{"title":"டிஸ்கவரி புக் பேலஸ்","description":null,"products":[{"product_id":"pirabanjchan-thaerntheduththa-sirukathaigal","title":"பிரபஞ்சன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509397867,"sku":"BK3765","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pirabanjchan-thaerntheduththa-sirukathaigal.jpg?v=1788861594"},{"product_id":"maththavilaasap-prakasanam","title":"மத்தவிலாசப் பிரகசனம்","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509430635,"sku":"BK3766","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/maththavilaasap-prakasanam.jpg?v=1788861592"},{"product_id":"nichalanaththin-nigalveli","title":"நிச்சலனத்தின் நிகழ்வெளி","description":"\u003cp\u003eஎழுத்தாளன் காலத்தைப் பதிவு செய்கிறான். புகைப்படக் கலைஞனோ அதே காலத்தை உறைய வைக்கிறான். இருந்தாலும் இருவரும் ஒரே பாதையில் செல்லும் இரு பயணிகள்தான். எழுத்தாளனை அவன் வாழும் காலத்தில் தன் பதிவுகளின் மூலம் உறைய வைத்து அதை சமூகத்துக்குக் கொடுப்பது ஒரு புகைப்படக் கலைஞனின் கடமை. அது எப்படியென்றால், எழுத்தாளன், தான் அறிந்த ஒரு புகைப்படக் கலைஞனையோ வேறு கைவினைக் கலைஞனையோ தன் படைப்பொன்றுக்குள் காட்சிப்படுத்தி அவனை அமரத்துவம் கொண்டவனாக மாற்றுகிறான் அல்லவா... அதே மாதிரிதான்.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509463403,"sku":"BK3767","price":480.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nichalanaththin-nigalveli.jpg?v=1788861593"},{"product_id":"aagol-pettagam","title":"ஆகோள் பெட்டகம்","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509496171,"sku":"BK3768","price":799.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/No-image.jpg?v=1788697825"},{"product_id":"akkaakkal-vaazhntha-veedu","title":"அக்காக்கள் வாழ்ந்த வீடு","description":"\u003cp\u003e\"அக்காக்கள் வாழ்ந்த வீடு\" அனேகமாக படைப்புலகில் அக்காக்களைப் பற்றிய முதல் தொகுப்பு, அதாவது தமிழிலே வந்த முதல் தொகுப்பு இதுவாகத்தான் இருக்கும். இது கோடிட்ட இடத்தை நிரப்புகிற கவிதைகள் அல்ல; படித்துவிட்டு கவிதைக்கு கீழே அடிக்கோடு போடுகிற கவிதைகள்!\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509528939,"sku":"BK3769","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/akkaakkal-vaazhntha-veedu.jpg?v=1788861621"},{"product_id":"naan-vibachchaari-alla","title":"நான் விபச்சாரி அல்ல","description":"\u003cp\u003eமலை உச்சி நோக்கி கஷ்டப்பட்டு ஏறி அடையும் ஓவ்வொருவனும்\/ளும் ஒரு முறையாவது ‘ஆ’ வென தன் கால்களுக்குக் கீழிருக்கும் உலகம் பார்த்து அலறாமல் இருப்பதில்லை. அந்த ‘ஆ’ என்பது பயமில்லை... பதற்றமில்லை... படப்படப்பில்லை. தயக்கமோ தவிப்போயில்லை. அதுவொரு பிரகடனம். இனி மலை உச்சியை அடைவது குறித்து நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த தேவையில்லை. அந்த ஞானத்தை நாங்கள் மீளப் பெற்றுவிட்டோம். அதை எங்கள் பின்வரும் தலைமுறைக்குக் கடத்திக்கொள்வோம் என்ற ஒரு பிரகடனம். மு.து.பிரபாகரனின் இந்த அறிவிப்பு அவரின் காலடிக்குக் கீழிருக்கும் உலகத்திற்கு கேட்கும்.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509561707,"sku":"BK3770","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/naan-vibachchaari-alla.jpg?v=1788861591"},{"product_id":"aiyanaar-aadu","title":"ஐயனார் ஆடு","description":"\u003cp\u003eவெட்டப்பட்ட ஆட்டின் உடல் துடித்ததே என் மனக்கண்ணில் மிதந்தது. மனிதன் சுயநலத்திற்காக வாய் பேச முடியாது, மனிதனுக்கு எவ்வழியிலும் தீங்கு செய்யாத, மனிதனை நம்பியே வாழ்கிற இந்த ஆட்டை வெட்டலாமா? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? தன்னோடு அண்டி வாழ்கிற கோழி, ஆடு, மாடு, பன்றி, ஒட்டகம் முதலிய விலங்குகளை மட்டுமே கடவுள் நம்பிக்கையில் பலி கொடுத்துத் தெய்வங்களைக் ‘கும்பிடும்’ இந்த நம்பிக்கை எவ்வாறு வந்தது? விலங்கு, பறவை என்பவையும் மனிதனைப்போல் உயிரினங்கள்தான். அவற்றைத் தன்வசப்படுத்தி மனிதன் என்ற சக்தியாக இருப்பவன் அதனை அழிப்பது சரியா? உயிரைக் கொல்வது, பலி கொடுப்பது சரியா என்பது பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்கத் தெரியாத ஒரு சிறுவன், அவனுக்காக நேர்த்தி செய்யப்பட்ட ஓர் ஆட்டோ கொண்ட நட்பு, அது பற்றிய அவனுடைய எண்ணங்களே இந்நாவலாக விரிந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509594475,"sku":"BK3771","price":176.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aiyanaar-aadu.jpg?v=1788861620"},{"product_id":"kadalora-gramathin-kathai","title":"கடலோர கிராமத்தின் கதை சொல்லி","description":"\u003cp\u003eமீரான் என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடு உண்டு, மொழி உண்டு, மதம் உண்டு. ஆனால் படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை. பெற்றோர்கள் இல்லை. ஊர் இல்லை, மொழி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை. இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்திதான் அவனை இயங்க வைக்கிறது.