eபதினைந்தே வயதினளான மரியம் நஷீதுக்கும் மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையே தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க வாழ்கை பட்டினிக்கும், கொடுங்கோலாட்சிக்கும், அச்சத்துக்கும் இடையில் அலைவுறுவதாக மாறிப் போகிறது ஆனாலும் அன்பு மனிதர்களை எதிர்பாராத வகைகளில் சொற்களில் செயற்கரிய காரியங்களைச் சாதிக்கவைத்து எல்லாத் தடைகளையும் தகர்க்கச்செய்கிறது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862398296427,"sku":"BK6110","price":440.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aayiram-sooriya-peroli-10016093.jpg?v=1789617251"},{"product_id":"aayul","title":"ஆயுள்","description":"\u003cp\u003eபோர், உள்நாட்டுச் சண்டை, இயற்கைப் பேரிடர்கள், அரசியல் குழப்பம் போன்றவற்றால் சீரழிந்த இருபதாம் நூற்றாண்டின் சீன வரலாற்றை எளிய மொழிநடையின் தந்திரத்தோடு விவரிக்கிறது ஆயுள். 1937 முதல் 1976ஆம் ஆண்டு வரையிலான சீனாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டங்களில் ஃபூகுயேவும் அவரின் குடும்பமும் தப்பிப் பிழைக்க நடத்திய வலி நிறைந்த போராட்டத்தோடு பயணிக்கிறது இந்நாவல். இதுபோன்றதொரு பரந்த வரலாற்றுப் பின்னணியில் ஒரு எளிய குடும்பத்தின் அன்றாட வாழ்வியலை நுட்பமாக விவரிப்பதில் வெற்றியும் பெறுகிறது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862398460267,"sku":"BK6111","price":319.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aayul-10027987.png?v=1789617251"},{"product_id":"aayutha-vyaabarathin-arasiyal","title":"ஆயுத வியாபாரத்தின் அரசியல்","description":"\u003cp\u003eநாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா?ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில்மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்டமிக சமீபத்திய, சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில்நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடிக்கண்டடைந்து கொள்ளும் திறனாற்றல் பெற்றவை இவ்வாயுதங்கள். இதுவெல்லாம் யாருக்கு?\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862398558571,"sku":"BK6112","price":72.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aayutha-vyaabarathin-arasiyal-1110138.jpg?v=1789617252"},{"product_id":"accupuncture-sattam-solvathu-enna","title":"அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?","description":"\u003cp\u003eஅக்குபங்சர் பயிற்சி முடித்த அனைவரும் பிராக்டிஸ் செய்யலாமா? ஏதேனும் அமைப்பில் பதிவு பெற வேண்டிய அவசியம் உள்ளதா? அக்குபங்சர் பிராக்டிஸ் செய்யும் அனுமதி பற்றி அரசு ஆணைகள் சொல்வது என்ன? அக்குபங்சரை சிகிச்சை முறையாகப் பயன்படுத்தும் அக்குபங்சரிஸ்டின் சட்ட உரிமைகள் என்ன?\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862398689643,"sku":"BK6113","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/accupuncture-sattam-solvathu-enna-10012578.jpg?v=1789617253"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/Ethir_Veliyeedu_f6189c0b-e8ff-40fb-97ab-17166011886a.jpg?v=1789617581","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/ethir-veliyeedu.oembed?page=17","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}