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509627243,"sku":"BK3772","price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kadalora-gramathin-kathai.jpg?v=1788861621"},{"product_id":"sidhai-mugam","title":"சிதைமுகம்","description":"\u003cp\u003eதனித்தனியாக வாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து பத்து கதைகளையும் மொத்தமாக வாசிக்கும்போது அம்பிகாவர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும், நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும் மொழிநடையும் குறிப்பிடத் தக்கனவாக இருப்பதை உணர்கிறேன். எப்போதும் ‘நான்’ எனத் தன்மைக் கூற்றில் கதைசொல்லும் அம்பிகாவர்ஷினியின் கதைகள், அவரது சொந்தக் கதைகளோ என்ற தோற்றத்தை உருவாக்கக் கூடியன. தனியாக ஒரு கதையை வாசிக்கும்போது தோன்றும் அந்த உணர்வை, மொத்தமாக வாசிக்கும்போது அவை தகர்த்துவிட்டன. ஒவ்வொரு கதையிலும் கதை சொல்லும் ‘நான்’ வேறொரு நபர் பெரும்பாலும் பெண்ணாக இருக்கிறாள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509660011,"sku":"BK3773","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sidhai-mugam.jpg?v=1788861595"},{"product_id":"100-chirantha-chiraar-kathaikal","title":"100 சிறந்த சிறார் கதைகள்","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509692779,"sku":"BK3774","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/100-chirantha-chiraar-kathaikal.jpg?v=1788861619"},{"product_id":"uvarmanal-sirunerunji","title":"உவர்மணல் சிறுநெருஞ்சி","description":"\u003cp\u003eஇந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர். முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன்றுகூடி இத்தொகுப்பின் கவிதைகளில் வெளிப்பட்டுள்ளது. தோல்விகளையும், கசப்புகளையும், நிராகரிப்புகளையும் ஒரு கோலிக்குண்டைப் போன்று விழுங்கி நிற்கும் சுபாவம் கொண்டவர் தாமரைபாரதி.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509725547,"sku":"BK3775","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/uvarmanal-sirunerunji.jpg?v=1788861561"},{"product_id":"kankoththi-paravai","title":"கண்கொத்திப் பறவை","description":"\u003cp\u003eபடைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான மெல்லிய மனதிற்கு சொந்தக்காரரான சத்ரியனின் மெல்லுணர்வுகள் எளியத் தமிழில் இந்நூலில் பதியப்பட்டுள்ளன. ஒரு முறை இத்தொகுப்பை முழுமையாக வாசிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களால் உணரமுடியாத காதலின் இன்னொரு அனுபவத்தை பெறுவது உறுதி! “மாரி காலத்திற்கு தானியம் சேகரிக்கும் எறும்புகள் போல, மரணகாலத்திற்கு உன் நினவுகளைச் சேகரித்து வைக்கிறேன்” என்னும் கவிதைவருஇகளில், கவிதை மனம் மரணத்தை வெல்கிறது. “உளி வேண்டாம் ஒரு துளி மட்டும் உன்னிடம் தந்தால் போதும் உயிர்ச்சிலை செய்துதரும் அதிசயப் பிறவி நீ” இப்படி தொகுப்பு முழுக்க காதல் சொட்டும் கவிதை வரிகள் அடர்ந்த தொகுப்பின் 128 பக்கங்களும் அழகிய உயர்ரக தாளில் அச்சிடப் பட்டு மிகக் குறைவாக ரூ.90 மட்டுமே விலை வைக்கப்பட்டுள்ளதின் நோக்கம் எல்லோரிடமும் இது சென்று சேர வேண்டும் என்பதற்கே.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509758315,"sku":"BK3776","price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kankoththi-paravai.jpg?v=1788861624"},{"product_id":"ilaiyaraja-isaiyin","title":"இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்","description":"\u003cp\u003eவித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்னாடக இசை வர்ணமெட்டுகளைப் போல மக்களிடம் நாட்டுப்புற இசைவர்ண மெட்டுகள் ஏராளமாக உண்டு. அவைகளைத் தேடித் தேடி கவனம்செய்து மனசில் வாங்கி பதிவுசெய்துகொண்ட ஞானியரில் மகாஞானி நம்முடைய இளையராஜா அவர்கள். நமது மண்ணிலிருந்து முளைத்தவர் அவர் - எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு சினிமா இசையமைப்பாளராகவும் அதற்கு மேலும் ஏதோ ஒருத்தர் இளையராஜா என நான் நினைத்திருந்த எண்ணத்தை பிரேம்-ரமேஷின் கட்டுரை உடைத்தெறிந்தது. இந்தப் புத்தகத்தில் ஏதாவது சிறப்பு இருக்கிறதென்றால் அது பிரேம்\u0026amp;ரமேஷ் இருவரும் உருவாக்கியதனால் வந்ததுதான். எந்த ஒரு திரைப்படத்தின் பெயரையோ, ஒரு பாடலையோ குறிப்பிடாமல் இந்தப் புத்தகம் சிறப்புப் பெறுவதாக நினைக்கிறேன். இளையராஜா என்கிற ஒரு ஆள் இல்லாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும். இந்தக் கேள்வியை பார்க்கிற நண்பர்களிடமெல்லாம் கேட்டுவிட்டேன். பதிலே இல்லை. - இயக்குநர் தங்கர்பச்சான்\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509791083,"sku":"BK3777","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ilaiyaraja-isaiyin.jpg?v=1788861621"},{"product_id":"click","title":"க்ளிக்","description":"\u003cp\u003e'க்ளிக்' எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு புத்தகத்திற்கு 'க்ளிக்' என்ற தலைப்பே வித்தியாசமானதுதானே? 'க்ளிக்' என்ற சப்தம் கேட்பதற்கு முன் ஒரு மனிதன் இரண்டு நொடிகளாவது காமிரா முன் அசையாமல் நிற்கிறானல்லவா? அதுதான் 'க்ளிக்' என்ற சப்தத்தின் மகத்துவம். சீரான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதால், டிஜிட்டல் காமிராவின் தொழில்நுட்பங்களைத் தடங்கல் ஏதுமின்றி வாசிக்க முடிகிறது. நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப செய்திகளை அவற்றிற்கேற்ற சரியான படங்களுடன் படிப்பதற்கு சுவாரஸ்யமான வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் ஆசிரியரின் அனுபவம் தெரிகிறது.மாடர்ன் ஃபோட்டோகிராஃபியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - திரு. பீ. கண்ணன் (ஒளிப்பதிவு இயக்குநர்)\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509823851,"sku":"BK3778","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/click.jpg?v=1788861620"},{"product_id":"aangaram","title":"ஆங்காரம்","description":"\u003cp\u003e‘தோழர்’ என்ற சிறுகதை மூலமாகத்தான் ஏக்நாத் என்கிற பெயரை அறிய நேர்ந்தது. பிறகு ‘கெடை காடு’ என்னும் தன்னுடைய முதல் நாவலில் மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டைச் சுற்றி காண்பித்தவர், இப்போது ‘ஆங்காரம்’ நாவலில் கோயில் கொடையையும், அதன் பின்னணியிலுள்ள கிராமத்து வழக்கங்களையும், வெவ்வேறு மனிதர்களையும் கலப்பில்லாமல் சொல்லியிருக்கிறார். பால்யகாலத்தில் ஆழ்வார்குறிச்சி ஆச்சி, என் கண் முன்னே கறந்த பசும்பாலைக் காய்ச்சி, வேல்சாமி காப்பித்தூள் போட்டு நுரை ததும்ப பெரிய தம்ளரில் காப்பி கொடுப்பாள். இப்போது ஆச்சி இல்லை. ஆழ்வார்குறிச்சியுடனான தொப்புள்கொடி உறவு அறுந்து போய்விட்டது. வேல்சாமி காப்பித்தூள் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஏக்நாத் இனி எழுத இருக்கும் மண் சார்ந்த எழுத்துகளுக்குள் ஆழ்வார்குறிச்சி ஆச்சியையும், அவளைப் போன்ற இன்னும் பல மனுஷிகளையும் பார்த்து விட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏக்நாத்தின் அசலான எழுத்தின் வலிமையினால் வேல்சாமி காப்பியைக் கூட ருசித்து விட முடியும் என்றுதான் தோன்றுகிறது. - எழுத்தாளர் சுகா\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509856619,"sku":"BK3779","price":176.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aangaram.jpg?v=1788861620"},{"product_id":"la-sa-ra-therntheduththa-sirukathaikal","title":"லா.ச.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"\u003cp\u003eஅப்பாவைப் பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டுமெழுதியதையே பலமுறை எழுதத் தயங்கியதே இல்லை. அலுத்துக்கொள்வதும் இல்லை. அப்பாவின் சிறுகதைகள் பல அவரது நினைவின் அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள தன்நினைவை பழக்கிக்கொண்டவர். அவர் கதை எஉத உட்கார்ந்ததில்லை. கதை மனதில் உட்கார ஆரம்பிக்கும் போது எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக் கொள்ளும் போது அதன் உருவத்தை எழுத்தாக்கினார். பெண்குழந்தை தானாகத் தன்பருவம் அடைந்து கன்னியாவதைப் போல அப்பாவின் கதை எவருடைய வற்புறுத்தலுமின்றி தன் பக்குவம் அடைந்து கன்னிமை அடையும். அவரும் தன் கதையின் வேளைக்கு, தருணத்திற்குக் காத்திருந்தார். வற்புறுத்தப்படாத செழுமையில் அவர் கதைகள் இருப்பதால்தான் சிரஞ்சீவத்துவம் பெற்று விளங்குகின்றன. - லா.ச.ரா. சப்தரிஷி\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509889387,"sku":"BK3780","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/la-sa-ra-therntheduththa-sirukathaikal.jpg?v=1788861624"},{"product_id":"aadhura-salai","title":"ஆதுர சாலை","description":"\u003cp\u003eமரணமும் இறப்பும் ஒன்றா, வேறுவேறா? மனம் என்றால் எது? அது உடம்பின் உள்ளே இருக்கிறதா, வெளியிலா? பேய் என்ற ஒன்று எல்லா காலத்திலும் உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே, எப்படி? எல்லா கேள்விகளுக்குமான நியாய எதார்த்த தன்மையுடன் கூடிய பதில் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் தனது இறப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ளமுடியுமா? முடியும் என்கிறது நாவல். அந்த காலத்து சித்தர்கள் அதைச் சாதித்துக்காட்டிய விதமும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. “ஆதுர சாலை” ஒரு மருத்துவநாவல். இந்திய மண்ணின் மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றின் மேனியை அரித்து அழித்துவிட்ட கறையானாக அலோபதி திகழ்வதை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் விவரிக்கிறது.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509922155,"sku":"BK3781","price":336.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aadhura-salai.jpg?v=1788861621"},{"product_id":"aagaaya-gangaiyai-azhaiththu-vanthu","title":"ஆகாய கங்கையை அழைத்து வந்து(கவிதை)","description":"\u003cp\u003eஆகாய கங்கையை அழைத்து வந்து(கவிதை) -நர்மதா :\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509954923,"sku":"BK3782","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aagaaya-gangaiyai-azhaiththu-vanthu.jpg?v=1788861620"},{"product_id":"aagol","title":"ஆகோள்","description":"\u003cp\u003eஒரு பெருங்கதை என்பது பல கிளை கதைகளையும் துணை கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகோள் என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனை கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. ஓர் அத்தியாயத்தை நாம் கவனமின்றி கடந்து சென்றாலும், ஒரு பக்கத்தில் ஒரு வரியை நாம் தவறவிட்டாலும் இந்த கதையின் உள்ளடக்கத்தையும் உண்மைகளையும் நாம் தவற விட வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில், இதுவரை சமகால இலக்கியத்தில் பதிவாகாத ஒரு முழுமுதற் தொழில்நுட்ப உலகத்தைத் தன் கதை வழி வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார் கபிலன்வைரமுத்து.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509987691,"sku":"BK3783","price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aagol.jpg?v=1788861620"},{"product_id":"aalamarathu-paravaigal","title":"ஆலமரத்துப் பறவைகள்","description":"\u003cp\u003eவீடு, நிலம், கிணறு என எல்லாவற்றையும் இழந்து தன்னை மாட்டுத்தொழுவத்தில் வாழும் கேவலத்திற்குத் தள்ளிய கையாலாகாத தன் கணவனை ஏமாற்றுவது தவறில்லை என்று நினைத்துக் கணவனுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள் மைதிலி. செல்வங்கள் அனைத்தையும் மட்டுமில்லாமல் மானம் மரியாதையையும் இழந்து நிற்கும் தங்கச்சாமியோ ஊர்மாட்டை மேய்த்துக் காலந்தள்ளும் நிலைக்கு ஆளாகின்றான். ஊரே அவனை எள்ளி நகையாடுகிறது. இவை அனைத்திலிருந்தும் விடுபடத் தற்கொலை செய்து கொள்வதென முடிவுசெய்து அதிலும் தோல்வி அடைகிறான். இவர்கள் வாழ்வில் வந்த சோதனை போதாதென்று ஊரில் ஒரு கொலை விழுவதோடு ஒரு தெருவே எரிந்து சாம்பலாகி விடுகின்றது. கொலையுண்டவனுக்கும் தங்கச்சாமிக்கும் தொடர்பு இருக்கவே போலிஸ் அவனைச் சந்தேகிக்கின்றது. இதன் ஊடே அம்மணத்திருடன் ஒருவன் இரவில் கோமாளித்தனம் செய்து ஊரையே கலக்குகிறான். கொலை செய்தவன் யார்? பிடிபடுவானா? மைதிலி - தங்கச்சாமி இருவரின் வாழ்வு சீராகுமா? இவற்றை ஆராய்வதோடு மின்சாரம் வருவதற்குமுன் இருந்த கிராமத்து வாழ்க்கையையும் விளக்குகின்றது ஆலமரத்துப் பறவைகள்.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510020459,"sku":"BK3784","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalamarathu-paravaigal.jpg?v=1788861620"},{"product_id":"aandaal-paadalgal","title":"ஆண்டாள் பாடல்கள்-திருப்பாவை, நாச்சியார் திருமொழி","description":"\u003cp\u003eஆண்டாளின் பாடல்கள் இறையனுபவத்தை முன்னிறுத்திச் சமயச் சொல்லாடலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை. கண்ணனை யாரும் வழிபடலாம் என்ற சேதி, பிரதிக்குள் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. கண்ணன் மீதான ஈடுபாடு காரணமாக, அவரது பாடல் வரிகள், மரபிலிருந்து விலகித் தனித்து விளங்குகின்றன. மானுடப் பெண்ணான ஆண்டாளுக்கும் அமானுட ஆற்றலான கண்ணனுக்கும் இடையில் உறவுவேண்டி, ஏக்கமும் பாலியல் விழைவும் செறிந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆண்டாளின் கவிதை மொழியானது, பெண்ணின் அசலான குரலில் வெளிப்பட்டுள்ளது. ‘கீசு கீசு’ என்ற ஆனைச்சாத்தன் பறவையின் ஒலியும், தயிர் கடையும் மத்தின் ஓசையும் என விரியும் ஆண்டாளின் உலகம் புனைவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடியது.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510053227,"sku":"BK3785","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aandaal-paadalgal.jpg?v=1788861621"},{"product_id":"aaranyam","title":"ஆரண்யம்","description":"\u003cp\u003eசுனைகளும் மரங்களும் பூச்சிகளும் விலங்குகளும் கற்பனை செய்ய இயலாத வண்ணங்களில் பறவைகளும் பூக்களுமாய் இயற்கையால் அலங்கரிக்கப்பட்டது மருத நிலம். அதன் அழகைப் பாடும் பேரியாழாகவும் இழந்துபட்ட நிலத்தை மீட்டெடுக்க அதிரும் துந்துபியாகவும் ஒரு சேர ஒலிக்கிறது ஆரண்யம்.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510085995,"sku":"BK3786","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aaranyam.jpg?v=1788861620"},{"product_id":"aariya-dhiviya-thesa-yathiraiyin-sarithiram","title":"ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்","description":"\u003cp\u003eபத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய அரசியல் சூழல், சமூக நிலை, சமயங்களின் ஆதிக்கம் குறித்து அக்கறை கொண்டிருந்த சே.ப.நரசிம்மலு நாயுடு (1854 - 1922) பன்முக ஆளுமையாளர். பிரம்ம சமாஜ கொள்கையில் ஈடுபாடுடையவர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, தொழில் முனைவோர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என, அவருடைய செயல்பாடுகள் தனித்துவமானவை. காங்கிரஸ் சபையின் முதல் மற்றும் இரண்டாவது மாநாடுகளில் தமிழகத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றிருக்கிறார். வடஇந்தியாவில் இருக்கிற புண்ணியத்தலங்களுக்கும் வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுக்கும் பயணம் சென்றவர், தனது அனுபவங்களைத் தொகுத்து ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் என்ற பெயரில் 1889-இல் நூலாக வெளியிட்டார். அது, தமிழில் வெளியான முதல் பயண நூல் என்றவகையில், சே.ப.நரசிம்மலு நாயுடு 'தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அன்றைய காலகட்டத்தில், இந்தியா பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றமாக விரிந்துள்ள இந்நூல் சமூகப் பதிவு; வரலாற்று ஆவணம்.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510151531,"sku":"BK3787","price":480.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aariya-dhiviya-thesa-yathiraiyin-sarithiram.jpg?v=1788861621"},{"product_id":"aathimangalathu-viseshangal","title":"ஆதிமங்கலத்து விசேஷங்கள்","description":"\u003cp\u003eபவுடர் பூசவைத்து, தலையைத் திருத்தச் சொல்லி, பத்து நிமிடம் வேலை வாங்கிவிட்டு, படத்தை மட்டும் ஒரே நொடியில் எடுத்துவிட்டான். நீலப் படுதாவின்முன் நிற்கவைத்து, காமிராவின் கருப்பு மூடியைக் கழற்றி மாட்டினான். அதன்பிறகும் சிலைகளைப்போல புன்னகைத்து நின்றிருந்த பெண்களைப் பார்த்து, “அவ்வளவுதான்!” என்று சொன்னான். ருவருக்கும் ஏமாற்றமாய் இருந்தது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு, “படத்தைக் கொடுளிணியா!” என்றனர். திருவிழாவை சுத்திப் பாத்துட்டு அப்புறமா வாங்க, கழுவித் தாரேன்.” நாங்க உஷீமீளூர்தான். வீட்லயே போளிணிக் கழுவிக்கறோம்... நீ இப்பவே குடு!” ுளியும் தேங்காளிணி மஞ்சியும் கொண்டு காலம்காலமாகப் பாத்திரம் துலக்கிய, ரேகை மங்கிய கைகளோடு அந்தப் பெண்கள் திடமாகப் பேசினார்கள். போட்டோகிராபரோ, படம் கழுவுவது என்பது பாத்திரம் கழுவுவதுபோன்ற விவகாரமல்ல என்று விளக்கினான். முக்கியமாக, பாத்திரங்கள் வெளிச்சத்தில் கழுவப்படுகின்றன என்றும் படங்கள் இருட்டில் கழுவப்படுகின்றன என்றும் வித்தியாசத்தைத் தெரிவித்தான்.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510184299,"sku":"BK3788","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aathimangalathu-viseshangal.jpg?v=1788861620"},{"product_id":"aatkolli-discovery-book-palace","title":"ஆட்கொல்லி","description":"\u003cp\u003eஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிக்கைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நன்பர் டி.என்.விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக வாரவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510249835,"sku":"BK3789","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aatkolli-discovery-book-palace.jpg?v=1788861620"},{"product_id":"abaaya-pettai","title":"அபாயப் பேட்டை","description":"\u003cp\u003eசுட்டி விகடனில் வெளியாகி லட்சக்கணக்கான சிறுவர்களை விந்தை உலகத்திற்குள் அழைத்துச் சென்ற கதை\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510282603,"sku":"BK3790","price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/abaaya-pettai.jpg?v=1788861620"},{"product_id":"abitha-discovery-book-palace","title":"அபிதா","description":"\u003cp\u003eபுது இடத்தைக் காணும் வியப்பைக் காட்டிலும் பழைய இடம், பழகின இடம் திரும்பும் உள்ளக் கிளர்ச்சி தாங்க முடியவில்லை. தேங்கிவிட்ட நினைவுகள் கொந்தளிப்பு கண்டு உணர்ச்சிகள் ஒருங்கே அழுத்தும் நிலை முற்றிலும் இன்பம் என்று சொல்வத்ற்கில்லை. திரும்பியே வந்திருக்க வேண்டாமோ? என்று கூட சித்தம் சலிக்கிறது. ஆயினும் ஒரு எண்ணம். ஒரே எண்ணம் – நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்தது ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றீக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலஒயாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதற்கில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே. - நாவலிலிருந்து...\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510348139,"sku":"BK3791","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/abitha-discovery-book-palace.jpg?v=1788861620"},{"product_id":"adal-paadal-cinema","title":"ஆடல் பாடல் சினிமா","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510413675,"sku":"BK3792","price":448.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adal-paadal-cinema.jpg?v=1788861621"},{"product_id":"adayarkarai","title":"அடையாற்றுக்கரை","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510479211,"sku":"BK3793","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adayarkarai.jpg?v=1788861620"},{"product_id":"adam-seyya-virumbu","title":"அடம் செய்ய விரும்பு","description":"\u003cp\u003eகாளிக்கு ஒரு கடிதம் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்னில் இவையாதொன்றும் குன்றும் முன் கொன்று விடு என்னை.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510544747,"sku":"BK3794","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adam-seyya-virumbu.jpg?v=1788861620"},{"product_id":"adhar-screen-play","title":"ஆதார் (Screen Play)","description":"\u003cp\u003eதிரைப்படத்தை மட்டுமே என் ஜீவ மூச்சாகக் கொண்டு என் கலைப்பயணத்தில் கால்நடையாகவே பயணித்து வரும் இத்தனை ஆண்டுகளின் மைல் கல்லாக, ஆதார் என் அடையாளமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தளத்திலும், ஒவ்வொரு பரிணாமத்தோடும் நான் உருவாக்கித் தந்த திண்டுக்கல் சாரதி (திரைக்கதை, வசனம்), அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ஆகிய திரைப்படங்கள் வெகுஜன பார்வைக் கொண்டவை. ஒரு மாற்றுத் திரைப்படத்திற்கான ஒரு புயல் என்னுள் மையம் கொண்டபோது உருவான ஒரு திரைப்படம்தான் ஆதார்!\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510577515,"sku":"BK3795","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/adhar-screen-play.jpg?v=1788861620"},{"product_id":"ai-chinimaa","title":"Ai சினிமா","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510610283,"sku":"BK3796","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ai-chinimaa.jpg?v=1788861620"},{"product_id":"ainthaviththaan","title":"ஐந்தவித்தான்","description":"\u003cp\u003eமேலும் சொல்கிறேன் கேள், உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனி நாடு பூமியில் தானே மலரும். அது அடுத்த ஆண்டில் மலரலாம், அடுத்த நூற்றாண்டிற்கும் தள்ளிப்போகலாம். தமிழர்கள் செய்யவேண்டியது, நாக்கை மடித்து ழகரத்தை உச்சரிக்க முயல்வதே. உனக்கு ஒரு மொழியியல் ரகசியத்தைச் சொல்கிறேன், உன் மாணவர்களிடம் அதைப் பரப்பு. ழகர உச்சரிப்பை மையமாகக்கொண்டு பிரெஞ்சு மொழி இயங்குகிறது. அதனால்தான் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் பாலுறவு நாட்டம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர். அதேபோல் தமிழ் மொழியும் ழகரத்தை மையமாகக் கொண்டதே. அதனால்தான் திருக்குறள் பாலியலை ஓர் அறமாகப் போதிக்கிறது. ழகரத்தை ஒழுங்காக உச்சரிக்கும் ஆணும் பெண்ணும் உடலுறவில் செம்மையாகச் சிறந்து விளங்குவர். ழகரத்தைச் சரியாக உச்சரிக்கத் தெரியாதத் தமிழ்ப் பையனைக் கூடும் பெண் உச்சத்தைத் தொடுவது முயற்கொம்பாம். - ரமேஷ் பிரேதன்\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510643051,"sku":"BK3797","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ainthaviththaan.jpg?v=1788861620"},{"product_id":"alapparai","title":"அலப்பறை","description":"\u003cp\u003eஒத்தல்லோவில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் நட்பையும் துரோகத்தையும் சொல்லிவிட்டாலும், இந்த ‘அலப்பறை’ களத்தில் எக்கணத்தில் துரோகத்தின் முதற்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும், எல்லா துரோகங்களிலும் பலியாகி நிற்கும் ஒரு தூய காதலையும் மதுரை நகரின் வீதிகளில், வயற்காட்டில் சுற்றும் பாண்டியும், வீரணனும் மாரியும் ஆம்ரினும் உணர்த்துவார்கள். அத்தனை சரியான காரணம் ஒரு துரோகத்திற்கு உண்டு என்றாலும் துரோகம் என்பதோ அமிலம், செய்தவரின் கரங்களையும் பொசுக்கும் திராவகம்.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510675819,"sku":"BK3798","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/alapparai.jpg?v=1788861619"},{"product_id":"ambaraathooni","title":"அம்பறாத்தூணி","description":"\u003cp\u003eஅம்பறாத்தூணி - சிறுகதைகள் 1750களில் மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. அதில் சங்கரன் கோயில் சன்னதியில் மன்னர் தெய்வத்தை வழிபடும் ஒரு காட்சி. மன்னர் பாடுவதாக ஒரு பாடல் வேண்டும். அதை கற்பனையாக எழுதுவதை விட மாவீரர் பூலித்தேவனே பாடியதாக வரலாற்றில் ஏதேனும் பாடல் உண்டா என்று ஆய்வாளர்களைத் தொடர்புகொண்டு பல்வேறு தரவுகளில் தேடினேன். அப்படி ஒரு பாடல் கிடைத்தது. அவரே பாடிய அந்தப் பாடலைத்தான் அந்தச் சிறுகதையில் பயன்படுத்தியிருக்கிறேன். வேற்றுமொழி கார்டூன் தொடர்களுக்கு தமிழில் குரல் கொடுப்பவர்களுக்கான குரல் தேர்வுக்கு என்னென்ன தேர்வுமுறைகள் கையாளப்படுகின்றன என தேடியபோது மும்பையில் நடந்த ஒரு வினோதமான தேர்வுமுறை என்னை ஈர்த்தது. அது ஒரு சிறுகதையாகியிருக்கிறது. 1876ஆம் ஆண்டு சென்னை மாகாண பெரும் பஞ்சத்தின் போது நிகழும் என் சிறுகதையில் அந்த பஞ்சத்தை அன்று புகைப்படம் எடுத்த பிரிட்டிஷ் ராணுவ புகைப்படக்கலைஞர் வாலஸ் ஹூப்பர் என்பவரை மனதில் கொண்டு வில்லியம் ஹூப்பர் என்ற கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறேன். ஆழ்கடல் சுரங்கம் குறித்த ஒரு சிறுகதைக்காகக் கடலில் என்னென்ன எந்திரங்கள் இயங்குகின்றன என்பதை அறியவும், சர்வதேச கடல் படுகை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளவும் மேற்கொண்ட ஆய்வு எனக்கு புதிய உலகங்களை அறிமுகம் செய்தது. 1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் புரட்சியின் பின்னணியில் நிகழும் ஒரு சிறுகதைக்கு கதையின் களத்தை நேரில் கண்டுணர வேலூரில் மூன்று நாட்கள் தங்கியிருந்ததும் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் புதல்வியின் பெயரைக் கண்டறிந்து அதை உறுதிப்படுத்தியதும் நுட்பமானப் பயணமாக இருந்தது. இன்னும் பல தேடல்கள். இந்த ஆய்வுகளுக்கு எனக்கு உதவிய பேராசிரியர்களுக்கும் அறிஞர்களுக்கும் என் நன்றிகள். வானத்தையே அள்ளிக்கொள்ள நினைத்து மழையில் நனைய ஓடும் குழந்தை ஒரு சில துளிகளை மட்டும் உள்ளங்கையில் ஏந்தி வருவது போல் ஒரு சில தகவல்களை மட்டுமே கதைகளுக்குள் பயன்படுத்தியிருக்கிறேன். அம்பறாத்தூணியில் நான் உருவாக்கியிருக்கும் சில மனிதர்களுக்கு ஒரே கதைக்குள் அடங்கியிருக்கும் ஒழுக்கம் கிடையாது. ஒரு கதையில் இருப்பவர்கள் இன்னொரு கதையிலும் இருப்பார்கள். அனைவரும் மனதிற்குரியவர்கள். மறுவாசிப்புக்குரியவர்கள். கபிலன்வைரமுத்து\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510708587,"sku":"BK3799","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ambaraathooni.jpg?v=1788861620"},{"product_id":"ammaachchi-poetry","title":"அம்மாச்சி (கவிதை)","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510741355,"sku":"BK3800","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ammaachchi-poetry.jpg?v=1788861621"},{"product_id":"amman-maram","title":"அம்மன் மரம்","description":"\u003cp\u003eஎன்னால் முன்புபோல நடமாடித் திரிய முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், என்னால் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறது, எனது கண்களுக்கு முன் நடக்காதவற்றையுங்கூட. என்னால் எல்லாவற்றையும் கேட்க முடிகிறது, என்னைச் சுற்றியுள்ளவர்களது உதடுகளிலிருந்து உதிராத வார்த்தைகளையுங்கூட... -நாவலிலிருந்து-\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510774123,"sku":"BK3801","price":256.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/amman-maram.jpg?v=1788861621"},{"product_id":"andhak-kadaisi-naatkal","title":"அந்தக் கடைசி நாட்கள்","description":"\u003cp\u003eபிரபலமான நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்த கவிஞர் புவியரசு, அவ்வப்போது வெளியாகும் பிரபலமான நூல்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வந்திருக்கிறார். அந்தவகையில் கவிஞர் புவியரசு, பல்வேறு நூல்களைப் பற்றி எழுதும்போது வாசகர்களையும் ஒரு கதாபாத்திரம்போல அரவணைத்துக்கொள்கிறார். குறிப்பாக, ஞானதாம் கொண்டவர்களின் சிந்தனைக் களஞ்சியமாக மிகெய்ல் நைமி எழுதிய ‘மிர்தாவின் புத்தகம்’ என்ற நூலில் எழுதப்பட்ட சிக்கலான ஆங்கிலப் பதங்களுக்கு, தான் வழங்கிய இலகுவான மொழிபெயர்ப்பை பலரும் பாராட்டியதை நினைவுகூர்கிறார். இப்படி, தான் படித்த பல புத்தகங்களையும் கட்டுரைகளாக சுவைபட இந்நூலில் கொடுத்திருக்கிறார் கவிஞர் புவியரசு.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823510937963,"sku":"BK3802","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/andhak-kadaisi-naatkal.jpg?v=1788861620"},{"product_id":"angeegarikkappadatha-kanavin-vali","title":"அங்கீகரிக்கப்படாத கனவின் வலி","description":"\u003cp\u003eநாம் வாழும் காலம், வரலாற்றின் சுழற்சியில், ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியிருக்கிறது. சமூக வாழ்வின் பல துறைகளிலும் அர்ப்பணிப்புகளும் அறங்களும் கேலிப் பொருள்களாகிவிட்டன. வசதிகளின் பெருக்கத்தையே வாழ்வின் மேன்மையாகவும் வெற்றியாகவும் கருதும் மனோபாவம் நம்மைப் பீடித்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சிறந்த அம்சத்தை வெளிப்படுத்தாத பட்சத்தில் இந்த உலகம் இதை விடவும் மோசமான கட்டத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டது ஒன்றுதான்: எந்தவொரு காத்திரமான செயலையும் தொடர்ந்து நம்பிக்கையுடன் மேற்கொண்டு வந்தால், அது தன்னளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கலை நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் என்றான வாழ்வியக்கம் என்பது, பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, தருமு சிவராம் (பிரமிள்) போன்ற நம் லட்சிய முன்னேடிகள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் பாதைதான்.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511003499,"sku":"BK3804","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/angeegarikkappadatha-kanavin-vali.jpg?v=1788861620"},{"product_id":"angor-wat","title":"அங்கோர் வாட்","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511036267,"sku":"BK3805","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/angor-wat.jpg?v=1788861620"},{"product_id":"angaadi-theru-thiraikathai","title":"அங்காடித் தெரு (Screenplay)","description":"\u003cp\u003eஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல், வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதன்மையானது அங்காடி தெரு மட்டுமே. இத்திரைப்படத்தின் திரைக்கதை புத்தகமாக வருவதன் மூலம் இதிபோன்ற இன்னும் பல படைப்புகள் வெளிவருவதற்கு உதவியாக இருக்கும். திரைப்படத்துறையை நோக்கிவரும் ஒவ்வொருவரின் கைகளிலும் முதமுதலில் கொடுக்க வேண்டிய புத்தகமாகவும் இருக்க வெண்டும் என்று நம்புகிறோம். -மு.வேடியப்பன்\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511069035,"sku":"BK3806","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/angaadi-theru-thiraikathai.jpg?v=1788861621"},{"product_id":"anju-second-attagasam","title":"அஞ்சு செகண்ட் அட்டகாசம்","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511101803,"sku":"BK3807","price":176.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/anju-second-attagasam.jpg?v=1788861561"},{"product_id":"antha-vattathai-yaravathu-samathanappaduthungal","title":"அந்த வட்டத்தை யாராவது சமாதானப்படுத்துங்கள்","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511134571,"sku":"BK3808","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/antha-vattathai-yaravathu-samathanappaduthungal.jpg?v=1788861619"},{"product_id":"arivu-patriya-tamizharin-arivu","title":"அறிவு பற்றிய தமிழரின் அறிவு","description":"\u003cp\u003eஅறிவுத்தோற்றவியல் (Epistemology) குறித்துத் தமிழில் விரிவாக ஆய்வுகள் இல்லை. தோழர் சி.மகேந்திரன் தமிழர்களின் அறிவுகுறித்த புரிதல், சிந்தனைகள், கருத்துகள் என்று பல்துறை சார்ந்த அறிவுருவாக்கம் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் வழியாகவே அறிவு உருவாக்கப்பட்டது என்பதை நூலாசிரியர் மறுக்கிறார். தமிழ் மரபிலிருந்து, அறிவுத்தோற்றவியலை விளக்க முற்படுகிறார். இது தனித்துவமிக்க வழிகாட்டுதல் என்பேன். பல நூற்றாண்டுகளின் தமிழரின் அறிவுத்தொடர்ச்சி இன்னமும் அறியப்படாமலே இருக்கிறது என ஆதங்கப்படும் இவர், தனது ஆய்வுநூலின் வழியே அக்குறையைத் தீர்க்க முயன்றிருக்கிறார். - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511167339,"sku":"BK3809","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/arivu-patriya-tamizharin-arivu.jpg?v=1788861620"},{"product_id":"ariyanachi","title":"அரியநாச்சி","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511200107,"sku":"BK3810","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ariyanachi.jpg?v=1788861621"},{"product_id":"asaiyum-padam","title":"அசையும் படம்","description":"\u003cp\u003eகுறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு குறைந்த முதலீட்டில்கூட ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா என்று பலர் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையை நோக்கி வரும் முதலீட்டாளர்கள் நாள்தோறும் அதிகரித்துவருகிறார்கள். இது ஒரு நல்ல ஆரோக்யமான சூழல்தான் என்றாலும், படங்கள் வெளிவந்த அளவுக்கு குறைந்த முதலீட்டில் எப்படி திரைப்படங்களை வெற்றிகரமாக எடுத்து முடிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப புத்தகங்கள் வெளியாவதில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமாக உள்ளது. சிறு முதலீட்டுப் படங்களில் முக்கிய பங்கு வகிப்பது, மலிவுவிலையில் கிடைக்கக் கூடிய டிஜிட்டல் கேமிராக்கள் மட்டுமே. அப்படிப்பட்ட கேமராக்கடன் A to Z அலசுவதோடு. இதுபோன்ற காலகட்டத்தில், அதற்காக கூடுதல் வழிகாட்டியும், நம்பிக்கையையும் அளிப்பது போன்று வெளிவருகிறது “அசையும் படம்”.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511232875,"sku":"BK3811","price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/asaiyum-padam.jpg?v=1788861560"},{"product_id":"athaninum-inithu","title":"அதனினும் இனிது","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511265643,"sku":"BK3812","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/athaninum-inithu.jpg?v=1788861619"},{"product_id":"athirubanum-cindrellavum","title":"அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும்","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511298411,"sku":"BK3813","price":56.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/athirubanum-cindrellavum.jpg?v=1788861620"},{"product_id":"aththimarach-chaalai","title":"அத்திமரச் சாலை","description":"\u003cp\u003eபொழுது மேற்கே சரிந்துகொண்டிருந்தது. மஞ்சள் வெயில் ஊர் மேல் படரத் தொடங்கிற்று. நான் பள்ளிக்கூடம் விட்டு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். வீதி வெறிச்சிட்டுக் கிடந்தது. மேற்குப் பார்த்த நடைகள்மீது வெயில் ஏறித் தகித்தது. பெரும்பாலும் வீடுகள் பூட்டியே கிடந்தன. தற்போது வயலில் நடவு நடைபெறும் காலம். இருட்டிய பின்னர்தான் ஜனங்கள் வீடு திரும்புவார்கள். எங்கும் மனித முகமே தென்படவில்லை. வளவுகள் பெரும் நிசப்தம் பூண்டிருந்தன. மின்சாரக் கம்பிகளில் மணிப்புறாக்கள் வரிசையாக அமர்ந்திருந்தன.\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511331179,"sku":"BK3814","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aththimarach-chaalai.jpg?v=1788861620"},{"product_id":"avanum-avalum","title":"அவனும் அவளும்","description":"","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823511363947,"sku":"BK3815","price":176.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/avanum-avalum.jpg?v=1788861621"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/Discovery_Book_Palace_logo.jpg?v=1788847092","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/discovery-book-palace.oembed","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}